திருஞான சம்மந்தரின் மாலை மாற்று (Palindrome) திருப்பதிகம் பாடல்கள் மற்றும் அதன் பொருள்
நான்காவது பாடல்:
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ
நீவா = நீங்குதல் இல்லாத வாயா = மெய்ப்பொருளானவனே கா = காவுகின்ற யாழீ = யாழையுடையவனே வான் நோ = கொடிதாகிய பிறவித்துன்பம் வாராமே = எங்களை அடையாமல் கா வா = வந்து காப்பாற்றுக வான் நோவா வா = தேவர்கள் வருந்தாதபடி மேரா = மேரு மலையை வில்லாக ஏந்தியவனே காழீயா = சீர்காழி இறைவனே காயா = ஆகாய வடிவினனே வாவாநீ = நீ விரைந்து வருவாயாக