Skip to content

Instantly share code, notes, and snippets.

@akoul889
Created February 7, 2020 06:25
Show Gist options
  • Save akoul889/322af1c86d7c483df8707aa310709e95 to your computer and use it in GitHub Desktop.
Save akoul889/322af1c86d7c483df8707aa310709e95 to your computer and use it in GitHub Desktop.
<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<rss xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:media="http://search.yahoo.com/mrss/" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" version="2.0">
<channel>
<title>Latest News</title>
<description/>
<atom:link href="https://www.vikatan.com/api/v1/collections/latest-news.rss?format=ucweb&time-period=last-24-hours" rel="self" type="application/rss+xml"/>
<link>https://www.vikatan.com</link>
<language>ta</language>
<lastBuildDate>Fri, 07 Feb 2020 06:19:29 +0000</lastBuildDate>
<item>
<title>
`துரைமுருகனால் மீண்டு வந்த தேவராஜி!’- வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க-வில் என்ன நடக்கிறது?
</title>
<link>
https://www.vikatan.com/news/tamilnadu/devaraji-appointed-as-new-vellore-west-dmk-representative
</link>
<comments>
https://www.vikatan.com/news/tamilnadu/devaraji-appointed-as-new-vellore-west-dmk-representative#comments
</comments>
<guid isPermaLink="false">2cec36a4-28a8-49a6-b245-a738d0f255ad</guid>
<pubDate>Fri, 07 Feb 2020 05:48:56 +0000</pubDate>
<atom:updated>2020-02-07T05:48:56.974Z</atom:updated>
<atom:author>
<atom:name>லோகேஸ்வரன்.கோ</atom:name>
<atom:uri>/api/author/616141</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>ADMK,stalin,DMK,k c veeramani,duraimurugan</media:keywords>
<media:content height="462" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/4564ec08-6756-4269-95dc-ecdd40cbcf29/WhatsApp_Image_2020_02_06_at_6_32_34_PM.jpeg" width="462">
<media:title type="html">
<![CDATA[ வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தேவராஜி ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/4564ec08-6756-4269-95dc-ecdd40cbcf29/WhatsApp_Image_2020_02_06_at_6_32_34_PM.jpeg?w=280" width="280"/>
<category>Tamilnadu</category>
<content:encoded>
<![CDATA[
<p>ஒருங்கிணைந்த வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக இருந்த முத்தமிழ்செல்வி திடீரென அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் செக்குமேடு தேவராஜியை நியமித்துள்ளது தி.மு.க தலைமை. </p><p>தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள செக்குமேடு கிராமம்தான் தேவராஜியின் சொந்த ஊர். தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவர். தேவராஜி வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் துரைமுருகன் கட்டாயமாகக் கலந்துகொள்வார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/90997fad-bc0b-4321-958d-3435e6093cab/Duraimurugan__1___1_.JPG" /><figcaption>துரைமுருகன்</figcaption></figure><p>இரண்டு பேரும் ஒரே சமூகம் என்பதும் நெருக்கத்துக்கு முக்கிய காரணம். வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளராக ஏற்கெனவே பதவிவகித்தவர் தேவராஜி. அதற்குமுன் வாணியம்பாடி பகுதியின் ஒன்றியச் செயலாளராக இருந்தபோது தேவராஜிக்கும் நகரச் செயலாளராக இருந்த சிவாஜி கணேசன் என்பவருக்கும் அதிகாரம் செலுத்துவதில் மோதல் இருந்தது. எதிரும் புதிருமாக இரண்டு பேரும் தங்கள் ஆதரவாளர்களுடன் வாணியம்பாடியில் வலம் வந்தனர்.</p><p>வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற தேவராஜிக்கும், சிவாஜி கணேசனுக்கும் மறைமுகமாகப் பெரிய போரே நடந்தது. ஆனால், வேலூர் மேற்குப் பகுதியில் குறிப்பிட்ட சமூக மக்கள் அதிகமாக இருப்பதால், வாக்கு வங்கியை மையப்படுத்தி அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமிக்க தி.மு.க தலைமை முடிவுசெய்தது. நகரச் செயலாளரான சிவாஜி கணேசன் வேறு சமூகம் என்பதால் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த தேவராஜி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/76cbd953-cc08-4c4d-890c-1ada696810ac/GCS_8834_copy.jpg" /><figcaption>ஸ்டாலின்</figcaption></figure><p>இதன் பின்னணியில் அப்போதும் துரைமுருகன் இருந்தார். அதன்பிறகு, அரசியல் எதிரியான சிவாஜி கணேசனுடன் நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக்கொண்டார் தேவராஜி. இந்தநிலையில், 2015-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிவாஜி கணேசன் உயிரிழந்தார். சிவாஜி கணேசன் வகித்துவந்த வாணியம்பாடி நகரச் செயலாளர் பதவியை அவரின் மகன் சாரதிகுமாருக்கு வழங்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், சாரதிகுமார் `வயதில் இளையவராக இருக்கிறார்’ என்று காரணம் கூறி பதவி மறுக்கப்பட்டது.</p><p>மாவட்டச் செயலாளர் தேவராஜிக்கு நெருக்கமாக இருந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நகரப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தந்தை மீதான பழைய விரோதத்தில்தான் தனக்குப் பதவி மறுக்கப்பட்டதாக நினைத்து தேவராஜி மீது கோபம்கொண்டிருந்தார் சிவாஜி கணேசனின் மகன் சாரதிகுமார். இந்தநிலையில், 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பம் தெரிவித்து தலைமையிடம் `சீட்’ கேட்டார் தேவராஜி. ஆனால், கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக்கிற்கு வாணியம்பாடி தொகுதி ஒதுக்கப்பட்டது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/7254b80d-3be0-491f-abc4-12bcec63e6eb/FB_IMG_1580986751562.jpg" /><figcaption>தி.மு.க அறிவிப்பு</figcaption></figure><p>அதிருப்தியில் இருந்த தேவராஜி, கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கு எதிராக வெளிப்படையாகப் போராட்டம் நடத்தினார். இதனால், அ.தி.மு.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட நிலோஃபர் கபில் வெற்றிபெற்று அமைச்சரவையில் இடம்பிடித்தார். `கூட்டணி வேட்பாளருக்கு தி.மு.க ஒத்துழைப்பு தரவில்லை’ என்று நேரடியாகப் புகார் எழுந்ததால் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தேவராஜி அதிரடியாக நீக்கப்பட்டார். அந்தப் பொறுப்பில், மீண்டும் அதே சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகியை நியமிக்க தி.மு.க தலைமை விரும்பியது. நான்கு நிர்வாகிகளின் பெயர் பட்டியலை துரைமுருகன் பரிசீலனை செய்தார்.</p><p>இதில், ஜோலார்பேட்டை நகரச் செயலாளராக இருந்த முத்தமிழ்செல்வி என்பவர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அ.தி.மு.க அமைச்சர் கே.சி.வீரமணியின் சொந்தத் தொகுதி ஜோலார்பேட்டை என்பதால் அவரை எதிர்த்து அரசியல் செய்வதில் முத்தமிழ்செல்விக்கு தடுமாற்றம் இருந்தது. ஆனாலும், அச்சமின்றி கட்சிப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவந்தார். இந்தநிலையில், முத்தமிழ்செல்வியின் கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/09395d0a-b924-4afb-8e50-a2dd60e87df6/vikatan_2019_05_91f94e65_7c5e_421b_a8b0_d1c1cb94a28c_150733_thumb.jpg" /><figcaption>அமைச்சர் கே.சி.வீரமணி</figcaption></figure><p>இதனால், கட்சிப் பணிகளில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. `மாவட்ட பொறுப்பாளரை மாற்ற வேண்டும்' என ஸ்டாலினிடம் வலியுறுத்தினார் துரைமுருகன். அதன்படியே, தேவராஜி மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளார். </p><p>``இத்தனை ஆண்டுக்காலம் பொறுப்பில் இல்லாதபோதும் அவர் தொடர்ந்து கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்துகொண்டிருந்தார். மோசமான அரசியல் சூழ்நிலையில், அமைச்சர் கே.சி.வீரமணியை எதிர்த்து அரசியல் செய்ய ஒருங்கிணைந்த வேலூர் மேற்கு மாவட்டத்தில் சரியான நபரும் தேவராஜிதான். இனிமேல், வேலூர் மேற்கு மாவட்ட அரசியலும் சூடு பிடிக்கும்’’ என்கின்றனர். </p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`முதலில் அலர்ட் செய்த ஹீரோ; கண்டித்த போலீஸ்!’ - கொரோனா எச்சரிக்கை விடுத்த மருத்துவர் மரணம்
</title>
<link>
https://www.vikatan.com/news/international/doctor-wenliang-li-who-1st-warned-about-corona-virus-dies-due-to-virus-epidemic
</link>
<comments>
https://www.vikatan.com/news/international/doctor-wenliang-li-who-1st-warned-about-corona-virus-dies-due-to-virus-epidemic#comments
</comments>
<guid isPermaLink="false">501cfe00-7d1d-4bb6-9fea-986447ab12f8</guid>
<pubDate>Fri, 07 Feb 2020 05:09:36 +0000</pubDate>
<atom:updated>2020-02-07T05:09:36.569Z</atom:updated>
<atom:author>
<atom:name>சத்யா கோபாலன்</atom:name>
<atom:uri>/api/author/616091</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>china,death,doctor,Coronavirus</media:keywords>
<media:content height="289" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/0d07a253-db92-444c-8e42-92d0808fced2/BB_5.jpg" width="497">
<media:title type="html">
<![CDATA[ மருத்துவர் - கொரோனா ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/0d07a253-db92-444c-8e42-92d0808fced2/BB_5.jpg?w=280" width="280"/>
<category>international</category>
<content:encoded>
<![CDATA[
<p>சீனாவின் ஹுபே மாகாணத்தின் வுகான் நகரில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்து பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் சீனாவில் மட்டும் இதுவரை 560 பேர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/fb340ab2-5f91-439a-ad4a-9be40272be55/BB_3.jpg" /><figcaption>கொரோனா வைரஸ்</figcaption></figure><p>கடந்த ஒரு மாதமாகச் சீனாவைப் புரட்டிப் போட்டுள்ள இந்த வைரஸ் பற்றி டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார் ஹுபே மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் லீ வென்லியாங் (Li Wenliang). இவர் வுகான் மத்திய மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார். சரியாக டிசம்பர் 30-ம் தேதி ஒரு நோயாளியைச் சோதனை செய்த லீ, அவருக்கு வைரஸ் தாக்கம் இருந்ததைக் கண்டறிந்து தன் சக மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.</p><p>முதலில் அது சார்ஸ் வைரஸாக இருக்கும் எனச் சந்தேகித்த லீ, தன்னுடன் பணிபுரியும் மருத்துவர்களை மாஸ்க் அணிந்துகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தன் சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். ஆனால் அப்போது இவரது பேச்சை மதிக்காகச் சீன காவலர்கள், `இனிமேல் இது போன்ற வதந்தி பரவும் விஷயங்கள் பற்றிப் பேசக் கூடாது' என்று கண்டித்து அவரிடம் இருந்து ஒரு கடிதம் வாங்கியுள்ளனர். அதற்குப் பிறகு ஜனவரி மாதத்தின் பாதியில்தான் அங்கு வைரஸ் தாக்கம் அதிகரித்து அது <a href="https://www.vikatan.com/health/international/how-coronovirus-is-threatening-the-mankind">கொரோனா வைரஸ்</a> என்று சீன அரசே அதிகாரபூர்வமாக அறிவித்தது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/ac5ee51b-7525-4f52-94d7-08ff9edf7997/BB_2.jpg" /><figcaption>மருத்துவர் லீ வென்லியாங்</figcaption></figure><p>கொரோனா வைரஸைக் கண்டறிந்த எட்டு விசில் ப்ளோவர்களில் (whistleblower - ஒரு பொது அமைப்பில் நடக்கும் தவறு, குற்றம், விநோதங்களைச் சுட்டிக்காட்டுபவர்) இவரும் ஒருவர் என்று சீன மக்கள் லீயை ஹீரோவாகக் கொண்டாடினர். முன்னதாக மருத்துவரிடம் தவறாக நடந்துகொண்டதற்காக ஹுபே போலீஸும் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அதன் பிறகு மருத்துவர் லீ, களத்தில் இறங்கி வைரஸால் பாதிக்கப்பட்ட பிறருக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கியுள்ளார். நாளடைவில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரும் தான் பணியாற்றிய வுகான் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/health/healthy/corona-virus-outbreak-todays-updates">சீனாவில் கதறிஅழுத அம்மா - மகள் முதல், கேரளாவில் தப்பி ஓடிய இருவர் வரை... கொரோனா அப்டேட்ஸ்!</a></p><p>இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மருத்துவர் லீ நேற்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார். மருத்துவரின் இறப்பை அவர் வேலை செய்த மத்திய மருத்துவனை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `` கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் லீ வென்லியாங் பிப்ரவரி 7-ம் தேதி அதிகாலை 2:58 மணிக்கு உயிரிழந்துள்ளார். அவரைக் காக்க நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டன” என்று குறிப்பிட்டுள்ளனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/844c9b9f-df0a-4292-91b5-11409c4fdbca/BB_1.jpg" /><figcaption>மருத்துவர் லீ வென்லியாங்</figcaption></figure><p>மருத்துவர் லீ உயிரிழந்ததற்கு வுகான் உட்பட சீனாவின் அனைத்துப் பகுதியைச் சேர்ந்த மக்களும் தங்களின் இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்து வருகின்றனர். ``அவர் மற்றவர் வாழ்வுக்காக எச்சரித்த ஹீரோ” என்று சக மருத்துவர்கள் லீக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`6 மாதங்கள் முடிவு; அடுத்த சில மணி நேரத்தில் மற்றொன்று!'- காஷ்மீர் தலைவர்களைத் துரத்தும் சிறை
</title>
<link>
https://www.vikatan.com/news/india/jammu-and-kashmir-political-leaders-charged-under-public-safety-act
</link>
<comments>
https://www.vikatan.com/news/india/jammu-and-kashmir-political-leaders-charged-under-public-safety-act#comments
</comments>
<guid isPermaLink="false">37265ccf-8f98-4feb-8f94-8c26684872fd</guid>
<pubDate>Fri, 07 Feb 2020 04:40:26 +0000</pubDate>
<atom:updated>2020-02-07T04:40:26.519Z</atom:updated>
<atom:author>
<atom:name>சத்யா கோபாலன்</atom:name>
<atom:uri>/api/author/616091</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
mehbooba mufti,jammu and kashmir,Article 370,omar abdullah
</media:keywords>
<media:content height="701" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/e3c650b0-d379-45c0-9396-4ffabf0ffa55/AA_4.jpg" width="1363">
<media:title type="html">
<![CDATA[ முப்தி - உமர் அப்துல்லா ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/e3c650b0-d379-45c0-9396-4ffabf0ffa55/AA_4.jpg?w=280" width="280"/>
<category>India</category>
<content:encoded>
<![CDATA[
<p>இந்திய எல்லையான ஜம்மு - காஷ்மீர் கடந்த வருடம் ஜூலை மாத இறுதியில் பரபரப்பின் உச்சத்திலிருந்தது. அங்கு பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். எல்லையில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் ஜம்மு - காஷ்மீர் முழுவதும் இணையம், தகவல் தொடர்பு போன்ற அனைத்தும் துண்டிக்கப்பட்டன.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/0cda307e-9d62-4961-8742-940d8bb636f3/AA_5.jpg" /><figcaption>காஷ்மீர்</figcaption></figure><p>இதுபோன்ற தொடர் நடவடிக்கையினால், தங்களுக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம் அப்பகுதி மக்களை ஆட்டிப்படைத்தது. இதன் தொடர்ச்சியாக ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். சில அமைப்புகளைச் சேர்ந்த நபர்கள், தலைவர்கள் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்களில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.</p><p>இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு. அதில் `இதுநாள் வரை ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாகவும் ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர், இனி காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசமாகச் செயல்படும்’ எனக் கூறப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு காஷ்மீர் மட்டுமல்லாது இந்தியாவையும் கொந்தளிக்க வைத்தது. இதற்கு உலக நாடுகளும் தங்களின் கருத்தை தெரிவித்துவந்தனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/2d5e1376-6a4b-49ae-8dac-ac4735cf5892/AA_6.jpg" /><figcaption>காஷ்மீர்</figcaption></figure><p>காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இரண்டு, மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டது. சமீபத்தில்தான் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இணையம், தகவல் தொடர்பு சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. என்னதான் அங்கு பழைய வாழ்க்கை திரும்பினாலும், அப்போது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட எந்த அரசியல் தலைவர்களும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. </p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/politics/jammu-and-kashmir-after-six-months-of-article-370-abrogation">மயான அமைதியில் காஷ்மீர்; சிறையில் தலைவர்கள், கொதிக்கும் ஜம்மு... சிறப்புச் சட்டம் இல்லாத 6 மாதங்கள்!</a></p><p>காஷ்மீரின் முன்னாள் முதல்வர்களான <a href="https://www.vikatan.com/government-and-politics/politics/omar-abdullah-viral-photo-and-its-message-to-india">உமர் அப்துல்லா</a>, மெஹ்பூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு நேற்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகின்றன. முன்னதாக இவர்கள் கைது செய்யப்பட்ட சட்டத்தினால் 6 மாதங்கள் மட்டுமே ஒருவரை வீட்டுச் சிறையில் அடைக்கமுடியும். உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகியோரின் காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. இதை மெஹ்பூபா முப்தியின் மகள் உறுதி செய்துள்ளார்.</p><figure><blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Ms Mufti received a PSA order sometime back.Slapping the draconian PSA on 2 ex J&amp;K CMs is expected from an autocratic regime that books 9 year olds for ‘seditious remarks’. Question is how much longer will we act as bystanders as they desecrate what this nation stands for?</p>&mdash; Mehbooba Mufti (@MehboobaMufti) <a href="https://twitter.com/MehboobaMufti/status/1225457107530477568?ref_src=twsrc%5Etfw">February 6, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script> </figure><p>இந்தச் சட்டத்தின் கீழ் எந்த விசாரணையும் இன்றி ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் வைக்கலாம். அந்தக் காலகட்டத்தில் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லவேண்டிய எந்த அவசியமும் இல்லை. உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உட்பட தேசிய மாநாட்டுக்கட்சியின் பொதுச்செயலாளர் அலி முகமது சாஹர் மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் சர்தாஷ் மத்னி ஆகியோர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்துள்ளது, அவர்களும் தொடர்ந்து வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். </p><p>காஷ்மீரில் பொது பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் ஃபரூக் அப்துல்லாவின் தந்தை. தன் தந்தை கொண்டுவந்த சட்டத்திலேயே தற்போது ஃபரூக் அப்துல்லாவும் பேரன் உமர் அப்துல்லாவும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மூன்று முறை முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (உமர் அப்துல்லா) இந்தச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`என் தலைவனுக்கு வழிவிடமாட்டியா?'- அரசு பஸ் டிரைவர், பயணிகளைத் தாக்கிய ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள்
</title>
<link>
https://www.vikatan.com/news/tamilnadu/government-bus-drivers-protest-against-the-persons-who-attacked
</link>
<comments>
https://www.vikatan.com/news/tamilnadu/government-bus-drivers-protest-against-the-persons-who-attacked#comments
</comments>
<guid isPermaLink="false">d24b78fa-2692-43f7-9495-780fefc5a508</guid>
<pubDate>Fri, 07 Feb 2020 04:34:10 +0000</pubDate>
<atom:updated>2020-02-07T04:34:10.097Z</atom:updated>
<atom:author>
<atom:name>சதீஸ் ராமசாமி </atom:name>
<atom:uri>/api/author/633382</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
john pandian,protest,police station,the nilgiris,government bus
</media:keywords>
<media:content height="619" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/992f88e8-7b65-4b22-acf5-49aee193514f/IMG_20200206_171852.jpg" width="1074">
<media:title type="html">
<![CDATA[ அரசுப் பேருந்து ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/992f88e8-7b65-4b22-acf5-49aee193514f/IMG_20200206_171852.jpg?w=280" width="280"/>
<category>Tamilnadu</category>
<content:encoded>
<![CDATA[
<p>நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து நேற்று மதியம் பழநிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப் பேருந்து ஒன்று ஊட்டி குன்னூர் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. பேருந்து அரவங்காடு அருகில் உள்ள பாய்ஸ் கம்பெனி அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு கார் இந்த அரசுப் பேருந்தை முந்திச்சென்று குறுக்கே நின்றது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/774e281c-9d15-4d7e-b9f4-fa65ac78652e/20200206_141743.jpg" /><figcaption>போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் </figcaption></figure><p>அந்த காரில் இருந்து இறங்கிய சிலர், `என் தலைவனுக்கே வழிவிட மாட்டியா 'என பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கினர். என்ன நடக்கிறது என தெரியாமலே நடக்கும் இந்தத் தாக்குதலைப் பார்த்த பேருந்து நடத்துநர் மற்றும் பயணிகள் ஓட்டுநரைக் காப்பாற்ற முயன்றனர்.</p><p>மேலும், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் நடத்துநரையும், பெண்கள் என்று கூட பாராமல் பயணிகள் சிலரையும் ஆபாச வார்த்தையில் திட்டித் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவத்தைப் பார்த்து அருகில் வந்த சிலரையும் மூர்க்கத்தனமாக திட்டியது அந்தக் கும்பல்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/bac03bb6-ca04-4a47-a1ed-33c6a612389d/20200206_150506.jpg" /><figcaption>போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் </figcaption></figure><p>நடு ரோட்டில் அரசுப் பேருந்தை வழி மறித்து ஓட்டுநர் மற்றும் பயணிகளைத் தாக்கிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் ஆத்திரமடைந்த பலரும் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு மறியலில் ஈடுபட்டனர்.</p><p>இந்தச் செய்தி ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளுக்குப் பரவ இந்தச் சாலையில் ஓடிய எல்லா அரசுப் பேருந்துகளையும் சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்தச் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/31485100-c11f-438e-9777-dfcc8ae33f3d/20200206_144112.jpg" /><figcaption>போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் </figcaption></figure><p>இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் பாபு பேசுகையில், ``நான் குன்னூர் கிளையில் ஓட்டுநராக உள்ளேன். ஊட்டி - பழநி பேருந்தை இயக்கி வருகிறேன். வழக்கம்போல் அருவங்காடு பகுதிக்கு வந்தபோது நான்கைந்து வாகனங்கள் வரிசையாக வந்தன. அதில் இரண்டு வாகனத்தில் வந்தவர்கள் பேருந்தை மறித்து `என் தலைவனுக்கே வழிவிட மாட்டியா?' என என்னைத் தாக்கினர்.</p><p>தடுக்க வந்தவர்களையும் தாக்கினர். எதற்காகத் தாக்கினர் என்று தெரியவில்லை. மக்கள் சேவைப் பணியில் உள்ள எங்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெலிங்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/66f61663-e76a-48fd-99c8-a0d803b06a35/IMG_20200206_171637.jpg" /><figcaption>தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஓட்டுநர் பாபு </figcaption></figure><p>இந்தப் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் கூறுகையில் ``இதுபோன்ற சம்பவத்தை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். குண்டர்களைப் போல அவ்வளவு மோசமாகப் பேசி தாக்கினர். கேள்வி கேட்ட அனைவரையும் தாக்க வந்தனர்.</p><p>பட்டப்பகலில் பொதுமக்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/0df76568-d53e-4411-8a28-f379a965415c/20200206_142811.jpg" /><figcaption>பேச்சுவார்த்தையில் போலீஸார்</figcaption></figure><p>இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், ``ஊட்டியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் அவரது கட்சியினர் வாகனங்களில் வரிசையாக வந்துள்ளனர். ஒரு வாகனத்தில் ஜான் பாண்டியன் இருந்துள்ளார். இந்த வாகனத்துக்கு அரசுப் பேருந்து வழிவிடவில்லை எனத் தாக்குதலில் ஈடுபட்டு தப்பி ஓடிவிட்டனர்" என்றனர்</p><p>தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பின்னரே மக்கள் கலைந்து சென்றனர். மூன்று மணி நேரத்துக்குப்பின் பேருந்துகள் இயங்கின. இந்நிலையில் நேற்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஊட்டி நகர செயலாளர் அபு அலி அப்பாஸ் , குன்னூர் இளைஞர் அமைப்பு பொறுப்பாளர் உதயகுமார் ஆகிய இருவர் மீது வெல்லிங்டண் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். </p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`திண்டுக்கல் சீனிவாசனை யாரும் தடுக்கவில்லை!' - ஊட்டி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை?
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/politics/peoples-request-action-against-government-officials-also
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/politics/peoples-request-action-against-government-officials-also#comments
</comments>
<guid isPermaLink="false">da14f14a-4841-408f-a2a2-2fb8730a4424</guid>
<pubDate>Fri, 07 Feb 2020 04:23:58 +0000</pubDate>
<atom:updated>2020-02-07T04:23:58.664Z</atom:updated>
<atom:author>
<atom:name>சதீஸ் ராமசாமி </atom:name>
<atom:uri>/api/author/633382</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>dindigul c. sreenivasan,controversy,minister</media:keywords>
<media:content height="712" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/e04a0a47-fd54-404a-8a64-a04901a00044/hero.jfif" width="1280">
<media:title type="html">
<![CDATA[ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/e04a0a47-fd54-404a-8a64-a04901a00044/hero.jfif?w=280" width="280"/>
<category>politics</category>
<content:encoded>
<![CDATA[
<p>நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் 48 நாள்கள் நடைபெறும் புத்துணர்வு முகாமில் இருந்த குறும்பர் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை அழைத்து அதில் ஒரு‌ சிறுவனை தனது காலணிகளைக் கழற்றச்செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/7d49bdea-5a30-4feb-8ca5-945fc3466227/IMG_20200206_WA0004.jpg" /><figcaption>அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்</figcaption></figure><p>தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர், பழங்குடி அமைப்புக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பழங்குடியின சிறுவன் மசினகுடி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தான். இந்தப் புகாரில் `என் பெயர் பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் 9-ம் வகுப்பு பயின்று வருகிறேன். உறவினர் துக்க நிகழ்வில் பங்கேற்றதால் பள்ளிக்குச் செல்லவில்லை. யானை முகாமில் நடைபெற்ற விழாவைப் பார்க்க வந்தேன். அமைச்சர், என்னை அழைத்து காலணியைக் கழற்றிவிடச் சொன்னார். பயத்தில் கழற்றிவிட்டேன். அருகில் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் இருந்தனர். யாரும் தடுக்கவில்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது.</p><p>இது குறித்து நம்மிடம் பேசிய பழங்குடியின செயற்பாட்டாளர் வீரப்பன், ``அமைச்சர் பங்கேற்ற இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுஷல், இணை இயக்குநர் சென்பகபிரியா, காவல் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் என ஆட்சி அதிகாரத்தில் உள்ள பலரும் வேடிக்கை பார்த்தபடியே இருந்தனர். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/58f18940-9c9a-4ade-8168-1acbf5c28856/kethan.jfif" /></figure><p>இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என இவர்களுக்கும் தெரியாதா? இவர்கள் இதை தடுத்திருக்கக் கூடாதா? எனவே, இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வேடிக்கை பார்த்த அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`பா.ஜ.க தலைவர் ஒருவரின் கருத்து.. வருமான வரித்துறை ரெய்டு!'-விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கேரள அமைச்சர்
</title>
<link>
https://www.vikatan.com/news/india/kerala-minister-supports-actor-vijay
</link>
<comments>
https://www.vikatan.com/news/india/kerala-minister-supports-actor-vijay#comments
</comments>
<guid isPermaLink="false">1b57aa08-ac41-40cd-a072-76292103b27d</guid>
<pubDate>Fri, 07 Feb 2020 03:40:44 +0000</pubDate>
<atom:updated>2020-02-07T03:40:44.024Z</atom:updated>
<atom:author>
<atom:name>சிந்து ஆர்</atom:name>
<atom:uri>/api/author/616010</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>BJP,Vijay,kerala,it raid</media:keywords>
<media:content height="853" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/162d665c-aaa3-4800-be58-e7fa6229448f/vijay.jpg" width="1279">
<media:title type="html">
<![CDATA[ நடிகர் விஜய் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/162d665c-aaa3-4800-be58-e7fa6229448f/vijay.jpg?w=280" width="280"/>
<category>India</category>
<content:encoded>
<![CDATA[
<p>பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. மேலும், ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் அலுவலகம் மற்றும் வீடு உள்ளிட்டவைகளில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. ஏஜிஎஸ் நிறுவனம், நடிகர் விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை தயாரித்தது. இதனால் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்க்கு சம்மன் கொடுத்து அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். </p><p>நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. வருமானவரிக் கணக்கில் காட்டாத பணத்தை நடிகர் விஜய் சம்பளமாக வாங்கியிருப்பதாகத் தெரியவந்தால், அவர் மீது தனியாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெறும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நடிகர் விஜய் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த வருமானவரி விசாரணையின் பின்னணியில் எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் காய் நகர்த்தல்களும் அதனால் ஏற்பட்ட எதிர்வினையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தமிழக சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/4c72bf43-29ee-412d-b055-29b50718b94c/FB_IMG_1581042168457.jpg" /><figcaption>கேரள அமைச்சர் இ.பி.ஜெயராஜன்</figcaption></figure><p>இந்த நிலையில், தமிழ் நடிகர் விஜய்க்கு ஆதரவாக கேரள மாநில தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தனது முகநூல் பதிவில், ``தமிழ் நடிகர்களில் சூப்பர் நட்சத்திரமான விஜய்யை கஸ்டடியில் எடுத்த நடவடிக்கை கண்டனத்திற்குரியது. தங்களை விமர்சிப்பவர்களை எந்த வழியிலாவது அடக்குவதுதான் சங்பரிவாரின் வழிமுறை. நாட்டை சீர்குலைப்பதற்காக எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் ஜி.எஸ்.டி-யையும் `மெர்சல்' திரைப்படத்தில் விஜய் விமர்சித்திருந்தார். `சர்கார்' சினிமாவில் அ.தி.மு.க அரசை விமர்சித்தார். இதுதான் விஜய் மீது மத்திய அரசுக்கு எரிச்சல் ஏற்பட்டதற்கான காரணம்.</p><p>சங்பரிவாரின் செயல்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் சினிமா நடிகர்கள், எழுத்தாளர்களை மிரட்டுவது, தாக்குதல் நடத்துவது, பொய் வழக்கு போட்டு பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. சங்பரிவாரின் மிரட்டலைத் தொடர்ந்து தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதுவதை நிறுத்தும் நிலை ஏற்பட்டது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் பேசுபவர்களையும், போராடுபவர்களையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/b38d4194-5934-4458-a215-21aae7314abc/FB_IMG_1581042141877.jpg" /><figcaption>அமைச்சர் இ.பி.ஜெயராஜனின் முகநூல் பதிவில்</figcaption></figure><p>குடியுரிமைச் சட்ட திருத்தம் அநீதி என கூறிய மலையாள சினிமாக்காரர்கள் வருமானவரித்துறை ரெய்டு குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் ஒருவர் பேசியதையும் நடிகர் விஜய்க்கு எதிரான நடவடிக்கையையும் சேர்த்து பார்க்க வேண்டும். இந்த நெறியற்ற நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடுமுழுவதும் ஒன்றாக குரல்கொடுக்க வேண்டும்" என்றார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த டரம்ப்'-ஏமனில் கொல்லப்பட்ட அல்-கொய்தா துணைத் தலைவர் காஸிம்-அல்-ரிமி
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/international/yemen-al-qaeda-leader-al-rimi-killed
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/international/yemen-al-qaeda-leader-al-rimi-killed#comments
</comments>
<guid isPermaLink="false">c6bdf85e-07b2-4442-9cfa-df1e258ab4b7</guid>
<pubDate>Fri, 07 Feb 2020 02:44:11 +0000</pubDate>
<atom:updated>2020-02-07T02:44:11.630Z</atom:updated>
<atom:author>
<atom:name>பிரேம் குமார் எஸ்.கே.</atom:name>
<atom:uri>/api/author/615797</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>donald trump,terrorism,white house,al qaeda</media:keywords>
<media:content height="510" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/6d0aa6cd-8408-44e1-a6cd-f60dd4cc5a07/twi.jfif" width="680">
<media:title type="html">
<![CDATA[ காஸிம்-அல்-ரிமி ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/6d0aa6cd-8408-44e1-a6cd-f60dd4cc5a07/twi.jfif?w=280" width="280"/>
<category>international</category>
<content:encoded>
<![CDATA[
<p>இராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரான் நாட்டு ராணுவப்படை தளபதி காசிம
]]>
<![CDATA[
் <a href="https://www.vikatan.com/government-and-politics/international/us-president-trump-has-recounted-the-final-moments-of-qasem-soleimani">சுலைமானி </a>கொலை செய்யப்பட்டார். அவர் இரானின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். அவர் அமெரிக்க வீரர்களையும் இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் தாக்கியதாகக் கூறி அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா விளக்கமளித்திருந்தது. </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-01/84201195-1a8b-4876-99db-ee3cf6eb447a/AP20022435364414.jpg" /><figcaption>ட்ரம்ப்</figcaption></figure><p>இந்த நிலையில், கடந்த மாதம் முதலே அரேபியன் பெனின்சுலாவில் உள்ள அல்-கொய்தா (AQAP) அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த காஸிம்-அல்-ரிமி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் பரவின. எனினும் அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி அரேபியன் பெனின்சுலாவில் உள்ள அல்-கொய்தா (AQAP) அமைப்பு ஒரு ஆடியோவை வெளியிட்டது. அதில் காஸிம்-அல்-ரிமி பேசினார். இதனால் ரிமி கொல்லப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று கூறப்பட்டது. எனினும் அது முன்னரே ரெக்கார்டு செய்யப்பட்ட ஆடியோ என்றும் கூறப்பட்டது. </p><p>இந்த நிலையில், ஏமனில் நடத்தப்பட்ட தாக்குதலில் AQAP அமைப்பில் முக்கியத் தலைவரான காஸிம்-அல்-ரிமி கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொல்லப்பட்டதை அறிவித்த அமெரிக்கா, அவர் எப்போது கொல்லப்பட்டார் என்பதை அறிவிக்கவில்லை. இதனால் கடந்த மாதமே அவர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களை இன்னும் உறுதி செய்யமுடியவில்லை.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/ee4ec529-8732-4b9b-8d00-d5f73624e044/afp.jpg" /><figcaption>காஸிம்-அல்-ரிமி</figcaption></figure><h3>AQAP அமைப்பின் பின்னணி!</h3><p>காஸிம்-அல்-ரிமி மேற்கத்திய நாடுகளில் நடந்த பல விரும்பப்படாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர். AQAP அமைப்பானது 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவுக்கு ஆதரவு தரும் நாடுகளைக் குறிவைத்து இந்தக் கிளை இயக்கம் தொடங்கப்பட்டது. ஏமனில் இந்த இயக்கம் அரசியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தியதில் வெற்றி கண்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எண்ணெய் வளங்களையும், வெளிநாட்டினரையும், பாதுகாப்புப் படையினரையும் இந்த அமைப்பு குறிவைத்து தாக்கும். இதன் மூலம் சவுதி மற்றும் ஏமன் நாட்டின் அரசாங்கங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் இந்த அமைப்பு இருந்து வந்துள்ளது. இந்த இருநாடுகளிலும் நடைபெற்ற பெரும்பாலான தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இவர்களின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/government-and-politics/international/us-forces-they-targeted-another-senior-iranian-official-in-yemen">`சுலைமானி கொல்லப்பட்ட அதே நாள்; ஏமனுக்கும் குறி!’ - அமெரிக்க ரகசியம் உடைத்த அதிகாரிகள்</a></p><p>எதிர்பாராத நேரத்தில் நடத்தும் தாக்குதல் மூலமாக சில நேரங்களில் சில நகரங்கள் அல்லது கிராமங்களை இந்த அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் சவுதி மற்றும் ஏமன் நாடுகளுக்கு இந்த அமைப்பானது பெரும் தலைவலியை அளித்து வந்துள்ளது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் AQAP அமைப்பின் அப்போதைய தலைவராக இருந்த நாசர்-அல்-வுஹாய்ஷி வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் சர்வதேச அல்-கொய்தா அமைப்பின் இரண்டாவது பெரிய தலைவராகவும் இருந்து வந்தார். நாசரின் மரணத்துக்குப்பின்னர் அவரது இடத்துக்கு வந்தவர்தான் காஸிம்-அல்-ரிமி.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/b462f842-a01b-49f2-9fb5-d753c2be2b17/wh.PNG" /><figcaption>வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை</figcaption></figure><p>வெள்ளை மாளிகையின் செய்திக் குறிப்பில், ``அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவின் பெயரில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின்போது ஏமனில் காஸிம்-அல்-ரிமி கொல்லப்பட்டார். இவர் AQAP அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராவார். மேலும், அல்-கொய்தா அமைப்பின் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். காஸிம்-அல்-ரிமியின் மரணம், AQAP அமைப்பையும் சர்வதேச அமைப்பான அல் - கய்தா அமைப்பின் வளர்ச்சியையும் தடுக்கும். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இதுபோன்ற அமைப்புகள் விரைவில் நீக்கப்படுவதற்கு மிக அருகில் இருக்கிறோம் என்பதற்கு இந்த மரணம் ஓர் உதாரணம். அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் இவரின் மரணத்தால் பாதுகாப்பாக இருக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
``தொண்டர்களை நம்பவில்லை.. பிரசாந்த் கிஷோரை மட்டுமே நம்பியுள்ளது!”- தி.மு.கவை சாடும் அர்ஜூன் சம்பத்
</title>
<link>
https://www.vikatan.com/news/politics/the-dmk-has-relied-on-prashant-kishore-instead-of-relying-on-cadres-says-arjun-sampath
</link>
<comments>
https://www.vikatan.com/news/politics/the-dmk-has-relied-on-prashant-kishore-instead-of-relying-on-cadres-says-arjun-sampath#comments
</comments>
<guid isPermaLink="false">409776f5-8db9-4f17-a696-dcae47b82e78</guid>
<pubDate>Fri, 07 Feb 2020 02:14:53 +0000</pubDate>
<atom:updated>2020-02-07T02:14:53.190Z</atom:updated>
<atom:author>
<atom:name>இ.கார்த்திகேயன்</atom:name>
<atom:uri>/api/author/614380</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
arjun sampath,Prashant Kishor ,dmk,pakistan,citizenship amendment bill 2019
</media:keywords>
<media:content height="750" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/409a9882-ad77-417c-a199-d56c6f411cd3/arjun_sampath.jpg" width="1200">
<media:title type="html">
<![CDATA[ அர்ஜூன் சம்பத் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/409a9882-ad77-417c-a199-d56c6f411cd3/arjun_sampath.jpg?w=280" width="280"/>
<category>politics</category>
<content:encoded>
<![CDATA[
<p>இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவரான அர்ஜூன் சம்பத், தூத்துக்குடி வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நடிகர் விஜய் அவரது வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வருகிறது. 150 கோடி ரூபாய்க்கும் மேல் அவர்கள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. விஜய் நடித்து சமீபத்தில் வெளியான `பிகில்' திரைப்படம் சுமார் ரூ.400 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/44f7877b-db79-4b14-a6de-cb95021d58ad/arjun_sampath_2.jpg" /><figcaption>அர்ஜூன் சம்பத்</figcaption></figure><p>அந்தக் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு வருமானவரி செலுத்தப்படவில்லை. விஜய் மட்டுமல்ல, சில தனியார் கல்வி நிறுவனங்களின் குடும்பத்தாரும், இணைந்து சினிமா தயாரிப்பில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வருமான வரித்துறை நடிகர் விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்து அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். தைப்பூசம், மகாசிவராத்திரி பண்டிக்கைக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.</p><p>அனைத்து தரப்பினரும் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக உள்ள நிலையில், பாகிஸ்தானிலிருந்து நிதியுதவி பெற்று குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் ஓர் அங்கம்தான் தி.மு.க., தி.மு.க-வினருக்கு சி.ஏ.ஏ என்றால் என்னவென்று தெரியவில்லை. பாகிஸ்தானிலிருந்து குடியுரிமைச் சட்டம் அமலாகாமல் தடுப்பதற்கு ரூ.160 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், கபில்சிபில் ரூ.84 லட்சம் பணம் வாங்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/10237c6a-6f16-421b-9596-07d7c29cd9c4/arun_sampath_3.jpg" /><figcaption>அர்ஜூன் சம்பத்</figcaption></figure><p>அத்துடன், காங்கிரஸ், தி.மு.க-வுக்குப் பெரும்பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள 366 பல்கலைக்கழகங்களில் 4 பல்கலைக்கழகங்களில் மட்டுமே செயற்கையான போராட்டம் நடத்தப்படுகிறது. இதில், பெறப்பட்ட பணத்தில்தான் தி.மு.க, ரூ.350 கோடிக்கு பிரசாந்த் கிஷோரை தி.மு.க தேர்தல் வல்லுநராக புக் செய்துள்ளது. இதிலிருந்து, வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., தங்கள் கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களையும் தொண்டர்களையும் நம்பவில்லை என்பது நிரூபணமாகிறது” என்றார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`இது இறைவன் கொடுத்த வாய்ப்பு!' - நெகிழும் தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ்
</title>
<link>
https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-collector-speaks-about-peruvudaiyar-kovil-kumbabhishekam
</link>
<comments>
https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-collector-speaks-about-peruvudaiyar-kovil-kumbabhishekam#comments
</comments>
<guid isPermaLink="false">10eeaa6a-0ac9-436b-8936-eaab42b1616d</guid>
<pubDate>Fri, 07 Feb 2020 01:30:00 +0000</pubDate>
<atom:updated>2020-02-07T01:30:00.000Z</atom:updated>
<atom:author>
<atom:name>கு. ராமகிருஷ்ணன்</atom:name>
<atom:uri>/api/author/614418</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
temples,district collector,Tanjore peruvudaiyar temple
</media:keywords>
<media:content height="4160" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/31d899b4-2f36-40a2-a27b-d2e73f581c00/_MG_4553.jpg" width="6240">
<media:title type="html">
<![CDATA[ தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/31d899b4-2f36-40a2-a27b-d2e73f581c00/_MG_4553.jpg?w=280" width="280"/>
<category>Tamilnadu</category>
<content:encoded>
<![CDATA[
<p>தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா, பக்தி பரவசத்துடனும் கோலாகலமாகவும் நடந்து முடிந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிந்து, குடமுழுக்கை தரிசித்தார்கள். எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் இல்லாமல், பெரிதாகச் சொல்லும்படியான குறைகளும் இல்லாமல் குடமுழுக்கு நடைபெற்று முடிந்ததால், தஞ்சை மக்கள், மிகுந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்கள். வெற்றிகரமாக நடத்தி முடித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வரக்கூடும்.. மாவட்ட நிர்வாகம் எப்படி இதை எதிர்கொள்ளப்போகிறதோ என்ற பெரும் கேள்வி எழுந்தது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/577ba25f-5989-4b7c-b840-f814b1da7860/_MG_4547.jpg" /><figcaption>ஆட்சியர் கோவிந்தராவ்</figcaption></figure><p>உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வரக்கூடும்.. மாவட்ட நிர்வாகம் எப்படி இதை எதிர்கொள்ளப்போகிறதோ என்ற பெரும் கேள்வி எழுந்தது.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/tamilnadu/police-department-takes-various-steps-to-conduct-tanjore-temple-fuction-smoothly">`பெரிய கோயில் குடமுழுக்குக் கோலாகலம்' - மக்கள் வெள்ளத்தில் திணறிய தஞ்சை! </a></p><p>1997-ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கின்போது தீவிபத்து ஏற்பட்டதால், தற்போது நடைபெறும் குடமுழுக்கில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாதென, தஞ்சை மக்கள் நினைத்திருந்தனர். வெளியூர்களிலிருந்து வரக்கூடிய லட்சக்கணக்கான மக்களுக்கு, எந்த ஒரு குறையும் இல்லாமல், தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர், எப்படி செய்து தரப் போகிறார்களோ என்ற கேள்வியும் எழுந்தது. இப்படியாக தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதென்பதே பெரும் சவாலாகப் பேசப்பட்டது.</p><p>இந்நிலையில்தான், சிறப்பாக நடந்து முடிந்து, தஞ்சை மக்களை மனநிறைவில் ஆழ்த்தியுள்ளது இக்குடமுழுக்கு விழா. அலங்கார விளக்குகள், பளபளப்பான சாலை, அழகிய சுவர் ஓவியங்கள், பிரமாண்ட யாகசாலை உள்ளிட்டவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அத்தோடு, பக்தர்களின் அடிப்படைத் தேவைகளான, போக்குவரத்து, குடிநீர், கழிவறை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுக்குச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் குறையின்றி செய்யப்பட்டிருந்தன. </p><p>இதுகுறித்து நெகிழ்ச்சியோடு பேசும் தஞ்சை மக்கள், `பெருசா சொல்லிக்கிற மாதிரி எந்தக் குறையும் இல்லை. ஒரு சின்ன அசம்பாவிதமும் இல்லாம, குடமுழுக்கு மகிழ்ச்சியா நடந்து முடிஞ்சிடுச்சி. தஞ்சாவூர் கலெக்டர் சோவிந்தராவோட திறமையான, சுறுசுறுப்பான செயல்பாடு இதுக்கு ஒரு முக்கியக் காரணம்” எனப் பாராட்டு தெரிவிக்கிறார்கள். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/f5973759-da98-4b15-ba4b-29ffaf08135e/_MG_4589.jpg" /><figcaption>ஆட்சியர் கோவிந்தராவ்</figcaption></figure><p>தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, ``இது இறைவன் கொடுத்த மிகப்பெரும் வாய்ப்பு. நான் கலெக்டராக இருந்து தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை, நடத்துறங்கறது, எனக்கு கிடைச்ச பாக்கியம். இது வெற்றிகரமாக நடக்க, நான் மட்டுமே காரணம் இல்லை. அனைத்துத் துறை அலுவலர்களும் ஊழியர்களும் ஆர்வமாக உழைச்சாங்க. தன்னார்வ அமைப்புகளும் உறுதுணையாக இருந்தாங்க. காவல்துறையினர் அர்ப்பணிப்போடு செயல்பட்டாங்க. குடமுழுக்குக்கு தேதி குறிக்கப்பட்டதுல இருந்தே, தலைமைச் செயலாளர் சண்முகம் சாரும், டிஜிபி திரிபாதி சாரும் அடிக்கடி மீட்டீங்க நடத்தி ஆலோசனைகள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நேரடியாகவும் பார்வையிட்டாங்க.</p><p>இவ்விழாவுக்காக உயர்நிலைக்குழு அமைக்கணும்னு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதினேன். உடனே அமைச்சாங்க. அக்குழுவுல இடம்பெற்ற உயரதிகாரிகளும் நிறைய ஆலோசனைகள் சொன்னாங்க. எல்லோருடைய ஒத்துழைப்புனாலயும் அர்ப்பணிப்புனாலயும்தான் குடமுழுக்கு வெற்றிகரமா நடந்து முடிஞ்சிருக்கு” என்றார் நெகிழ்ச்சியோடு.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுங்க!' - காவல்நிலையத்தில் புகாரளித்த சிறுவன்
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/controversy/tribal-student-files-police-complaint-against-minister-seenivasan
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/controversy/tribal-student-files-police-complaint-against-minister-seenivasan#comments
</comments>
<guid isPermaLink="false">b704abd3-eda9-4b57-9c81-ecafff34e0e1</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 16:47:55 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T16:47:55.962Z</atom:updated>
<atom:author>
<atom:name>சதீஸ் ராமசாமி </atom:name>
<atom:uri>/api/author/633382</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
dindigul c. sreenivasan,elephant,mudumalai tiger reserve,forest departmet,the nilgiris,minister
</media:keywords>
<media:content height="853" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/7d49bdea-5a30-4feb-8ca5-945fc3466227/IMG_20200206_WA0004.jpg" width="1280">
<media:title type="html">
<![CDATA[ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/7d49bdea-5a30-4feb-8ca5-945fc3466227/IMG_20200206_WA0004.jpg?w=280" width="280"/>
<category>controversy</category>
<content:encoded>
<![CDATA[
<p>முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் இன்று தொடங்கி 48 நாள்கள் நடைபெறுகிறது. இந்த முகாமைத் தொடங்கிவைக்க தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முதுமலை வந்திருந்தார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/bc3dcf22-e5b4-4edf-a369-d11caa1ce844/IMG_20200206_WA0006.jpg" /><figcaption>அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்</figcaption></figure><p>காப்புக் காட்டில் சைரன் முழங்க கான்வாயில் வந்து தெப்பக்காடு முகாமில் இறங்கினார். காரிலிருந்து இறங்கிய அமைச்சரை மாவட்ட ஆட்சியர், புலிகள் காப்பகக் கள இயக்குநர், வனத்துறை உயர் அதிகாரிகள் வரவேற்று முகாமில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்தனர். அரசியல் கட்சியினர், அதிகாரிகள் படை சூழ வந்த அமைச்சர், யானை அருகில் நின்றிருந்த இரண்டு பழங்குடிச் சிறுவர்களை அழைத்து தனது காலணிகளைக் கழற்றிவிடச் செய்தார். இந்தச் சம்பவம் அப்போதே அங்கிருப்பவர்களை முகம் சுளிக்கச்செய்தது.</p><p>பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வைரலாகின. இதுகுறித்து உள்ளூர்‌ முதல் தேசிய அளவிலான ஊடகங்கள் வரை செய்தி வெளியாகி தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/3cf5a108-c99c-4a62-8efb-8cc815a0c18d/IMG_20200206_WA0000.jpg" /><figcaption>அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்</figcaption></figure><p>இந்தச் சம்பவத்துக்குப் பல்வேறு தலைவர்களும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பழங்குடி அமைப்புக்கள் எனப் பலரும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.</p><p>இந்தச் சம்பவம் குறித்து மக்கள் சட்டமைய நிறுவனர் விஜயன், ``பெரியார் மண்ணில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது எல்லோருக்கும் அவமானமாக உள்ளது. அதுவும் அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக்கொண்டு இப்படி ஒரு செயல் நடந்திருப்பது மிக மோசமான செயல். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/ac236a0a-e814-4dc3-be0b-e3aa81fc877a/IMG_20200206_WA0001.jpg" /><figcaption>அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்</figcaption></figure><p>அமைச்சர் பதவி விலகக்கோரி தி.மு.க சார்பில் நாளை கூடலூரில் போராட்டம் நடைபெறவுள்ளது. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மசினகுடி காவல் நிலையத்தில் சிறுவன் புகார் அளித்துள்ளார். முறையான நியாயம் கிடைக்க வேண்டும்" என்றார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`தாய் கொலை... அந்தமானில் நண்பருடன் சுற்றுலா!’- பெங்களூரு பெண்ணை வளைத்த போலீஸ்
</title>
<link>
https://www.vikatan.com/news/crime/bengaluru-woman-stabs-mother-and-flies-tour-with-friend
</link>
<comments>
https://www.vikatan.com/news/crime/bengaluru-woman-stabs-mother-and-flies-tour-with-friend#comments
</comments>
<guid isPermaLink="false">bb645147-0b4b-4b0c-9dd8-e4cebe48f67f</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 16:40:57 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T16:40:57.568Z</atom:updated>
<atom:author>
<atom:name>ராம் பிரசாத்</atom:name>
<atom:uri>/api/author/615999</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>crime,murder,police</media:keywords>
<media:content height="270" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/cc4d2b58-feb7-471b-bab6-33a46d9afaf1/murder.jpg" width="480">
<media:title type="html">
<![CDATA[ Representation Image ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/cc4d2b58-feb7-471b-bab6-33a46d9afaf1/murder.jpg?w=280" width="280"/>
<category>crime</category>
<content:encoded>
<![CDATA[
<p>பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் தன் நண்பருடன் சுற்றுலாவுக்காக அந்தமான் தீவுகளுக்குச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அவரது கைது பின்னால் இருக்கும் தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருக்கின்றன. நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த தாயைக் கொலை செய்துவிட்டு தன் தம்பியைக் கொலை செய்யும் நோக்கில் தாக்கிவிட்டு நண்பருடன் அந்தமான் விரைந்துள்ளார் அம்ருதா. அவரது சகோதரர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-01/fdd2d4d4-eaaa-4618-b38d-fbe95df97e6c/cctv_camera_photo.jpg" /><figcaption>Representation Image</figcaption></figure><p>சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர். அம்ருதா ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அவர்கள் பயணித்த இருசக்கர வாகனம் இறுதியாக விமானநிலையத்தை அடைந்தது தெரியவந்தது. விமான நிலையத்தில் நடத்திய விசாரணையில் அம்ருதா மற்றும் அவரது நண்பர் ஸ்ரீதர் ராவ் இருவரும் பிப்ரவரி 2-ம் தேதி அந்தமானுக்கு டிக்கெட் புக் செய்துள்ளனர். இதையடுத்து பெங்களூரு காவல்துறையினர் தாயைக் கொலைசெய்துவிட்டு அந்தமானுக்குச் சுற்றுலா சென்ற அம்ருதாவையும் அவரது ஆண் நண்பரையும் கைது செய்தனர். கடன் பிரச்னை காரணமாக இந்தக் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது.</p><p>இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``அம்ருதா ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவரது தந்தையின் மருத்துவச் செலவுக்காக 2013-ம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் லோன் வாங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இருந்தும் அவரை இவர்களால் காப்பாற்ற முடியவில்லை. உரிய நேரத்தில் பணத்தைத் திரும்பச் செலுத்தாததால் கடன்தொகை பெருகியது. தற்போது 18 லட்சமாக இருக்கிறது. </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2019-09/bc5df9c9-98eb-4d8d-b688-7c90fa5ac952/f1fc5616-a71a-4b47-bdd8-d2f81dc80dfa.jpg" /><figcaption>Representation Image</figcaption></figure><p>இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன்காரணமாக வீட்டிலும் தன் தாய் நிர்மலாவுடன் பிரச்னை எழுந்துள்ளது. அம்ருதா 2017-ம் ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்வது இல்லை. வீட்டில் இருந்தபடியே சில புராஜெக்ட்களைச் செய்து கொடுத்துவந்துள்ளார். அவரது சகோதரர் ஹரீஷ் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார்.</p><p>கடன் பிரச்னையுடன் வாழ விரும்பாத அம்ருதா. தன் தாய் மற்றும் சகோதரனைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். பிப்ரவரி 2-ம் தேதி அதிகாலையில் வீட்டில் அலமாரி அருகே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. ஹரீஷ் கண் விழித்துப் பார்த்தபோது அம்ருதா உடைகளை எடுத்து பேக் செய்துள்ளார். ஹரீஷ் இதுகுறித்து கேட்டதற்கு சுற்றுலா செல்வதாகக் கூறியுள்ளார். ஹரீஷ் மீண்டும் உறங்கச் சென்றுவிட்டார். சில நிமிடங்களில் சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு தாய் நிர்மலாவைக் கொலை செய்துள்ளார். உறக்கத்தில் இருந்த ஹரீஷையும் கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் தாய் மற்றும் சகோதரனைத் தவிக்கவிட்டு விட்டு நண்பருடன் அந்தமான் பயணமாகியுள்ளார். இதையடுத்து கடுமையான காயங்களுடன் இருந்த ஹரீஷ் தன் உறவினருக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். பின்னர் அவர்கள் காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2019-05/efcfd4c7-cfd9-4260-aede-5ba54454519c/152379_thumb.jpg" /><figcaption>Representation Image</figcaption></figure><p>அம்ருதாவின் நண்பரான ஸ்ரீதர் ராவின் செல்போன் அழைப்புகளைக்கொண்டு அவரை ட்ரேஸ் செய்தோம். ஸ்ரீதருக்குக் கொலை குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. அம்ருதாவுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்துக்காக அவரைக் கைது செய்துள்ளோம். அவரது தற்கொலை முடிவு குறித்தும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்தமான் செல்வது குறித்து முன்னரே திட்டமிட்டுள்ளனர். மூன்று நாள்கள் அம்ருதாவுடன் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு எந்தச் சந்தேகமும் வரவில்லையா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. அம்ருதாவும் இந்தக் கொலையில் ஸ்ரீதரைச் சிக்கவைக்க விரும்பவில்லை. அம்ருதாவின் சகோதரர் ஹரீஷ் கூறியதும் அம்ருதா கூறுவதும் சற்று முரணாகத்தான் இருக்கிறது. விசாரணைக்குப் பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்றனர்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகச் செயல்படுகிறார் ஆட்சியர்?!' - தொடரும் சங்கராபுரம் தேர்தல் சர்ச்சை
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/local-bodies/sankarapuram-election-issue-sivaganga-collector-supports-ruling-party-alleges-congress
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/local-bodies/sankarapuram-election-issue-sivaganga-collector-supports-ruling-party-alleges-congress#comments
</comments>
<guid isPermaLink="false">1a9a8ab1-0d0e-44f8-9c34-ce3dc24d8463</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 16:40:09 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T16:40:09.953Z</atom:updated>
<atom:author>
<atom:name>அருண் சின்னதுரை</atom:name>
<atom:uri>/api/author/614285</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
ADMK,congress,controversy,district collector,local body election,sivaganga
</media:keywords>
<media:content height="628" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/637c6f16-2e91-45f3-84ce-7435046b87a7/IMG_20200204_WA0020.jpg" width="720">
<media:title type="html">
<![CDATA[ தேவி மாங்குடி ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/637c6f16-2e91-45f3-84ce-7435046b87a7/IMG_20200204_WA0020.jpg?w=280" width="280"/>
<category>local bodies</category>
<content:encoded>
<![CDATA[
<p>சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தேர்தலில் இரண்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கியதாகப் பெரும் சர்ச்சை ஏற்பட்டு, குழப்பம் நீடித்தது. </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/553570bd-cd2c-418e-8a76-e9862096bfc0/IMG_20200206_WA0021.jpg" /><figcaption>தேவி</figcaption></figure><p>அதிகாரிகள் செய்த தவறால் ஒரே ஊராட்சியில் இரண்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டு தேர்தல் முடிவு நாள் முதல் பிரச்னைகள் தொடங்கின. இவற்றைத் தொடர்ந்து முதலாவதாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் ஆதரவு வேட்பாளர் தேவி மாங்குடி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இதனால் அ.தி.மு.க ஆதரவு வேட்பாளர் பிரிதர்ஷினி அய்யப்பன் பதவியேற்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் நீதிபதிகள் அமர்வு, முதலாவதாகச் சான்றிதழ் பெற்ற தேவி மாங்குடிதான் வெற்றிபெற்றார். பிரியதர்ஷினி அய்யப்பன் பெற்ற சான்றிதழ் செல்லாது என உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து பிரியதர்ஷினி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம், தாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தேவி தரப்பினர் பதவியேற்கக் கூடாது என்று மனு அளித்தனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/261d6c4d-f991-49cf-a9fc-b2a3a150edba/IMG_20200204_WA0019.jpg" /><figcaption>பிரியதர்ஷினி அய்யப்பன்</figcaption></figure><p>இதன் அடிப்படையில் ஆட்சியர் ஜெயகாந்தன் தேவி மாங்குடி தரப்பினர் பதவி ஏற்பதை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து தேவியின் கணவர் மாங்குடியிடம் பேசினோம்.``நாங்கள் வெற்றிபெற்றதாக உயர்நீதிமன்ற கிளை நியாயமான தீர்ப்பை வழங்கியது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/85e26286-6cb0-4607-92e0-88e04083856e/IMG_20200107_WA0002.jpg" /><figcaption>மாங்குடி</figcaption></figure><p>அதன் உத்தரவு காப்பி கைக்கு கிடைக்கும் முன்னரே மாவட்ட ஆட்சியர், நாங்கள் தற்போது பதவி ஏற்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விரைவாகச் செயல்பட்டுள்ளார். இது வேதனையளிக்கிறது. மாவட்ட ஆட்சியர், ஆளும் கட்சி அழுத்தம் காரணமாகவே இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்பது தெரிகிறது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.</p><p>காங்கிரஸ் தொண்டர்கள், ``மாவட்ட ஆட்சியர் நடுநிலையாகச் செயல்படுவார் என்று நினைத்தோம். ஆனால், அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மட்டும்தான் செயல்பட்டுள்ளார். எங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுந்தரம் என்பவர்கூட அ.தி.மு.க., பக்கம் நின்று முழுமையாகப் பணியாற்றியிருக்கிறார். இது வருத்தமளிக்கிறது'' என்றனர். </p><p>இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பிரியதர்ஷினியின் கணவர் அய்யப்பன், ``தேர்தல் முடிவு அன்று ஒரு பண்டலை எண்ணாமல் வெற்றி அறிவிக்கப்பட்டது. பிறகு முறையாக எண்ணி, வெற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றக் கிளை முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டவர்கள்தான் பதவி ஏற்கவேண்டும் என கூறியுள்ளது. இதை எதிர்த்து, நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளோம். அதன், அடிப்படையிலேயே ஆட்சியர், பதவி ஏற்பை நிறுத்தி வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆட்சியர், நியாயமாகவே நடந்து கொண்டுள்ளார்'' என்றார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு!' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/education/secondary-school-students-drop-out-percentage-increased-in-tn
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/education/secondary-school-students-drop-out-percentage-increased-in-tn#comments
</comments>
<guid isPermaLink="false">88ee9fba-1d0d-4fb4-9c83-b39bcc4144f4</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 16:23:09 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T16:23:09.127Z</atom:updated>
<atom:author>
<atom:name>ராம் சங்கர் ச</atom:name>
<atom:uri>/api/author/689507</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>education,minister,school</media:keywords>
<media:content height="640" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/f14b43fb-0d45-4184-bfc6-2366e5644329/board_597238_960_720.jpg" width="960">
<media:title type="html">
<![CDATA[ Representational Image ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/f14b43fb-0d45-4184-bfc6-2366e5644329/board_597238_960_720.jpg?w=280" width="280"/>
<category>education</category>
<content:encoded>
<![CDATA[
<p>தமிழகத்தில், பள்ளி இடைநிற்றல் சதவிகிதம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் கடந்த மூன்றாண்டுகளில் 100 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது. </p><p>பள்ளிகளில் இடைநிற்கும் மாணவர்கள்குறித்து நாடாளுமன்ற மக்களவையில், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி-க்களான சுதாகர் துக்காராம் ஷ்ரங்கரே மற்றும் பி.பி.சௌத்திரி ஆகியோர் கேள்வி எழுப்பினர். எம்.பி-க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், ``வறுமை, பொருளாதாரமின்மை, குழந்தைகளின் மோசமான உடல்நிலை, மாற்றுத்திறன் மற்றும் பெற்றோர்கள் கல்வியை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதாதது போன்ற காரணங்களால், அவர்களால் படிப்பைத் தொடர முடிவதில்லை" என்று கூறியுள்ளார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/5bec087c-df90-4ab3-88be-7b5e5a696ca6/book_bindings_3176776_960_720.jpg" /><figcaption>கல்வி</figcaption></figure><p>மனிதவள மேம்பாட்டுதுறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் உயர்நிலை பள்ளிப் படிப்பைப் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல், 2015-2016-ம் கல்வி ஆண்டில் 8.1% ஆக இருந்தது. 2016-2017 -ம் கல்வி ஆண்டில் இந்த விகிதம் 10% ஆக உயர்ந்தது. 2017-2018-ம் கல்வி ஆண்டில் 16.2% ஆக அதிகரித்தது. 2015-2016-ம் கல்வி ஆண்டை ஒப்பிடுகையில் இது 100 சதவிகிதம் அதிகம் ஆகும். தமிழகத்தில், தொடக்கநிலை அளவில் மாணவர்கள் இடைநிற்றல் 2017-2018 -ம் கல்வி ஆண்டில் 5.9% ஆக உள்ளது.</p><p>ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்துவரும் நிலையில், கல்வியில் முன்னோடியாகத் திகழும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், 9 மற்றும் 10-ம் வகுப்பு அளவில் படிக்கும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/tamilnadu/nattakkal-irular-village-people-struggle-for-road">`4 கிலோமீட்டர் சாலைக்கு 8 ஆண்டு போராட்டம்!'- கேள்விக்குறியாகும் பழங்குடி குழந்தைகளின் கல்வி</a></p><p>இதுதொடர்பாக மூத்த கல்வியாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி நம்மிடம் பேசியபோது, ``இந்தப் புள்ளிவிவரங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைக் கொண்டுவந்தது முக்கியமான பிரச்னையாக உள்ளது. மற்ற நாடுகளில் இரண்டாவது மொழியை 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது இல்லை. ஆனால், நமது நாட்டில் தாய் மொழியை கற்றுக்கொள்வதற்கு முன்பே இரண்டாவது மொழியை சொல்லித்தருகின்றனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/74354577-e959-4259-8e9c-1c77e2ad180b/vikatan_2019_05_dfeab9a5_6c3b_42c6_b3e4_c8b7394bde9e_p17.jpg" /><figcaption>பேராசிரியர். பிரபா கல்விமணி</figcaption></figure><p>அரசுப் பள்ளிகளில் யாருடைய கவனிப்பும் இல்லாத குழந்தைகள்தான் சுய முயற்சியில் படிக்கிறார்கள். அவர்களுக்கு மற்ற மொழியை ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுக்கும்போது கல்வியிலிருந்து விலகும் மனநிலை ஏற்படுகிறது. குறிப்பாக, இந்தக் காரணத்தால் பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்கள் அதிகமாக படிப்பை பாதியிலேயே விட்டுவிடுகின்றனர். ஏழ்மை, பொருளாதாரம் போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக இருந்தாலும், பிரதான காரணமாக மொழிதான் இருக்கிறது. இடையிலேயே படிப்பை விட்டுவிட்டால் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவந்து படிக்கவைப்பது கஷ்டம். எனவே, மாணவர்களின் கல்விக்காக ஆசிரியர்கள் உட்பட பலரும் முன்வந்து பேச வேண்டும்" என்றார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/social-affairs/education/madurai-student-speaks-various-issues-in-un">``நீட் தேர்வை தடை பண்ணணும்; அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்கணும்!"- ஐ.நா-வில் முழங்கிய மதுரை மாணவி </a></p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
சென்னை மருத்துவ மாணவர் கைது! -வேகமெடுக்கும் நீட் தேர்வு மோசடி வழக்கு
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/crime/cbcid-arrested-one-more-student-in-neet-scam
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/crime/cbcid-arrested-one-more-student-in-neet-scam#comments
</comments>
<guid isPermaLink="false">98aafbe8-c68c-499e-8feb-19767aabb428</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 16:22:35 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T16:22:35.862Z</atom:updated>
<atom:author>
<atom:name>எம்.கணேஷ்</atom:name>
<atom:uri>/api/author/615742</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
Theni,cbcid,NEET,arrest,student,government medical college
</media:keywords>
<media:content height="720" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/beab8e42-ed56-4b69-8b47-0f8dd5319060/IMG_20190929_WA0013.jpg" width="1280">
<media:title type="html">
<![CDATA[ தேனி சிபிசிஐடி அலுவலகம் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/beab8e42-ed56-4b69-8b47-0f8dd5319060/IMG_20190929_WA0013.jpg?w=280" width="280"/>
<category>crime</category>
<content:encoded>
<![CDATA[
<p>நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/18c654db-5f62-4766-ad03-f4d9e91801de/IMG_20190930_WA0009.jpg" /><figcaption>தேனி சிபிசிஐடி அலுவலகம்</figcaption></figure><p>Also Read: <a href="https://www.vikatan.com/government-and-politics/medicine/two-theni-persons-who-were-return-from-china-under-intense-surveillance">`சீனாவிலிருந்து திரும்பினர்; கொரோனா அச்சம்!'- தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இருவர்</a></p><p>இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைத்தது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து, தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸார் தொடர் விசாரணை செய்து, இதுவரை 5 மாணவர்கள், 6 மாணவர்களின் பெற்றோர்கள், ஒரு இடைத்தரகர் என அடுத்தடுத்து கைது செய்தனர்.</p><p>இவர்கள் அனைவருக்கும் மூளையாகச் செயல்பட்ட இடைத்தரகர் ரஷித் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், விசாரணையின் தொடர்ச்சியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரன் என்ற மருத்துவ மாணவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார், பிடித்து இன்று மாலை தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவக்கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையில், நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, அவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்தனர். இன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/a800b2ad-3f1f-42d6-917d-c5e01677444e/IMG_20191012_WA0017.jpg" /><figcaption>தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்</figcaption></figure><p>Also Read: <a href="https://www.vikatan.com/government-and-politics/news/impersonation-in-neet-exam-student-in-investigation-ring">மகாராஷ்டிராவில் தேர்வு; தேனி மருத்துவக் கல்லூரியில் சீட்!-நீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள்மாறாட்டம்?</a></p><p>டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கில், அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடரும் நிலையில், நீண்ட நாள்களாகத் தூங்கிக்கொண்டிருந்த நீட் வழக்கில், ஒரு மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`இனி நாங்கள் எப்படி கட்சிப் பணியாற்ற முடியும்?' - கொதிக்கும் வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள்
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/politics/salem-veerapandi-raja-supporters-staged-protest-against-dmks-move
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/politics/salem-veerapandi-raja-supporters-staged-protest-against-dmks-move#comments
</comments>
<guid isPermaLink="false">dabb060f-78b9-49d4-803f-f1ce4379ea46</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 16:07:14 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T16:07:14.193Z</atom:updated>
<atom:author>
<atom:name>வீ கே.ரமேஷ்</atom:name>
<atom:uri>/api/author/614334</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>DMK,politics,tamilnadu politics,Veerapandi Raja</media:keywords>
<media:content height="593" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/accebc32-0bb7-49db-bc67-9d38de09e05b/Screenshot_20200206_114031_WhatsApp.jpg" width="1071">
<media:title type="html">
<![CDATA[ வீரபாண்டி ராஜா ஆதரவாளர்களின் போராட்டம் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/accebc32-0bb7-49db-bc67-9d38de09e05b/Screenshot_20200206_114031_WhatsApp.jpg?w=280" width="280"/>
<category>politics</category>
<content:encoded>
<![CDATA[
<p>சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவியிலிருந்து வீரபாண்டி ராஜா நீக்கப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவ
]]>
<![CDATA[
ாளர்கள் தொடர்ந்து 3வது நாளாக ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள், ``கலைஞர் மகன் ஸ்டாலின், கட்சித் தலைவர். ஸ்டாலின் மகன் உதயநிதி மாநில இளைஞரணி செயலாளர். இது நியாயம். ஆனால், சேலம் வீரபாண்டியார் மகன் ராஜா மாவட்டப் பொறுப்பாளராக இருப்பது அநியாயமா?'' என்ற கோஷங்களை எழுப்பி தங்கள் உறுப்பினர் அட்டையைக் கிழித்து எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்கள். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/ae14b550-ff05-4ed9-a0f4-270163ff1972/VERAPANDI__RAJA.JPG" /><figcaption>ராஜா</figcaption></figure><p>தி.மு.க தலைமை கழகம் வீரபாண்டி ராஜாவை சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு தி.மு.க தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவியை அளித்தது. அதையடுத்து ராஜாவின் ஆதரவாளர்களான கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், தகவல் தொழில்நுட்ப அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் எனப் பலரும் கட்சியை விட்டு விலகி இருக்கிறார்கள்.</p><p>சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தி.மு.க அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது திலிப் என்பவர் தீக்குளிக்க முயன்றார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் தடுத்து அவரைக் காப்பாற்றினர். திலிப்பிடம் பேசினோம்.``நான் வீரபாண்டியாரின் தீவிரத் தொண்டன். ஓசூரிலிருந்து நாமக்கல் வரை தி.மு.க என்ற கட்சியை வளர்த்தவர் எங்க வீரபாண்டியார். அவருடைய மகன் ராஜா அண்ணன் வகித்து வந்த மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். இனி நாங்கள் எப்படி கட்சிப் பணியாற்றுவோம்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/9fbea270-d3c6-48ce-87c5-af75e2f6a44d/IMG_20200205_WA0164.jpg" /><figcaption>திலிப்</figcaption></figure><p>உண்மையாகவும், நேர்மையாகவும் கட்சிப் பணியாற்றிய ராஜா அண்ணனை மாவட்டப் பொறுப்பிலிருந்து நீக்கியது எந்த விதத்தில் நியாயம்? சில ஒன்றியச் செயலாளர்கள் செய்த தவறுக்கு அண்ணன் எப்படிப் பொறுப்பேற்க முடியும். கட்சித் தலைமையின் இந்தச் செயல் எங்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. தலைமை ஆலோசனை செய்து மீண்டும் ராஜா அண்ணனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்க வேண்டும்'' என்றார்.</p><p>வாழப்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்டப் பிரதிநிதி பாலாஜி, ``சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து ராஜா அண்ணனை நீக்கியதையடுத்து தி.மு.கவிலிருந்து பலரும் வெளியேறி இருக்கிறோம். மூத்த நிர்வாகிகளான அத்தனூர்பட்டி ராமச்சந்திரன், பழனியாப்புரம் மாது, வாழப்பாடி கோபிநாத், ஆத்தூர் சுரேஷ் போன்றவர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டையைக் கிழித்துப் போட்டிருக்கிறார்கள்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/5f39b5ec-d7f7-4f3a-86b7-64be3608e34d/IMG_20200205_WA0185.jpg" /><figcaption>ஆர்ப்பாட்டம்</figcaption></figure><p>ராஜா அண்ணனைத் தலைமை நீக்கியது தவறான முடிவு. இதனால், சேலத்தில் தி.மு.க பெரும் சரிவைச் சந்திக்கும். அதனால் மீண்டும் ராஜா அண்ணனை கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும்'' என்றார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
பிப்.7 தேரோட்டத்துக்குத் தயாராகும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்! - களைகட்டும் தை தேர் திருவிழா
</title>
<link>
https://www.vikatan.com/spiritual/temples/srirangam-nam-perumal-chariot-festival
</link>
<comments>
https://www.vikatan.com/spiritual/temples/srirangam-nam-perumal-chariot-festival#comments
</comments>
<guid isPermaLink="false">632c48fe-e03f-4146-b8e1-c389f614be0a</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 15:25:22 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T15:25:22.286Z</atom:updated>
<atom:author>
<atom:name>எஸ்.கதிரேசன்</atom:name>
<atom:uri>/api/author/614652</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>festival,srirangam temple,devotees,Chariot</media:keywords>
<media:content height="399" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/3e0e964e-5b62-44ab-bcf4-65a6aa9a4666/sriranganathar_srirangam.jpg" width="539">
<media:title type="html">
<![CDATA[ ரங்கநாதர் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/3e0e964e-5b62-44ab-bcf4-65a6aa9a4666/sriranganathar_srirangam.jpg?w=280" width="280"/>
<category>temples</category>
<content:encoded>
<![CDATA[
<p>திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், `பூலோக வைகுண்டம்' என்னும் பெருமையைப் பெற்ற திருத்தலம். வைணவர்களின் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான திருத்தலம் இது. பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், `மங்களாசாசனம்' செய்த திருத்தலம். ஏழு பிராகாரங்கள், 21 கோபுரங்கள், 156 ஏக்கர் பரப்பளவு எனப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கோயில் இது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/a0f33fab-e80b-4f5d-80cf-7b7bf369b303/Srirangam5.jpg" /><figcaption>Srirangam</figcaption></figure><p>ஶ்ரீமன் நாராயணன் தானே பிரியப்பட்டுத் தோன்றியருளிய எட்டுத் திருக்கோயில்களில் (ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்கள்) பெரும்புகழ்பெற்ற முதன்மைக் கோயில் ஶ்ரீரங்கம்.</p><p>வைஷ்ணவப் பேச்சுவழக்கில் ``கோயில்” என்ற சொல் ஶ்ரீரங்கத்தை மட்டுமே குறிக்கும். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரண்டு நதிகளும் மாலையைப் போல் பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டுள்ளன.</p><p>ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் நம்பெருமாள் தை தேர் திருவிழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு தை தேர் திருவிழா கட்ந்த 30- ம்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/4de1e79d-3a4f-4684-8a90-f9c9925e1a09/Srirangam_cauvery.jpg" /><figcaption>Srirangam</figcaption></figure><p>இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தை தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளும் நிகழ்வு நாளை நடக்கிறது. தைத் தேர் திருவிழா முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை பிப்ரவரி 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்.</p><p>நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு தை தேர் மண்டபத்தைச் சென்றடைவார். காலை 6 மணிக்கு தேர், வடம் பிடித்து இழுக்கப்படும். இதில் தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/3338de65-387c-4c37-a1c0-3d41b3dca579/ramanujar.jpg" /><figcaption>Ramanujar</figcaption></figure><p>8-ந்தேதி சப்தாவரணம், 9-ந்தேதி ஆளும்பல்லக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`2 ரூபாய்க்குக் கற்றாழை நாப்கின்!' - அசத்தும் திருச்சி மாணவர்கள்
</title>
<link>
https://www.vikatan.com/news/tamilnadu/trichy-students-designed-napkins-by-using-aloe-vera
</link>
<comments>
https://www.vikatan.com/news/tamilnadu/trichy-students-designed-napkins-by-using-aloe-vera#comments
</comments>
<guid isPermaLink="false">a710f222-863a-4d0e-9883-4ceb2f805714</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 15:24:00 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T15:24:00.504Z</atom:updated>
<atom:author>
<atom:name>சி.ய.ஆனந்தகுமார்</atom:name>
<atom:uri>/api/author/614381</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>medicine,college students,trichy,napkin,natural</media:keywords>
<media:content height="720" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/7944d1cb-5827-4a0e-b256-bf0f01c9d627/PicsArt_02_06_12_00_18.jpg" width="1280">
<media:title type="html">
<![CDATA[ சீமைக் கற்றாழை நாப்கினுடன் மாணவர்கள் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/7944d1cb-5827-4a0e-b256-bf0f01c9d627/PicsArt_02_06_12_00_18.jpg?w=280" width="280"/>
<category>Tamilnadu</category>
<content:encoded>
<![CDATA[
<p>கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் புராஜெக்ட் தயாரிப்பது வழக்கம். அந்த வகையில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களான புவனேஷ்வரி, சாம்ராய் டெரன்ஸ், வைரவன், பரணிதரன் ஆகியோர் அவர்களின் பேராசிரியர்களான செந்தில்குமார், பிரான்ஸிஸ் சேவியர் வழிகாட்டுதலில், இயற்கை முறையில் நாப்கின் தயாரித்தல் எப்படி எனத் தேட ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர்களின் தேடலில், மலைகிராமங்களில் வசிக்கும் பெண்கள் தங்களுடைய மாதவிடாய்க் காலங்களில் சீமைக் கற்றாழை நார்களைத் துணிகளுடன் வைத்துப் பயன்படுத்தியது தெரியவந்தது. </p><p>இதையே தங்களின் புராஜக்டா எடுத்துக்கொண்ட மாணவர்கள், 2 ரூபாய் செல்வில் நாப்கின் தயாரித்து அசத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய புவனேஷ்வரி,``சீமைக் கற்றாழை செடிகளிலிருந்து முதலில் நார்களைப் பிரித்து எடுத்தோம். அந்த நார்கள் மிகவும் கடினமாக இருப்பதால், அதை சோடியம் ஹைட்ராக்சைடில் நனைக்கும்போது இலகுவாக மாறிவிடும். தொடர்ந்து அந்த நார்களையும், பஞ்சுகளையும் வைத்து நாப்கின்கள் தயாரிக்கிறோம். தொடர்ந்து அதை யூவி எனப்படும் புற ஊதாக் கதிர்களின் உதவியுடன் சுகாதாரமான முறையில் தரம் உயர்த்துகிறோம்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/crime/husband-killed-his-wife-for-dowry-issues-in-trichy">`வேலைக்குப் போகச் சொல்லி சத்தம் போட்டாள்!'- திருச்சி கர்ப்பிணிப் பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கொடூரம்</a></p> <p>சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நாப்கின்கள் 7 எம்.எல் வரை ஈரத்தன்மையைத் தாங்கும். ஆனால், எங்களின் கற்றாழை நாப்கின்13 எம்.எல் வரை ஈரத்தன்மையை உறிஞ்சும் தன்மை கொண்டது. இவற்றை எப்.டி.ஐ.ஆர் எனப்படும் ஈரப்பதம் உறிஞ்சும் சோதனையில் கண்டறிந்துள்ளோம். மேலும், இதைப் பயன்படுத்துவதில் எவ்விதப் பக்க விளைவுகளும் இல்லை.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/76e4bad5-c889-44f4-82e7-5f5b3016c264/PicsArt_02_06_12_02_10.jpg" /><figcaption>சீமைக் கற்றாழை நாப்கினுடன் மாணவர்கள்</figcaption></figure><p>மாதவிடாய்க்காலங்களில் பெண்களின் உடல்நிலை மிகவும் பலவீனமாக இருக்கும். அப்போது ஏற்படும் நோய்க் கிருமிகளை சீமைக் கற்றாழை அழிக்கும் தன்மை கொண்டது. சாதாரண நாப்கின் பயன்படுத்தும்போது ஏற்படும் அலர்ஜி, இந்த நாப்கினைப் பயன்படுத்தும்போது ஏற்படாது. மேலும், நாப்கினை மட்டுமல்ல, அதைத் தயாரிக்கும் இயந்திரத்தையும் நாங்களே வடிவமைத்துள்ளோம். இதன் விலை 15,000 ரூபாய்தான்.</p><p>தற்போது கடைகளில் வழக்கமான முறையில் தயாரிக்கப்பட்ட நாப்கின்கள் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், நாங்கள் தயாரிக்கும் நாப்கினுக்குச் செலவே 2 ரூபாய்தான். இந்த நாப்கின்களை கிராமப்புறப் பெண்களுக்கும் பின்தங்கியவர்களுக்கும் பயனுள்ள வகையில் கொண்டு சேர்ப்பதுதான் எங்களின் நோக்கம்” என்றார்.</p><p>தொடர்ந்து பேசிய உதவிப் பேராசியர் பிரான்ஸிஸ் சேவியர், ``என்னுடைய ஆய்வில், ஒரு பாகம் இயற்கை முறையிலான நாப்கின் தயாரிப்பது. இதுகுறித்து எனது ஆய்வறிக்கையைக் கடந்த ஆண்டு, அரசுக்கு அனுப்பி, இயற்கை நாப்கினை 50,000 கிராமங்களுக்குப் பயன்பெறும்வகையில் தயாரித்திட உதவி கோரினேன். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/f2fca223-f567-4d3b-a2f1-8860b5a7bfaa/WhatsApp_Image_2020_02_06_at_2_17_51_PM__1_.jpeg" /><figcaption>மாணவர்களுடன் உதவிப் பேராசியர் பிரான்ஸிஸ் சேவியர்</figcaption></figure><p>அது கிடைக்கவில்லை. அவற்றை அப்படியே விட்டுவிட மனமில்லை. எனது ஆய்வின் தொடர்ச்சியை மாணவர்கள் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளோம். இதற்குக் கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், துறைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மிகவும் வழிகாட்டினார்கள். மேலும், எனது வழிகாட்டுதலில் இந்த புராஜெக்டைச் செய்த புவனேஷ்வரி, சாம்ராய் டெரன்ஸ், வைரவன், பரணிதரன் மட்டுமல்லாமல், அவர்களுடன் சால்வியா எனும் மாணவியும் ஆர்வமாக உதவி செய்தார்.</p> <aside><cite>உதவிப் பேராசியர் பிரான்ஸிஸ் சேவியர்</cite>வழக்கமான நாப்கின்கள் மக்குவதற்குச் சுமார் 800 ஆண்டுகள் தேவைப்படுகிறது என்கிறார்கள். ஆனால், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த நாப்கின் ஒரு வாரத்தில் மக்கி உரமாகிவிடும்.</aside><p>வழக்கமான நாப்கின்கள் மக்குவதற்கு சுமார் 800 ஆண்டுகள் தேவைப்படுகிறது என்கிறார்கள். ஆனால், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த நாப்கின் விரைந்து மக்கும் தன்மைகொண்டது. அதனால், ஒரு வாரத்தில் மக்கி உரமாகிவிடும். ஏதோ ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றில்லாமல், சமூகத்துக்குத் தேவையான பெண்களின் நலனில் அக்கறைகொண்டு எங்கள் மாணவர்கள் கண்டறிந்த கற்றாழை நாப்கினை, கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்களுக்கும் சுயதொழில் செய்யக்கூடிய திருநங்கைகளுக்கும் கிராமப்புற மகளிருக்கும் கொண்டு போய்ச் சேர்த்திட முடிவு செய்துள்ளோம்” என்றார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`பா.ஜ.க எழுதிக் கொடுத்ததை ரஜினி வெளிப்படுத்தியிருக்கிறார்!' - முத்தரசன் விமர்சனம்
</title>
<link>
https://www.vikatan.com/news/politics/mutharasan-slams-rajini-over-caa-remarks
</link>
<comments>
https://www.vikatan.com/news/politics/mutharasan-slams-rajini-over-caa-remarks#comments
</comments>
<guid isPermaLink="false">22a6aff7-23c7-4040-acd8-b8f2092afa87</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 15:19:11 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T15:19:11.585Z</atom:updated>
<atom:author>
<atom:name>இரா.மோகன்</atom:name>
<atom:uri>/api/author/614432</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
rajini,mutharasan,darbar,citizenship amendment bill 2019
</media:keywords>
<media:content height="993" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/09f0cec5-8902-46fb-a31e-cbf919359cde/muttharasan.jpg" width="1206">
<media:title type="html">
<![CDATA[ முத்தரசன் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/09f0cec5-8902-46fb-a31e-cbf919359cde/muttharasan.jpg?w=280" width="280"/>
<category>politics</category>
<content:encoded>
<![CDATA[
<p>ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று ராமநாதபுரம் வந்திருந்தார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,``ரஜினிகாந்த் நல்ல நடிகர். ஆனால், அவரது நடிப்பினை இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், அவர் நடித்து வெளிவந்த 'தர்பார்' படம் ஓடவில்லை. இதனால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் ரஜினியை சந்திக்க முயன்றும் முடியவில்லை. இதனால் அவர்கள் ரஜினிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/09f0cec5-8902-46fb-a31e-cbf919359cde/muttharasan.jpg" /><figcaption>முத்தரசன்</figcaption></figure><p>சினிமாவில் இயக்குநர்கள் நடித்துக் காட்டுவதை, தனது நடிப்பாக வெளிப்படுத்தும் ரஜினிகாந்த், அவர்கள் எழுதித்தரும் வசனங்களையே பேசுவார். அதைப்போன்றே குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் அவராகப் பேசவில்லை. அவரை இயக்கும் பாரதிய ஜனதா கட்சியினர் எழுதிக் கொடுத்தவற்றை, தனது கருத்தாக வெளியிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்தை தமிழகத்தில் உள்ள பா.ஜ.க-வினரைத் தவிர வேறு யாரும் ஏற்கவில்லை; பாராட்டவில்லை.</p><p>அரசியலைப் பொறுத்தமட்டில், தனது படங்கள் வெளியாகும் நேரங்களில் மட்டும் பேசும் ரஜினி, இன்னும் கட்சியைத் தொடங்கவில்லை. கட்சியை அவர் தொடங்கப்போவதும் இல்லை. அவர் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவார் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம். அவர் நிச்சயம் வரமாட்டார். கட்சி என்ற குழந்தையைப் பெற தயாராக இல்லை. இந்நிலையில், பிறக்காத குழந்தைக்கு எங்கே பெயர் வைக்கப்போகிறார்?</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/5864a374-312b-44f4-bacf-b97881b528ff/tnpsc.jpg" /><figcaption>டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு</figcaption></figure><p>தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் நடந்த முறைகேடுகளில் இதுவரை சில சுண்டெலிகளே சிக்கியுள்ளன. பெருச்சாளிகள் தப்பிவிட்டன. இதுபோன்ற வழக்குகளில் எப்பொழுதும் அவை சிக்கவும் செய்யாது. அரசியல் பெரும்தலைகள் தலையீடு இல்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, சி.பி.ஐ அமைப்பிடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும். அதில்கூட உண்மை வெளிவருமா எனத் தெரியாது. ஏனெனில் சி.பி.ஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற ஜனநாயக அமைப்புகள் எல்லாம் பா.ஜ.க தலைமை சொல்வதைச் செய்வதையே வழக்கமாகக்கொண்டு இயங்கிவருகின்றன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளுமே மோடி அரசினால் சீர்குலைக்கப்பட்டுள்ளன'' என்றார். </p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`இடஒதுக்கீட்டிலிருந்து எங்களுக்கு விலக்கு கொடுங்கள்' - மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் ஐ.ஐ.எம்
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/education/iim-asks-for-exemption-from-reservation-in-teacher-cadres
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/education/iim-asks-for-exemption-from-reservation-in-teacher-cadres#comments
</comments>
<guid isPermaLink="false">f3c8f503-49ff-422d-9b20-db44812ba119</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 14:48:10 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T14:48:10.646Z</atom:updated>
<atom:author>
<atom:name>ஐஷ்வர்யா</atom:name>
<atom:uri>/api/author/615505</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
Indian Institutes of Management,education,reservation in india,10 Percent Reservation
</media:keywords>
<media:content height="600" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/1a51986e-1957-4284-9990-508a828e2593/172943_reservation.jpg" width="1000">
<media:title type="html">
<![CDATA[ இடஒதுக்கீடு ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/1a51986e-1957-4284-9990-508a828e2593/172943_reservation.jpg?w=280" width="280"/>
<category>education</category>
<content:encoded>
<![CDATA[
<p>ஐ.ஐ.டி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களைப் போலவே மத்திய அரசால் தொடங்கப்பட்டது, ஐ.ஐ.எம் எனும் இந்திய மேலாண்மை நிறுவனம். டெல்லி, அகமதாபாத், ஜம்மு, சென்னை, திருச்சி உட்பட, இந்தியாவில் 20 இடங்களில் நிறுவப்பட்டிருக்கும் இந்த ஐ.ஐ.எம்-கள் தங்களுக்கு இடஒதுக்கீட்டு முறையிலான ஆசிரியர் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்திய மேலாண்மைக் கழகங்களின் ஆசிரியர்களில் 90 சதவிகிதம் பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. </p><aside><cite></cite>இந்திய மேலாண்மைக் கழகங்களின் ஆசிரியர்களில் 90 சதவிகிதம் பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.</aside><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/f4035607-a6db-437c-91f2-583c64f371cf/IIMBG.jpg" /><figcaption>ஐ.ஐ.எம். போத் கயா</figcaption></figure><p>அமைச்சகத்துக்குக் கடந்த வாரம் அனுப்பிய கடிதத்தில், இந்திய மேலாண்மைக் கழகங்களையும் சிறப்பு அந்தஸ்து கல்விக் கழகங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளும்படியும், அப்படி சேர்க்கப்படும் நிலையில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கத் தேவை இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது. ஐ.ஐ.எம்-களைப் பொறுத்தவரை எஸ்.சி பிரிவுக்கு 15 சதவிகிதமும் எஸ்.டி பிரிவுக்கு 7.5 சதவிகிதமும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகிதமும் பொருளாதார அடிப்படையில் 10 சதவிகிதமும் ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு செய்ய வேண்டும்.</p><p>பெரும்பாலான மேலாண்மைக் கழகங்களில் இது பின்பற்றப்படாத நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு மத்திய அரசு இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றக் கோரி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், 1970-களில் பெர்சனல் மற்றும் பயிற்சித்துறையின் (அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை) கடிதத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகப் பதவிகளுக்கு இடஒதுக்கீடு செல்லாது எனக் குறிப்பிட்டிருந்ததைக் காரணம் காட்டி, உத்தரவை அமல்படுத்த மறுத்தது. இருந்தாலும் இதற்கு மறுமொழி அளித்துக் கடிதம் ஒன்றை அனுப்பிய தற்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், இதற்கு முன்பு பிறப்பித்த எந்த உத்தரவுகளும் செல்லாது, இனி இந்த உத்தரவே செல்லும் எனக் குறிப்பிட்டு, இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த நிர்பந்தித்தது. </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/eb7a08c6-1802-42ae-85fe-18c763b0850d/IIM_Calcutta_Auditorium_1.jpg" /><figcaption>ஐ.ஐ.எம் கொல்கத்தா</figcaption></figure><p>இனி, எதிர்காலத்தில் நியமிக்கப்படும் எந்தவொரு ஆசிரியரும் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கடுத்து கடிதம் அனுப்பிய ஐ.ஐ.எம் மத்தியக் கல்வி நிறுவனங்கள் சட்டம் 2019 (ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு) பிரிவைத் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அதில், உட்பிரிவு 4-ன்படி சிறப்பு அந்தஸ்து கல்வி நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், தேசியப் பாதுகாப்பு மற்றும் திட்டமிடல் துறை சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுவரை டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச், தேசிய மூளை ஆய்வு நிறுவனம், ஹோமி பாபா தேசிய கல்வி நிறுவனம் மற்றும் அதன் 10 துணை நிறுவனங்கள் ஆகிய சில நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`கைக்கு வந்ததை விட்டுவிட்டார்கள்!' - புலம்பும் பேராவூரணி தி.மு.க விசுவாசிகள்
</title>
<link>
https://www.vikatan.com/news/politics/peravurani-dmk-cadres-raises-questions-to-party-officials-over-local-body-election
</link>
<comments>
https://www.vikatan.com/news/politics/peravurani-dmk-cadres-raises-questions-to-party-officials-over-local-body-election#comments
</comments>
<guid isPermaLink="false">afddded7-08a3-4c99-83c9-5e10db86565b</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 14:22:30 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T14:22:30.408Z</atom:updated>
<atom:author>
<atom:name>கே.குணசீலன்</atom:name>
<atom:uri>/api/author/614373</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>stalin,admk,politics,dmk,local body election</media:keywords>
<media:content height="450" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/973f3267-7e84-40cb-a99e-4be4fb1e11fa/f78100f4_3228_4491_90eb_de18559b19a9.jpg" width="800">
<media:title type="html">
<![CDATA[ பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/973f3267-7e84-40cb-a99e-4be4fb1e11fa/f78100f4_3228_4491_90eb_de18559b19a9.jpg?w=280" width="280"/>
<category>politics</category>
<content:encoded>
<![CDATA[
<p>`பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தைக் கைப்பற்றுவதற்கு தி.மு.க நிர்வாகிகள் முறையாகச் செயல்படவில்லை. அத்துடன் பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு எதிர்த்தரப்பைச் சேர்ந்த மற்றொருவருக்கு ஒன்றிய கவுன்சிலர்களை வாக்களிக்கச் செய்தனர். இதனால்தான் ஒன்றிய சேர்மன் பதவியை அ.தி.மு.க கைப்பற்றிவிட்டது. இதுதொடர்பாக தலைவர் ஸ்டாலினுக்குப் புகார் அனுப்பப் போகிறோம்' என்கிறார்கள் டெல்டா மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/f5af9f37-9ceb-4a23-b9c6-c83e202bdd2d/a375e9c7_000b_4cc7_b3c0_a6c6a170388f.jpg" /><figcaption>மறைமுகத் தேர்தல்</figcaption></figure><p>`தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 12-க்கான சேர்மன் பதவியை தி.மு.க கைபற்றியுள்ளது. இதில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தைத் தவிர மீதம் உள்ள பதிமூன்றையும் தி.மு.க கைப்பற்றும் நிலையே இருந்தது. இதில், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் தி.மு.கவின் மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் ஆகியோரின் தவறான செயல்பாடுகளால் அ.தி.மு.கவின் கைக்குப் போய்விட்டது' எனத் தி.மு.க விசுவாசிகள் சிலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.</p><p>இதுகுறித்து தஞ்சை மாவட்ட தி.மு.கவினரிடம் பேசினோம். ``தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியான பேராவூரணி எப்போதும் அ.தி.மு.க-வுக்குச் செல்வாக்கு மிகுந்த பகுதி. இதன் ஒன்றியச் செயலாளராக இருப்பவர் துரை.மாணிக்கம். அ.தி.மு.க சார்பில் ஒன்றிய கவுன்சிலராக வெற்றிபெற்ற இவர், ஒன்றிய சேர்மன் பதவிக்குப் போட்டியிடவும் தயாரானார். ஆனால், அப்பகுதி எம்.எல்.ஏ கோவிந்தராஜ் மற்றும் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் ஆகியோர் சசிகலா என்பவரை முன்னிறுத்தி, அவருக்கு சிபாரிசு செய்தனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/556c3612-6ca1-4381-8cad-2621b4a30be4/vikatan_2020_01_4f9771a1_6eaf_4778_9c67_9dd39f84b80c_d7fa2e18_053b_4e6b_8582_d33630e773ba.jfif" /><figcaption>துரை.மாணிக்கம்</figcaption></figure><p>இதனால், விரக்தியடைந்த துரை.மாணிக்கம் தி.மு.கவுக்குத் தாவுவதற்குத் தயாரானார். இந்தநிலையில் தி.மு.க ஒன்றியச் செயலாளரான அன்பழகன், அ.தி.மு.கவைச் சேர்ந்த மாலா போத்தியப்பனை ஆதரிக்குமாறு தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களிடம் தெரிவித்திருந்தார். முதலில் நடந்த மறைமுகத் தேர்தலில் இருதரப்புமே வாக்களிக்க வராததால், கடந்த 30ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.கவைச் சேர்ந்த சசிகலா என்பவர் ஒன்றிய சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.</p><p>இதற்கிடையில் துரை.மாணிக்கம் தி.மு.க ஒன்றியச் செயலாளர் அன்பழகன் மற்றும் மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோரை அணுகி, `என்னுடன் சேர்த்து ஒன்றிய கவுன்சிலராக வெற்றிபெற்ற மொத்தம் 4 பேர் தி.மு.க-வுக்கு வந்து விடுகிறோம். எனக்கு சேர்மன் பதவியும், நீங்கள் துணை சேர்மன் பதவியும் வைத்துக் கொள்ளலாம்' என டீல் பேசினார். இதை துரை.சந்திரசேகரன், தி.மு.கவின் தலைமைக்குக் கொண்டு செல்லாததோடு பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தைப் பிடிக்க முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பேராவூரணி தி.மு.கவின் கையைவிட்டுச் சென்றது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/04d99413-0166-486f-aa7c-956e13990f37/vikatan_2020_01_e8939d4e_eece_4aa7_88f2_3e5cb2e7c318_7303637b_6eda_4e74_a44e_da8015068237.jfif" /><figcaption>மாலா போத்தியப்பன்</figcaption></figure><p>அத்துடன் செல்வாக்கு மிகுந்த அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் துரை.மாணிக்கம், தானே வழிய வந்து தி.மு.கவிற்கு வருகிறேன் எனக் கூறியிருக்கிறார். அவரை தி.மு.கவிற்குள் கொண்டு வந்திருந்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவிற்குப் பெரும் பலம் ஏற்பட்டிருக்கும். இது ஒருபுறம் இருக்க மறைமுகத் தேர்தலில் அ.தி.மு.கவைச் சேர்ந்த மாலா போத்தியப்பனுக்கு வாக்களிக்க தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர் அன்பழகனும், துரை.சந்திரசேகரனும். இதற்காகப் போத்தியப்பனிடமிருந்து அன்பழகன் பெரியதொகையைப் பெற்றுக்கொண்டு, அதில் சந்திரசேகரனுக்கும் பங்கு கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.</p><p>பணத்திற்கு ஆசைப்பட்டு செயல்பட்டதால் ஊராட்சி ஒன்றியமும் போய்விட்டது; மாற்றுக் கட்சியிலிருந்து தி.மு.கவிற்கு வருவதற்குத் தயாராக இருந்தவர்களும் கைநழுவிப் போயினர். இதைத் தலைவர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகக் கடிதமாக எழுதி அனுப்ப இருக்கிறோம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என அவர் விசாரிக்க வேண்டும். அதுதான் எங்களைப் போன்ற விசுவாசிகளின் ஆசை. அத்துடன் இதையெல்லாம் இப்போதே சரி செய்தால்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க பெரும் வெற்றி பெறும்'' என்றனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/e473c137-ceb0-41bf-8240-fd145be963e9/55a4d28a_00ca_46cf_a5ae_225a0356e632.jpg" /><figcaption>அன்பழகன்</figcaption></figure><p>இதுகுறித்து அன்பழகனிடம் பேசினோம், ``துரை.மாணிக்கம், மறைமுகத் தேர்தலில் எங்களிடம் வாக்குகள் மட்டுமே கேட்டார். கட்சிக்கு வரத் தயாராக இல்லை. ஆனால், மாலா போத்தியப்பன் தி.மு.கவிற்கு வருவதாகச் சொன்னதுடன் கட்சியில் உறுப்பினராகவும் ஆகிவிட்டார். அதனாலேயே, அவரை ஆதரித்தோம். இதில் பணம் பெற்றுக்கொண்டு செயல்பட்டதாகக் கூறப்படும் தகவல் பொய்யானது. தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே திட்டமிட்டுப் பொய்ப் புகாரை பரப்பி வருகின்றனர்'' என்பதோடு முடித்துக்கொண்டார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் எல்லாம் வழி விடுங்க!' - இந்தியா வருகைக்குத் தேதி குறித்த டிஸ்னி+
</title>
<link>
https://cinema.vikatan.com/web-series/disney-to-launch-in-india-via-hotstar
</link>
<comments>
https://cinema.vikatan.com/web-series/disney-to-launch-in-india-via-hotstar#comments
</comments>
<guid isPermaLink="false">c4de5327-111b-47af-9943-99b09ec463b0</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 14:14:49 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T14:14:49.950Z</atom:updated>
<atom:author>
<atom:name>க.ர.பிரசன்ன அரவிந்த்</atom:name>
<atom:uri>/api/author/644038</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
marvel comics,walt disney,web series,hotstar,streaming
</media:keywords>
<media:content height="1080" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/a9fa760b-14f1-43d4-bcf5-1a9d73f7b58a/apps_9132_14495311847124170_24964046_964f_4e17_963a_c1a49cf78352.jpeg" width="1920">
<media:title type="html">
<![CDATA[ டிஸ்னி+ ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/a9fa760b-14f1-43d4-bcf5-1a9d73f7b58a/apps_9132_14495311847124170_24964046_964f_4e17_963a_c1a49cf78352.jpeg?w=280" width="280"/>
<category>web series</category>
<content:encoded>
<![CDATA[
<p>இன்றைய இணைய உலகில் பெரும்பாலும் அனைவரும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பார்க்க ஸ்ட்ரீமிங் (OTT) தளங்களையே பயன்படுத்துகின்றனர். இதனால் பெரிய பொழுதுபோக்கு நிறுவனங்கள் அனைத்துமே தங்களுக்கெனப் புதிய ஸ்ட்ரீமிங் தளங்களைத் தொடங்கி வருகின்றன. அப்படிக் கடந்த வருடம் நவம்பர் மாதம், கிட்டத்தட்ட பாதி ஹாலிவுட்டை குத்தகைக்கு எடுத்துவைத்திருக்கும் வால்ட் டிஸ்னி நிறுவனம் தனது 'டிஸ்னி+' ஸ்ட்ரீமிங் சேவையை அமெரிக்காவில் கொடுக்கத்தொடங்கியது. தற்போது அதை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளது டிஸ்னி. ஏற்கெனவே டிஸ்னிக்குச் சொந்தமான ஒரு மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளம் ஒன்று இந்தியாவில் இருக்கிறது. அது எது தெரியுமா?</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/0f5fb852-c05d-438f-b3f3-34f178c5dca7/disney_plus_hotstar_launch_india_.jpg" /><figcaption>ஹாட்ஸ்டார், டிஸ்னி+</figcaption></figure><p>ஹாட் ஸ்டார்தான் அது. அதன்மூலம்தான் மார்ச் 29 முதல் டிஸ்னி+ சேவையை இந்தியா எடுத்துவரவுள்ளது டிஸ்னி. இதுகுறித்து டிஸ்னியின் தலைமை நிர்வாகி பாப் ஐகர் கூறுகையில் ``எங்கள் ஸ்ட்ரீமிங் சேவையை இந்தியாவில் ஐபிஎல் ஆட்டத்தின் ஆரம்பத்தில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் ஹாட்ஸ்டாரில் அதிக மக்கள் பார்க்கக்கூடிய மிக முக்கியமான நிகழ்ச்சியாக ஐபிஎல்தான் திகழ்கிறது. மேலும் இதுவரை உலகம் முழுவதும் 26.5 மில்லியன் சந்தாதாரர்களை டிஸ்னி நிறுவனம் பெற்றுவிட்டது. இந்தியாவிற்கு வரவுள்ள டிஸ்னி பிளஸ்ஸில் இரண்டு முக்கிய வகையான சந்தாக்கள் இருக்கும். ப்ரீமியம் சந்தாவில் ஒரிஜினல் நிகழ்ச்சிகள் உட்பட அனைத்தும் இருக்கும். பேசிக்சந்தாவில் ஒரிஜினல்ஸ் இடம்பெறாது. மேலும் ஹாட்ஸ்டார் ப்ரீமியம் இனி 'Disney plus Hotstar' என்று அழைக்கப்படும் "என்றார்</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/technology/gadgets/150964-disney">`அல்லுசில்லு செதறு' இது டிஸ்னி என்ட்ரி!</a></p><p>2020-ன் இரண்டாம் பாதியில்தான் டிஸ்னி+ இந்தியாவில் கிடைக்கத்தொடங்கும் எனக் கடந்த ஆண்டே டிஸ்னி நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது அதை முன்கூட்டியே தொடங்க தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது டிஸ்னியின் ரசிகர்கள் பலரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஸ்டார்வார்ஸ்'மண்டலோரியன்' தொடங்கி மார்வெலின் சூப்பர்ஹீரோ தொடர்கள் வரை பலவும் டிஸ்னி+ எக்ஸ்க்ளூசிவ் என்பதே அதற்குக் காரணம்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/b11ee518-9883-48b9-af2d-9ceffede1d27/Disney_Plus_Marvel_Shows_SR.webp" /><figcaption>Disney+</figcaption></figure><p>எனினும் இந்தத் திட்டத்திற்கான விலைப்பட்டியலை டிஸ்னி நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. அமெரிக்காவில் 24 மணி நேரத்திலேயே பத்து மில்லியன் சந்தாதாரர்கள் சேர்ந்தது டிஸ்னி+. இதோடு இரண்டே மாதத்தில் 100 மில்லியன் டாலர் வருவாயையும் ஈட்டியது டிஸ்னி நிறுவனம். இதனால் போட்டி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் கடந்த சில மாதங்களில் மட்டும் மில்லியனிற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை டிஸ்னியிடம் இழந்துள்ளது. மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் ஸ்ட்ரீமிங் சேவையை வழங்குவதில் நாளுக்கு நாள் போட்டியாளர்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றனர். எனவே, மக்களின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பிற்கிணங்க நிகழ்ச்சிகளை வழங்கினால் மட்டுமே சந்தையில் இனி நிலைத்திருக்க முடியும்! </p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`2 மாதங்களுக்கு முன் மாயமான தொழிலாளி!' - கொள்ளிடம் போலீஸாரை அதிரவைத்த விசாரணை
</title>
<link>
https://www.vikatan.com/news/crime/kollidam-police-got-new-lead-in-missing-worker-case-after-2-months
</link>
<comments>
https://www.vikatan.com/news/crime/kollidam-police-got-new-lead-in-missing-worker-case-after-2-months#comments
</comments>
<guid isPermaLink="false">7a913a01-200b-455c-99a8-359a44b85297</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 13:58:09 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T13:58:09.723Z</atom:updated>
<atom:author>
<atom:name>மு.இராகவன்</atom:name>
<atom:uri>/api/author/615772</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>crime,murder,police</media:keywords>
<media:content height="853" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/6ddd44d4-b440-4b15-9a80-6e9bfd073a42/IMG_20200206_WA0001.jpg" width="1280">
<media:title type="html">
<![CDATA[ காவல் நிலையம் கொள்ளிடம் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/6ddd44d4-b440-4b15-9a80-6e9bfd073a42/IMG_20200206_WA0001.jpg?w=280" width="280"/>
<category>crime</category>
<content:encoded>
<![CDATA[
<p>நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள முதலைமேடு திட்டு கிராமத்தில், 2 மாதங்களுக்கு முன்பு ஆடு மேய்க்கச் சென்ற த
]]>
<![CDATA[
ொழிலாளியின் எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/ad9abbeb-a425-4723-a41c-201df28161af/KDM_1.jpg" /><figcaption>எலும்புகள்</figcaption></figure><p>கொள்ளிடம் அருகே உள்ள நாதல்படுகை கிராமம், நடுத்தெருவைச் சேர்ந்த சுப்பராயனின் மகன் செல்வராசு (45). இவருக்கு திருமணமாகவில்லை. இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ம் தேதி, அவருக்குச் சொந்தமான ஆடுகளை கொள்ளிடம் ஆற்றின் கரையோரப் பகுதியில் மேய்ப்பதற்காக ஓட்டிச்சென்றுள்ளார். ஆனால், அன்றிரவு வெகு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.</p><p>இதுகுறித்து செல்வராசின் தாய் சின்னம்மாள், கடந்த டிசம்பர் மாதம் 20-ம் தேதி, கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், நேற்று மாலை முதலைமேடுதிட்டு கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில், மனித எலும்புத் துண்டுகள் சிலவும், செல்வராசு அணிந்திருந்த உடை கிழிந்த நிலையிலும் கிடந்ததை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்திருக்கின்றனர். இதுதொடர்பாக, கொள்ளிடம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த கொள்ளிடம் போலீஸார், சீர்காழி அரசு மருத்துவமனை மருத்துவர் கண்ணன் ஆகியோருடன் சம்பவ இடத்திற்குச் சென்று எலும்புகளைச் சேகரித்து பரிசோதனை செய்தனர். பரிசோதனையில், அந்த எலும்புகள் செல்வராசின் எலும்புகள் எனத் தெரியவந்தது. செல்வராசின் தாய் சின்னம்மாள் மற்றும் உறவினர்கள், இறந்தது செல்வராசு என்பதை உடைகள் மூலம் உறுதிப்படுத்தினர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/74e13a49-ea6b-430e-adf6-714d571fbb95/IMG_20200206_WA0001.jpg" /><figcaption>காவல் நிலையம் கொள்ளிடம் </figcaption></figure><p>இறந்த செல்வராசு, அப்பகுதியில் சிலருக்குக் கடன் கொடுத்து வசூலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள். செல்வராசுவைக் கொன்றது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்தால்..? - வாசகர் மேடை கலகல!
</title>
<link>
https://www.vikatan.com/oddities/miscellaneous/what-will-happen-if-dmk-and-admk-form-an-alliance
</link>
<comments>
https://www.vikatan.com/oddities/miscellaneous/what-will-happen-if-dmk-and-admk-form-an-alliance#comments
</comments>
<guid isPermaLink="false">3b318863-0671-4159-b23c-17526c97b991</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 13:54:44 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T13:54:44.247Z</atom:updated>
<atom:author>
<atom:name>விகடன் டீம்</atom:name>
<atom:uri>/api/author/615721</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>stalin,Edappadi Palanisamy</media:keywords>
<media:content height="536" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/ec966447-88ec-4308-aaa1-28dedb2d2b49/stlinnn.jpg" width="1060">
<media:title type="html">
<![CDATA[ வாசகர் மேடை ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/ec966447-88ec-4308-aaa1-28dedb2d2b49/stlinnn.jpg?w=280" width="280"/>
<category>miscellaneous</category>
<content:encoded>
<![CDATA[
<p>ஒரு மாறுதலுக்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்?</p><p>இந்த நிகழ்வுக்குப் பிறகும்கூட பாஜகவோ காங்கிரஸோ இங்கே ஒரு பலம்மிக்க கட்சியாக உருவாகாது.</p><p>- புகழ்</p><p>அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போல கலைஞர் மக்கள் முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம், ஸ்டாலின் மக்கள் முன்னேற்றக் கழகம், எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்னேற்றக் கழகம் என்று பல கட்சிகள் உருவாகும்.</p><p>- saravankavi</p><p>ராமதாஸ் ரியாக்‌ஷன்: `இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே...’</p><p>- pbukrish</p><p>`மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் கலைஞர் அம்மா நாமம் வாழ்க’னு பட்ஜெட் உரையின் போது சொல்லுவாங்க.</p><p>- urs_venbaa</p><p>கமலும் ரஜினியும் கூட்டணி அமைத்து எதிர்க் கட்சியினராக இருப்பார்கள்.</p><p>- VijiKumaran1</p><p>ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்கள்..</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/a42a5cb2-c0b2-4d9d-8406-63865292a9df/stalin3.jpg" /></figure> <p>- madars_paiyan</p><p>இந்தக் கூட்டணி பிடிக்காமல் உண்மையான கலைஞர், ஜெயலலிதா விசுவாசிகள் கட்சியிலிருந்து வெளியேறி, தனித்தனியே ஒரு கட்சியைத் தொடங்குவார்கள்.</p><p>- RahimGazzali</p><p>இந்தக் கூட்டணி அமைந்தால் கவர்னருக்கு பயந்த காலம் மாறி, கவர்னர் இவர்களுக்கு பயப்படும் நிலை வரலாம்.</p><p>- jerry.darvey</p><p>அரசு இயந்திரத்துக்கு பெட்ரோல் போடுறதா, டீசல் போடுறதான்னு குழப்பம் நேரும்.</p><p>- RedManoRed</p><p>கலைஞரும் ஜெயலலிதா அம்மாவும் உயிரோடு இருந்தபோது அண்ணன் தங்கைபோலப் பழகியதாகப் பேட்டி கொடுப்பார்கள். அவ்வ்வ்!</p><p>- Isaipuyalfan</p><p>* </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/c8fca0ba-413f-4e5f-b46e-0146823e60c9/kapil.jpg" /></figure> <p>? ஒரு பழைய கிரிக்கெட் வீரர் இப்போதைய இந்திய டீமில் விளையாடலாம் என்றால் யார் உங்கள் சாய்ஸ், ஏன்?</p><p>ராகுல் டிராவிட் - தாக்குப் பிடித்து நின்று ஆடுவார்.</p><p>- பெ.பச்சையப்பான், கம்பம்</p><p>யுவராஜ் சிங். யுவிக்கு அப்புறம் இன்னிக்குவரை இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னைதான். ஸோ, பிரச்சனை தீரணும்னா பழைய யுவி என் சாய்ஸ்.</p><p>- Iam_SuMu</p><p>தமிழில் கமென்ட்ரி செய்யும் அனைத்து வீரர்களையும் மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும். தமிழை இவர்களிடமிருந்து காப்பாற்ற வேறு வழியில்லை!</p><p>- balasubramni1</p><p>கபில் தேவ்... இந்திய கிரிக்கெட்டை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றவர். அவருக்கு உரிய மரியாதையை வாரியம் அளிக்கவில்லை என்று ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வருத்தம் உண்டு.</p><p>- vaira.bala.12</p><p>சவுரவ் கங்குலி . ஸ்டைலான பேட்டிங், அசத்தலான ஆட்டம் என்று சுவாரஸ்யம் கூட்டும் நல்ல ப்ளேயர். <strong><a href="http://bit.ly/31uI7yN">முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/31uI7yN</a></strong></p><p>- ashokan.ahan</p><p>அணில் கும்ளே:டாப் ஆர்டர் மிடில் ஆர்டர் கேஎல் ராகுல் வருகைக்கு பின் நலம்.வேகப்பந்து துறை எப்போதும் இல்லாத அளவு சரியாக உள்ளது.சகள் மற்றும் குல்தீப் தான் அடிக்கடி அடி வாங்குகிறார்கள்,இப்போதைக்கு கும்ப்ளே தான் சரியான சாய்ஸ் (அப்டியே டீம்க்கு உள்ளேயே ஒரு எக்ஸ்ட்ரா கோச்!)</p><p>- Daarwinthehero</p><p>சஞ்சய் மஞ்ச்ரேக்கர்:</p><p>கமென்ட்ரிங்கிற பேர்ல் ப்ளேயர்கிட்ட வம்பிழுக்கிறதே அவருக்கு வேலையாப் போச்சு. அதனால மறுபடியும் அவர கிரவுண்ட்ல இறக்கி விட்டு, மீம்ஸ் போட்டு கலாய்க்கனும்</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/0a3b6cf5-ce0e-4614-9ac9-9670569c6aca/dos.jpg" /></figure> <p>- RamuvelK</p><p>இர்பான் பதான்...ஏன்னா இவர் திறமைய இந்திய அணி நிர்வாகம் சரிவர பயன்படுத்திக்க தவறிட்டாங்க,நல்ல ஸ்விங்&amp;பேஸ் பெளலர்,பேட்டிங்கிலும் சிறப்பா ஆடுவார்</p><p>- pbukrish</p><p>அசாருதீன்- ஒரு சின்ன ஃப்ளிக் மூலம் பவுண்டரி அடிக்கும் அந்த அழகுக்காக..!</p><p>- மயக்குநன்</p><p>கெளதம் கம்பீர்...!!!</p><p>பிஜேபி ஆளுங்கறதால போற பக்கமெல்லாம் எப்படியாச்சம் மோடி சப்போர்ட்ல ஜெயிக்கவச்சிடுவார்.</p><p>- ரமேஷ்.ஏ</p><p>வீரேந்தர் சேவாக் - சேவாக்-ரோகித் சர்மா ஓப்பனிங் ஜோடி அதிரடி சரவெடி</p><p>- M_SR04</p><p>முகம்மது கைப் ரன்னிங் பதில் ஸ்விம்மிங்ல தான் ரன் எடுப்பார். நல்ல ஃபில்டரும் கூட</p><p>- M__karthika</p><p>இவை மட்டுமா?</p><p>&gt; 2030-ல் லவ் புரொபோஸல் எப்படியிருக்கும்?</p><p>&gt; விஜய் ஹீரோ - விஜய் சேதுபதி வில்லன். ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு டயலாக் சொல்லுங்க.</p><p>&gt; மொபைல்போன் - சிறு குறிப்பு வரைக!</p><p><strong>- இவற்றுக்கும் வாசகர்கள் நறுக்கென பதிந்தவற்றை முழுமையாக ஆனந்த விகடன் இதழில் காண &gt;<a href="http://bit.ly/31uI7yN"> வாசகர் மேடை: பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும்... https://www.vikatan.com/news/general-news/vasagar-medai-12th-feb-2020</a></strong></p><p>சிறப்புச் சலுகை &gt; விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. <strong>உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க &gt; <a href="http://bit.ly/2sUCtJ9">http://bit.ly/2sUCtJ9</a></strong></p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`38 இடங்கள்; ரூ.300 கோடி ஆவணங்கள்; ரூ.77 கோடி ரொக்கம்!' - வருமான வரித்துறை சொல்வதென்ன? #ITRAID
</title>
<link>
https://www.vikatan.com/news/crime/unaccounted-cash-rs77-crore-seized-from-financier-anbuchezhiyan-says-it-department
</link>
<comments>
https://www.vikatan.com/news/crime/unaccounted-cash-rs77-crore-seized-from-financier-anbuchezhiyan-says-it-department#comments
</comments>
<guid isPermaLink="false">afe569ae-377a-4dd1-9ddf-8a75c30a7329</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 13:31:10 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T13:31:10.577Z</atom:updated>
<atom:author>
<atom:name>ராம் பிரசாத்</atom:name>
<atom:uri>/api/author/615999</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>Vijay,financier Anbuchezhian,income tax,it raid</media:keywords>
<media:content height="600" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/ca5a7b4d-8f54-4dba-bf59-0a67312b6476/WhatsApp_Image_2020_02_06_at_18_15_20.jpeg" width="1000">
<media:title type="html">
<![CDATA[ வருமான வரித்துறை சோதனை ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/ca5a7b4d-8f54-4dba-bf59-0a67312b6476/WhatsApp_Image_2020_02_06_at_18_15_20.jpeg?w=280" width="280"/>
<category>crime</category>
<content:encoded>
<![CDATA[
<p>சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். வரி ஏய்ப்புப் புகார் காரணமாக இந்தச் சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இந்த நிறுவனம் சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட படம், 'பிகில்'. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. பிகில் படத் தயாரிப்புக்கு நிதியளித்தது, மதுரையைச் சேர்ந்த ஃபைனான்ஷியர் அன்புச்செழியன். இதனடிப்படையில், நடிகர் விஜய் மற்றும் ஃபைனான்ஷியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கினர். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/fff630f5-008c-44b8-984c-b2cfe4fc5d21/anbu.jpg" /><figcaption>வருமான வரித்துறை சோதனை</figcaption></figure><p>அன்புச்செழியனின் மதுரை மற்றும் சென்னை அலுவலகங்கள், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் இறங்கினர். 'மாஸ்டர்' பட ஷூட்டிங்கில் இருந்த நடிகர் விஜய்-யையும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து சம்மன் அளித்தனர். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய், கார் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். விஜய்-யின் பனையூர் வீட்டில் 18 மணி நேரமாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபல நடிகர், படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஃபைனான்ஷியர் வீடுகள் மற்றும் அலுவகலத்தில் இரண்டு நாள்களாக நடக்கும் ரெய்டு, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/corruption/it-raid-in-ags-entertainment-office">`4 பைகளில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்!’ - சிக்கலில் மதுரை அன்பு; ஐ.டி விசாரணையில் நடிகர் விஜய்</a></p><p>வருமான வரித்துறை ஆணையரும், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் அதிகாரபூர்வ செய்தித்தொடர்பாளருமான சுரபி அலுவாலியா பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், ``தமிழ் திரைப்படத் துறையில் முக்கியமான நபர்களின் இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்துவருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், ஃபைனான்ஷியர் மற்றும் விநியோகஸ்தருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இவர்களுக்கு இடையேயான பொதுவான தொடர்பு, பாக்ஸ் ஆபீஸ் வெற்றியுடன் சமீபத்தில் ஈட்டிய ரூ.300 கோடி. சென்னை மற்றும் மதுரையில் இவர்களுக்குச் சொந்தமான 38 இடங்களில் சோதனை நடந்தது. </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/450d11c2-c83d-4e66-99be-a9ce591b8961/anbu_dov.jpg" /><figcaption>மதுரையில் சிக்கிய ஆவணங்கள்</figcaption></figure><p>சென்னை மற்றும் மதுரையில், ஃபைனான்ஷியருக்குச் சொந்தமான இடங்களிலிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி பணத்தைக் கைப்பற்றியுள்ளோம். சொத்து ஆவணங்கள், அடமானப் பத்திரங்கள், காசோலைகள் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் கண்டறிந்த ஆதாரங்களின் அடிப்படையில், இதன் மதிப்பு 300 கோடியைத் தாண்டும் எனக் கருதுகிறோம். இந்த ஆவணங்கள் அனைத்தும் அவரது நண்பர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. </p> <p>Also Read: <a href="https://www.vikatan.com/news/crime/actor-vijay-brought-to-chennai-by-it-officials">`சென்னை அழைத்துவரப்பட்ட விஜய்!' - நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது?</a></p><p>தயாரிப்பாளருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்துவருகிறது. அவர்கள், படத் தயாரிப்பு மற்றும் விநியோகம், திரையரங்குகள் ஆகியவற்றை நடத்திவருகின்றனர். நிறைய படங்களையும் தயாரித்துள்ளனர். அவர்களது அலுவலகங்களில் சோதனை செய்துவருகிறோம். அவர்களது வரவு-செலவு கணக்குகளை ஆராய்ந்துவருகிறோம். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/9ff61969-1599-4801-a468-9c871ed7d1f6/WhatsApp_Image_2020_02_06_at_17_34_15.jpeg" /><figcaption>நடிகர் விஜய் வீடு</figcaption></figure><p>அதேபோல், குறிப்பிட்ட நடிகரைப் பொறுத்தவரையில், அசையா சொத்துகளில் அவர் செய்துள்ள முதலீடு மற்றும் படத்தில் நடித்ததற்காக அந்தத் தயாரிப்பாளரிடமிருந்து அவர் பெற்ற ஊதியம் ஆகியவை குறித்து விசாரித்துவருகிறோம். சில இடங்களில் சோதனையும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
``மூலப்பத்திரம் எங்கே?" - `முரசொலி' போர் மூண்டதன் மூலக்காரணம் என்ன?
</title>
<link>
https://www.vikatan.com/news/politics/the-reason-behind-the-murasoli-controversy
</link>
<comments>
https://www.vikatan.com/news/politics/the-reason-behind-the-murasoli-controversy#comments
</comments>
<guid isPermaLink="false">54d0ded1-492c-43ab-95bd-41021dc04cbb</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 13:25:55 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T13:25:55.130Z</atom:updated>
<atom:author>
<atom:name>விகடன் டீம்</atom:name>
<atom:uri>/api/author/615721</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>ramadoss,stalin,murasoli</media:keywords>
<media:content height="1144" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/3b443303-d09d-415f-9d66-90523e3a97b7/ramadoss.jpg" width="1911">
<media:title type="html">
<![CDATA[ முரசொலி ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/3b443303-d09d-415f-9d66-90523e3a97b7/ramadoss.jpg?w=280" width="280"/>
<category>politics</category>
<content:encoded>
<![CDATA[
<p>'அசுரன்' படத்தைப் பார்க்கப் போன ஸ்டாலினுக்கு ஆரம்பித்தது பிரச்னை. படத்தைப் பார்த்துவிட்டு, பஞ்சமி நிலம் பற்றிக் கருத்து சொல்ல... பஞ்சமி நில விவகாரம் முரசொலி ஆபீஸ் படியேறியது. "முரசொலி நிலமே பஞ்சமி நிலம்தான்'' என அதிரடி கிளப்பினார் ராமதாஸ். "முரசொலி அலுவலகத்துக்குப் பட்டா இருக்கு" எனச் சொல்லி, அதற்கான ஆவணங்களை அள்ளிப் போட்டார் ஸ்டாலின். "மூலப்பத்திரம் எங்கே? அதை முதலில் காட்டுங்கள்" எனப் பதிலடி கொடுத்தார் ராமதாஸ்.</p><p>முரசொலி விவகாரத்தை வைத்துச் சுழன்று கொண்டிருக்கும் சூறாவளியின் ஆணிவேர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதைந்து கிடக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு நிகராக அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க-வைக் குறி வைத்துத் தாக்கிப் பேச ஆரம்பித்தார் ஸ்டாலின். "மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி என்ற முழக்கம், மாற்றம்... ஏமாற்றம்... சூட்கேஸ்மணியாகிவிட்டது'' எனக் காட்டமாக விமர்சித்தார்.</p><p>கடைசி நிமிடம் வரையில் எடப்பாடி ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த அன்புமணி, தினம் தினம் ஆட்சியின் அவலம் பற்றிக் கண்டிப்புடன் அறிக்கை கொடுத்துக்கொண்டிருந்த ராமதாஸ், நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தார்கள். கருணாநிதியால் தீவிரப் பிரசாரம் செய்ய முடியாத சூழலில், ஸ்டாலின் மேற்பார்வையில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலும் 2016 சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இந்த இரண்டு தேர்தல்களிலும் அடுத்தடுத்து தி.மு.க-வுக்குப் படுதோல்வி. அடுத்து வந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டால் அது தனக்கு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்துவிடும் என அஞ்சினார் ஸ்டாலின். அதற்காக வலுவான கூட்டணியை அமைத்தார். இப்படியான நிலையில் பா.ம.க அ.தி.மு.க அணியில் சேர்ந்ததை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை. அது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/32984d6e-ba04-4657-958c-b7275f12039b/stalin.jpg" /></figure> <p>தொடர்ச்சியாக பா.ம.க-வைப் பிரசாரத்தில் சீண்டிய ஸ்டாலின், அரக்கோணம் தொகுதித் தேர்தல் பிரசாரத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்தைக் கையில் எடுத்தார். "வன்னியர் கல்வி அறக்கட்டளைச் சொத்துகளை எல்லாம் ராமதாஸ் அவரின் மனைவி பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறார். தமிழக அரசு சொத்துகளைக் கைப்பற்றிவிட முடியும் என்பதால், அ.தி.மு.க அணியில் பா.ம.க இணைந்துள்ளது'' எனத் திரி கொளுத்திப் போட்டார் ஸ்டாலின். இந்தப் பேச்சுதான் முரசொலி மூலப்பத்திர விவகாரத்துக்கு மூல காரணம். <strong><a href="http://bit.ly/386Khaf">விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/386Khaf</a></strong></p><p>வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்துக்கு அப்போதே ஸ்டாலினுக்குப் பதில் சொன்ன ராமதாஸ், "வன்னியர் அறக்கட்டளை பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியை ஏற்படுத்தித் தர உருவாக்கப்பட்ட அமைப்பு. அது தி.மு.க அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை போன்று பினாமி சொத்துகளைப் பதுக்கி வைக்க உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. அந்த அறக்கட்டளையில் நிறுவனராக மட்டுமே உள்ளேன். எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை. என் மனைவிக்கு வன்னியர் அறக்கட்டளையுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஸ்டாலின் விரும்பினால் வன்னியர் அறக்கட்டளையின் ஆவணங்களை ஆய்வு செய்யட்டும். அறக்கட்டளைச் சொத்துகளை என் மனைவி பெயருக்கு மாற்றி எழுதியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லையென்றால், அரசியலிலிருந்து ஸ்டாலின் விலகத் தயாரா?'' எனக் கேட்டார் ராமதாஸ்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/b7756b75-583d-4ff3-b2e2-27a823b6b1d7/ramadoss.jpg" /></figure> <p>இந்த வன்னியர் அறக்கட்டளை வார்த்தைப் போர் நடந்து, சரியாக ஒரு வருடம் நிறைவடைந்திருக்கிறது. கடந்த மாதம் வன்னியர் கல்வி அறக்கட்டளையில் சில மாற்றங்கள் நடைபெற்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் செயல்பட்டுவந்த வன்னியர் கல்வி அறக்கட்டளை, 'மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. "வன்னியர் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியதில் பங்காற்றியதற்காக ராமதாஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது'' என விளக்கம் சொல்கிறது பா.ம.க. ஆனால், "அதற்காக வன்னியர் என்கிற அடையாளப் பெயரை நீக்கிவிட்டது சரியா?'' என முணுமுணுக்கிறார்கள் வன்னியர் சமூகத்தின் ஒரு சாராரே.</p><p>`` 'மனைவி பெயருக்கு அறக்கட்டளைச் சொத்தை ராமதாஸ் மாற்றிக்கொண்டார்' என அன்றைக்கு ஸ்டாலின் சொன்னார். இன்று அந்த அறக்கட்டளையின் பெயரே ராமதாஸ் எனத் தாங்கி நிற்கிறது. அதைச் சரிசெய்துவிட்டு முரசொலி பற்றி ராமதாஸ் பேசட்டும்'' என்கிறார்கள் தி.மு.க-வினர்.</p><p>- 'கழகத்தின் கதை'... ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் நடந்த பதவிச்சண்டைகளை மையமாக வைத்து டாக்டர் ராமதாஸ் எழுதிய புத்தகத்தின் பெயர் இது. இப்போது தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இடையே நடக்கும் முரசொலி மோதல்கூட 'கலகத்தின் கதை'தான்!</p><p>தி.மு.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இடையே நடக்கும் பகை அரசியலுக்குப் பின்னால் பத்தாண்டுக்கால வரலாறு உண்டு. அதுகுறித்த விவரத்துடன் முழுமையான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க &gt; <strong><a href="http://bit.ly/386Khaf">முடியாத 'முரசொலி' போர்! பா.ம.க - தி.மு.க பகை ஏன்? https://www.vikatan.com/government-and-politics/controversy/why-is-murasoli-controversy-still-in-the-limelight</a></strong></p><p>சிறப்புச் சலுகை &gt; விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு.<strong> <a href="http://bit.ly/2sUCtJ9">உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க &gt; http://bit.ly/2sUCtJ9</a></strong></p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`25 வருஷமாச்சு... சத்தியத்தைக் காப்பாத்துறோம்!' - சிலிர்க்கும் பழம்பூண்டி பழங்குடி பூசாரி
</title>
<link>
https://www.vikatan.com/lifestyle/miscellaneous/in-this-villupuram-village-no-one-takes-alcoholic-drinks
</link>
<comments>
https://www.vikatan.com/lifestyle/miscellaneous/in-this-villupuram-village-no-one-takes-alcoholic-drinks#comments
</comments>
<guid isPermaLink="false">c5e198a4-4633-4880-91da-27ee9bf91295</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 12:51:18 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T12:51:18.678Z</atom:updated>
<atom:author>
<atom:name>அஸ்வினி.சி</atom:name>
<atom:uri>/api/author/615698</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>tribes,village</media:keywords>
<media:content height="719" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/07fc46d6-ee6d-4b62-8e25-b64294381fa6/WhatsApp_Image_2020_01_31_at_10_54_48_PM.jpeg" width="1280">
<media:title type="html">
<![CDATA[ பழம்பூண்டி கிராம மக்கள் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/07fc46d6-ee6d-4b62-8e25-b64294381fa6/WhatsApp_Image_2020_01_31_at_10_54_48_PM.jpeg?w=280" width="280"/>
<category>miscellaneous</category>
<content:encoded>
<![CDATA[
<p>விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பழம்பூண்டி என்னும் பழங்குடியின கிராமம். 10 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், யாருக்குமே மது அருந்தும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ கிடையாது. இங்கு வசிக்கும் இளைஞர்கள், கட்டுக்கோப்புடன் வசிக்க, முத்து என்பவரே காரணம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/43515a6e-16d4-4f86-83e8-cebe0d1ea7a2/WhatsApp_Image_2020_02_01_at_1_37_58_AM.jpeg" /><figcaption>முத்து</figcaption></figure><p>``நான் இந்த ஊர் கோயில் பூசாரி. எனக்கு ஒரு 25 வயசு இருக்கும்போது என் மேல எங்க குலசாமி கண்ணியம்மா வந்துச்சாம். இங்க இருக்கிற யாரும் போதை சம்பந்தமான எந்தப் பொருளையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாதுனு உத்தரவு போட்டுச்சாம். சாமியாடிய என்கிட்ட, எங்க கிராமத்து ஆளுங்க, 'இனிமே குடிக்கவே மாட்டோம்'னு எல்லாரும் சத்தியம் பண்ணிக் கொடுத்தாங்க. இது நடந்து 20 வருஷம் ஆகிருச்சு.</p><p>இப்போ எனக்கு 45 வயசு ஆகுது. யாருக்கும் குடிப்பழக்கம் கிடையாது. எங்க தலைமுறை பிள்ளைகளும் குடியைத் தொடமாட்டாங்க. எங்க பிள்ளைங்க கொஞ்சம் பெரியவனானதும் என்கிட்ட வந்து, சாமி முன்னிலைல சத்தியம் பண்ணிக் கொடுத்திருவாங்க. குடிச்சா அந்த வீட்டுக்கே கேடு, உடலுக்கும் கேடு-ன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/5e607489-eb10-44b7-9ce9-108f08f4c7d8/WhatsApp_Image_2020_01_31_at_10_49_08_PM.jpeg" /><figcaption>பழம்பூண்டி கிராம மக்கள்</figcaption></figure><p>கன்னியம்மா எங்களுக்கு சாப்பாட்டுக்கு எந்தக் குறையும் வைக்கல. தினமும் மரம் வெட்டுற வேலை, கட்டட வேலை-ன்னு போறோம். அதிகபட்சமா ஒரு நாளைக்கு 350 ரூபா கிடைக்கும். குடிப்பழக்கம் இருந்தா அதுக்கே பாதி செலவு பண்ணணும். அப்படி ஏதுவும் இல்லாததால, காய்கறி வாங்கி சமைச்சு சாப்பிடுறோம். ஆனா, எங்கள சுத்தி நிறைய பிரச்னைகள் இருக்கு.</p><p>எங்க ஊர்ல மின்சாரமோ குடிநீர் வசதியோ கிடையாது. ஆத்துத் தண்ணியில்தான் குளிக்கிறோம். அதையேதான் குடிக்கிறோம். வெயில் காலம் வந்தா ஆறும் வத்திபோய்டும். என்ன பண்ணப் போறோம்னு தெரியல. காசு கொடுத்து தண்ணி வாங்குற அளவுக்கு கூலி கிடைக்காது. பாம்பு, பூரான் கடிச்சா விஷம் முறிக்கும் மூலிகைச் செடிகளை வளர்க்குறோம். ஆனா, எங்களுக்கே தண்ணியில்லாதபோது செடிகளுக்கு எப்படி ஊத்துறது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/8b9e5e81-ca20-45f7-8a18-69949075c4be/WhatsApp_Image_2020_01_31_at_11_10_10_PM.jpeg" /><figcaption>பழம்பூண்டி கிராம மக்கள்</figcaption></figure><p>இரவானதும் பாம்பு, பூரான்னு எல்லா விஷ பூச்சியும் எங்க குடிசைக்கு வரும். பழகிப்போச்சு. நாங்க செல்போன் வெச்சிருக்கோம். ஊருக்குள்ள தெரிஞ்சவங்க வீட்ல கொடுத்து சார்ஜ் போட்டுக்குவோம். கொஞ்ச நாள் முன்னாடிதான் ராஜேஷ் சார் உதவியோட எங்க ஊர்ல சோலார் விளக்கு போட்டாங்க. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, சாதிச் சான்றிதழ் எதுவுமே எங்களுக்குக் கிடையாது. எப்படியாச்சு வாங்க முயற்சி பண்ணிட்டு இருக்கோம் ‘’ என்று முடித்தார் விரக்தியுடன்.</p><p>இதுகுறித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஆலோசகரான ராஜேஷ் பேசுகையில்,`` பழம்பூண்டியில் வசிக்கும் பழங்குடி குடியிருப்பில், எவருக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், வழக்கம்போல் இங்கேயும் மின்சாரமில்லை, வீட்டுமனைப் பட்டா இல்லை, ஆதார் இல்லை, ரேஷன்கார்டு இல்லை, சாதிச்சான்று இல்லை. ஆக மொத்தம் மனிதர்களாகப் பிறந்து வாழ்வதற்கு ஆதாரம் எதுவுமில்லை.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/c2cd42a0-ad87-46c4-bf91-5763195b5f13/WhatsApp_Image_2020_01_31_at_10_54_48_PM.jpeg" /><figcaption>பழம்பூண்டி கிராம மக்கள்</figcaption></figure><p>இவர்கள் படிக்காதவர்கள்தான். ஆனால், நாகரிகம் தெரிந்தவர்கள். சமீபத்திய செய்தித்தாள் ஒன்றில், பழங்குடியின மக்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஆராய்ச்சி மாணவி நீது பார்வதியின் கருத்து வெளியாகியிருந்தது. `பெண்கள் மீதான வன்முறைகளுக்கும் குடியைக் காரணமாகச் சொல்கிற உலகம் இது. நாம் நாகரிக முதிர்ச்சியற்றவராக நினைக்கும் பழங்குடிகளோ, முழு போதையில் இருந்தாலும் பெண்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்கிறார்கள்’ என்று அதில், நீது குறிப்பிட்டிருந்தார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/c1918751-d11d-47e7-946a-2ad9072912e4/WhatsApp_Image_2020_01_31_at_10_48_45_PM.jpeg" /><figcaption>பழம்பூண்டி கிராம மக்கள்</figcaption></figure><p>இது 100% உண்மை. பழங்குடிகளின் பொழுதுபோக்கு மது மற்றும் இசையாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் பழங்குடி இளைஞர்கள் மது அருந்துவதே கிடையாது. அப்படி மது அருந்தினாலும் கன்னியம் தவற மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள், பொது சமூகத்தில் கலந்தார்கள் என்றால், சமூகத்துக்கு நல்லது. ஊரின் ஒதுக்குப்புறத்தில் வசிக்கும் இவர்கள், பொது சமூகத்துடன் சேர்ந்து வாழ வழி வகுக்க வேண்டும்’’ என்றார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`நிறைய ட்யூப் லைட்டுகள் இருக்கின்றன!' - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை விமர்சித்த மோடி
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/politics/many-tube-lights-are-here-says-pm-modi-in-parliament-speech
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/politics/many-tube-lights-are-here-says-pm-modi-in-parliament-speech#comments
</comments>
<guid isPermaLink="false">da902ef3-e127-44ac-8765-f28605f41e79</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 12:27:31 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T12:27:31.556Z</atom:updated>
<atom:author>
<atom:name>ராம் சங்கர் ச</atom:name>
<atom:uri>/api/author/689507</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>Rahul Gandhi,bjp,modi,congress</media:keywords>
<media:content height="480" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/bde605a5-c407-4220-983c-73cca5d20975/EQE8zwCU0AIo7qN.png" width="854">
<media:title type="html">
<![CDATA[ பிரதமர் மோடி ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/bde605a5-c407-4220-983c-73cca5d20975/EQE8zwCU0AIo7qN.png?w=280" width="280"/>
<category>politics</category>
<content:encoded>
<![CDATA[
<p>நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31-ம் தேதி, பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்க உரையைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரானது இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமானது, ஏற்கெனவே தொடங்கிய நிலையில் வருகிற பிப்வரி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது கட்டம் மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். </p><p>குடியரசுத் தலைவரின் உரை குறித்து பேசிய நரேந்திர மோடி, ``புதிய இந்தியாவிற்கான பார்வையை அவருடைய பேச்சு எடுத்துரைத்துள்ளது. அவரின் உரை நம்பிக்கையைத் தருகிறது. இனி வரும் காலங்களில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும் விதமாக உள்ளது" என்று கூறினார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/a535c31d-60d6-492a-a474-83e173c754e5/EQE9yfgVUAABW30.png" /><figcaption>மோடி</figcaption></figure><p>இந்தியாவில் நிலவிக்கொண்டிருக்கும் முக்கியப் பிரச்னைகளான குடியுரிமை திருத்தச் சட்டம், ஆர்டிகிள் 370, முத்தலாக், அயோத்தி பிரச்னை ஆகியவை குறித்தும் மோடி பேசியுள்ளார். </p><p>இவைதொடர்பாக அவர் பேசுகையில், ``மக்கள் அரசாங்கத்தை மட்டும் மாற்ற விரும்பவில்லை. பழைய வழிகள் மற்றும் சிந்தனைகளைப் பின்பற்றிக்கொண்டிருந்தால், சட்டப்பிரிவு 370 ஒரு வரலாற்றுச் சாதனையாக மாறியிருக்காது. இஸ்லாமியப் பெண்கள், முத்தலாக் பிரச்னையால் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பழைய பாணியிலேயே பணியாற்றி இருந்தால் அயோத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்திருக்க முடியாது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் எல்லை தொடர்பான உடன்படிக்கைகள் ஏற்பட்டிருக்காது" என்றார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/government-and-politics/politics/my-son-is-modi-supporter-not-in-aam-aadmi-says-shaheen-bagh-shooters-father">`அவர் ஆம் ஆத்மியில் இல்லை, மோடி ஆதரவாளர்!' - ஷஹீன் பாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் தந்தை</a></p><p>பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக இந்தியா இனியும் காத்திருக்காது என்று கூறிய மோடி, மத்திய அரசு வேகம், உறுதிப்பாடு, உணர்திறன் மற்றும் தீர்வுகளை லட்சியமாகக்கொண்டு செயல்படும் என்றும் குறிப்பிட்டார்.</p><p>தொடர்ந்து பேசிய அவர், ``1950-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் நேரு கையொப்பமிட்டார். அந்த ஒப்பந்தத்தில் சிறுபான்மையினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பண்டித நேரு, மிகப்பெரிய சிந்தனைவாதி. பிறகு, ஏன் எல்லா மக்களையும் குறிப்பிடாமல் சிறுபான்மையினரை மட்டும் குறிப்பிட்டுள்ளார்? நேரு என்ன செய்ய நினைத்தாரோ அதைத்தான் நாங்கள் இன்று செய்துகொண்டிருக்கிறோம். யாரோ ஒருவர் பிரதமராக வேண்டும் என்பதற்காக இந்தியா பிளவுபடுத்தப்படுகிறது. இந்தச் சட்டம் வருவதால் இந்தியக் குடிமக்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வராது" என்று பேசினார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/028a807b-08e5-4af2-a2f1-492f32c85cab/EQE2d5gUEAI_sry.png" /><figcaption>மோடி</figcaption></figure><p>காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், மெஹ்பூபா முஃப்தியையும் ஒமர் அப்துல்லாவையும் விமர்சித்தார். மேலும், ``அரசியலமைப்பின் மீதான மரியாதை குறித்து பேசுபவர்கள் பல ஆண்டுகளாக காஷ்மீரில் எதையும் செய்யவில்லை. காஷ்மீரில் நிலஅபகரிப்பு செய்தது யார்? காஷ்மீரின் அடையாளமாகத் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் மாற்றியது யார்? 1990-ம் ஆண்டு ஜனவரியில் காஷ்மீரில் ஏற்பட்ட கொடூரமான இரவை யாரால் மறக்க முடியும்..?" எனக் கேள்விகளை எழுப்பினார். உண்மையில், காஷ்மீரின் அடையாளம் மதநல்லிணக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/social-affairs/politics/assam-citizenship-issue">‘‘அஸ்ஸாமில் வதை முகாம்கள் இல்லை!’’ - நரேந்திர மோடி; ‘‘பிரதமர் பொய் சொல்கிறார்!’’ - ராகுல் காந்தி</a></p><p>``ஒரு நாளைக்கு 100 முறை காங்கிரஸ் கட்சியினர் `அரசியலமைப்பைக் காப்பாற்ற வேண்டும்' எனப் பேசுகிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்களது கடந்தகால தவறுகளை உணர்ந்திருக்கலாம். அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இந்த வசனத்தை மறந்துவிட்டார்களா?" என்று காங்கிரஸ் கட்சியினரை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.</p><p>மோடி பேசிக்கொண்டிருக்கும்போது இடைமறித்துப் பேச முயன்ற ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதமாக,``நான் 30 முதல் 40 நிமிடங்கள் உரையாற்றுகிறேன். இது சிலரைச் சென்றடைய அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இதேபோல நிறைய ட்யூப் லைட்டுகள் இருக்கின்றன" என்றார். இதனால், அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/5ef4556a-d7c6-42b4-83c1-e1680cb24d4e/EQE1XmCUwAAN5Ys.jfif" /><figcaption>ராகுல் காந்தி</figcaption></figure><p>டெல்லியில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் ராகுல் காந்தி, ``இன்று பேசிக்கொண்டிருக்கும் மோடி, இன்னும் ஆறு- ஏழு மாதங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படும். இந்தியாவிலுள்ள இளைஞர்கள் மோடியைத் தாக்குவார்கள்" என்று கூறியிருந்தார். இதற்கும் பதிலளித்த மோடி, ``அதிகமான சூரிய நமஸ்காரங்களைச் செய்து அடிவாங்கத் தயாராகிக்கொள்கிறேன்" என்றார்.</p><p>பிரதமர் மோடி இந்த உரையில் விவசாயம், உள்கட்டமைப்புகள் மற்றும் காந்தி தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் உட்பட பல்வேறு விஷயங்களையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/sports-news/saina-nehwal-joined-bjp">`பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டேன்!’- தங்கையுடன் பா.ஜ.க-வில் இணைந்த சாய்னா நேவால்</a></p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`மாஸ்க் ஏற்படுத்திய வடுக்கள்; அயராத சேவை!' - செவிலியர்களை தேவதைகளாகக் கொண்டாடும் சீனா #Corona
</title>
<link>
https://www.vikatan.com/health/international/china-nurse-treating-corona-virus-patients-gone-viral
</link>
<comments>
https://www.vikatan.com/health/international/china-nurse-treating-corona-virus-patients-gone-viral#comments
</comments>
<guid isPermaLink="false">ddc30f4d-aa8f-4ce2-b03f-930f4e93cd6f</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 12:15:53 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T12:15:53.109Z</atom:updated>
<atom:author>
<atom:name>ராம் பிரசாத்</atom:name>
<atom:uri>/api/author/615999</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>china,viral,nurse,Coronavirus</media:keywords>
<media:content height="360" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/11d41c4f-5b30-4f4b-be92-0507aae63989/EQCqfXgWkAAflHq.jfif" width="302">
<media:title type="html">
<![CDATA[ செவிலியர்கள் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/11d41c4f-5b30-4f4b-be92-0507aae63989/EQCqfXgWkAAflHq.jfif?w=280" width="280"/>
<category>international</category>
<content:encoded>
<![CDATA[
<p>`கொரோனா வைரஸ்’ இந்தப் பெயர் சீன மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள செவிலியர்களின்
]]>
<![CDATA[
புகைப்படங்கள் நம்மைக் கண்கலங்கச் செய்கின்றன. வுகான் நகரம் மருத்துவத் துறைக்குப் பெயர் போன நகரம். மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என நிரம்பியிருக்கும் இந்த மாகாணத்திலிருந்துதான் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதமே காய்ச்சல் காரணமாக அனுமதியான 7 நபர்களுக்கு வித்தியாசமான பாதிப்பு இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 நபர்களும் வுகான் மாகாணத்தில் உள்ள விலங்குகள் சந்தைக்கு அருகே வசித்தவர்கள். டிசம்பர் மாதமே வுகான் மருத்துவர்களிடம் இந்த நோய் குறித்த விவாதங்கள் எழுந்தன.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/4058aa43-c9fd-44c1-ba03-926b7d3f750f/images.jpg" /><figcaption>கொரோனா</figcaption></figure><p>கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து சீன மருத்துவரான லீ வெண்லியாங் (Li Wenliang) கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்துள்ளார். சீன அரசாங்கம் போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கொண்டு மருத்துவர்களை மௌனமாக்கியது. ஜனவரி மாதத்தில் இந்த நோய் மெல்ல பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் காய்ச்சலின் தீவிரத்தை சீன அரசு பின்னர்தான் உணர்ந்துகொண்டது. ஆனால், அதற்குள் கொரோனா பல உயிர்ப்பலிகளை எடுத்துக்கொண்டது. உலக நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உறுதிசெய்ய, ஜனவரி 31-ம் தேதி, உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்கத்தை ‘சர்வதேச மருத்துவ அவசரநிலை’எனப் பிரகடனப்படுத்தியது.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/health/international/corona-virus-chinese-doctor-li-wenliang-warns-earlier">`லீ... நீங்கள்தான் எங்கள் ஹீரோ!’ -கொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவருக்கு நேர்ந்த கதி</a></p><p>கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் தன் தாய்க்கு 9 வயது மகள் உணவு கொண்டு வந்து தரும் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதேபோல் தற்போது சீன ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் பெற்றுள்ளன. முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு நேரம்காலம் பார்க்காமல் மருத்துவ சேவைகள் செய்யும் செவிலியர்களின் புகைப்படம் அது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/833ca112-7904-46a3-a69f-5ff72ede9b4d/EQCqfXhX0AASlHN.jfif" /><figcaption>செவிலியர்கள் </figcaption></figure><p>கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்கள் முகத்தில் மாஸ்க் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு பணியாற்றுகின்றனர். முகத்தில் அணிந்திருக்கும் `மாஸ்க்’ செவிலியர்களுக்குக் கடுமையான வடுக்களை ஏற்படுத்துகின்றது. நீண்ட நேரம் மாஸ்க் அணிந்திருப்பதால் இதுபோன்ற வடுக்கள் ஏற்படுகின்றன. அந்தக் காயத்துக்கு பிளாஸ்திரிகளைப் போட்டுக்கொண்டு மீண்டும் மாஸ்க் அணிந்து மருத்து சேவையைத் தொடர்ந்து வருகின்றனர் செவிலியர்கள். இந்தப் புகைப்படம் மக்களின் இதயங்களை வென்றுள்ளன. இவர்கள்தான் உண்மையான தேவதைகள் எனக் கொண்டாடுகின்றனர் சீன மக்கள்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/health/international/china-corona-virus-heart-breaking-video-on-9-year-old-mother">`மகளால் கலங்கிய தாய்; வைரல் வீடியோ'!- பாசப்போராட்டத்தில் சீன செவிலியர்கள் #Coronavirus</a></p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
ஆட்டோவில் தொலைத்த 74,000 ரூபாய்! - முதியவரிடம் ஒப்படைத்த தேனி ஆட்டோ டிரைவர்
</title>
<link>
https://www.vikatan.com/news/tamilnadu/theni-auto-driver-returned-old-mans-lost-wallet-with-money
</link>
<comments>
https://www.vikatan.com/news/tamilnadu/theni-auto-driver-returned-old-mans-lost-wallet-with-money#comments
</comments>
<guid isPermaLink="false">aa5c4482-cea2-42d2-9078-a82f899e6079</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 12:12:49 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T12:12:49.571Z</atom:updated>
<atom:author>
<atom:name>எம்.கணேஷ்</atom:name>
<atom:uri>/api/author/615742</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>Theni,money,auto drivers,police,police complaint</media:keywords>
<media:content height="576" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/20ad0080-5b08-4ba5-aa9e-32dab0d80c8d/IMG_20200206_WA0033.jpg" width="1280">
<media:title type="html">
<![CDATA[ அம்மாவாசியிடம் பணம் ஒப்படைக்கப்படுகிறது. ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/20ad0080-5b08-4ba5-aa9e-32dab0d80c8d/IMG_20200206_WA0033.jpg?w=280" width="280"/>
<category>Tamilnadu</category>
<content:encoded>
<![CDATA[
<p>Also Read: <a href="https://www.vikatan.com/news/crime/tamilnadu-crime-diary-about-crime-occurrences-in-deputy-cm-ops-native-village">குற்றச்செயல்களின் கூடாரமா தேனி..?! அச்சத்தில் ஓ.பி.எஸ். ஊர் மக்கள் #TamilnaduCrimeDiary</a></p><p>சாலை ஓரத்தில் வசித்துவரும் முதியவர் ஒருவர், வீடு ஒத்திக்கு பிடிக்க, தான் சேமித்துவைத்த பணத்தை ஆட்டோவில் தவறவிட்டுள்ளார். அந்தப் பணத்தை, சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் எடுத்துச்சென்று, இன்று உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடந்துள்ளது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/ac3dc3c2-727a-4b28-ba66-c8bcd2bb64fa/IMG_20200206_WA0032.jpg" /><figcaption>அம்மாவாசி தொலைத்த பணம் மற்றும் வங்கி ஆவணங்கள்.</figcaption></figure><p>தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது மாயாண்டிபட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் வயது 60. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். ஆனாலும், அம்மாவாசியை கவனிக்க மகன்கள் முன்வராததால், தனித்து விடப்பட்டுள்ளார். சாலை ஓரத்தில் சிறிய குடிசை அமைத்து வாழ்ந்துவரும் அம்மாவாசி, மதுபாட்டில்களைச் சேகரித்து விற்று, அதில் வரும் பணத்தில், தன் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார். மிச்சமாகும் பணத்தை சிறுகச்சிறுக சேமித்து, கன்னியப்பிள்ளை பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் தனது பெயரில் நிரந்தர வைப்புத்தொகையாக வைத்துவிட்டு, அதற்கான பாண்டுகளை மட்டும் தன்னுடன் வைத்திருக்கிறார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/crime/fake-company-that-cheated-theni-people">5,000 பேர்… ரூ.100 கோடி… தேனி மக்களை ஏமாற்றிய போலி நிறுவனம்!</a></p><p>குடிசை வீட்டில் வாழ்ந்துவந்த அம்மாவாசி, ஒத்திக்கு வீடு பார்த்து குடியிருக்க நினைத்து, வங்கியில் உள்ள தனது பணத்தில் 74,000 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு வீடு தேடியிருக்கிறார். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அன்று, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்குச் செல்ல ஆட்டோவில் ஏறியவர், ரூ.74,000 பணம் மற்றும் வங்கி பாண்டுகளை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்டு, மருத்துவனைக்குச் சென்றுவிட்டார். சிறுது நேரம் கழித்து தனது பையைக் காணவில்லை என அறிந்து, ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/44d1de90-d52a-4bc1-98dd-d0448f1f9e86/IMG_20200206_WA0031.jpg" /><figcaption>அழகர்சாமியைப் பாராட்டிய ஆண்டிபட்டி போலீஸார்.</figcaption></figure><p>ஆண்டிபட்டி டிஎஸ்பி சீனிவாசன் உத்தரவில், ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன், உதவி ஆய்வாளர் கோதண்டராமன், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் துரைராஜ் ஆகியோர் விசாரணையில் இறங்கினர். இந்நிலையில் இன்று, சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் அழகர்சாமி (வயது 32), அம்மாவாசியின் பையை எடுத்துக்கொண்டு ஆண்டிபட்டி காவல்நிலையத்திற்கு வந்தார். அதில், அம்மாவாசியின் ரூபாய் 74,000 பணம் மற்றும் வங்கி பாண்டுகள் இருந்தன. உடனே, அம்மாவாசிக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்த போலீஸார், அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/government-and-politics/medicine/two-theni-persons-who-were-return-from-china-under-intense-surveillance">`சீனாவிலிருந்து திரும்பினர்; கொரோனா அச்சம்!'- தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட இருவர்</a></p><p>இதுதொடர்பாகப் பேசிய ஆட்டோ டிரைவர் அழகர்சாமி, `தினமும் நிறையப் பேர் ஆட்டோவில் ஏறி இறங்குகிறார்கள். யார் இதை விட்டுச்சென்றது என்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தேன். `யாராவது பணத்தைக் கேட்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தால் சொல்லுங்கள்' என்று நண்பர்களிடம் கூறியிருந்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காவல்நிலையத்தில் பணத்தை ஒப்படைத்துவிடலாம் என்று வந்தேன். நல்லவேளையாக, முதியவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனால், எளிதாக அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது” என்றார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-auto-driver-hounoured-by-police">`நம்மள மாதிரிதான அவங்களும் கஷ்டப்படுவாங்க!'- கோவை பெண்ணை நெகிழவைத்த ஆட்டோ ஓட்டுநர்</a></p><p>மகன்கள் கைவிட்ட நிலையில் உழைத்து சம்பாதித்த முதியவர், தன்னுடைய பணம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சியடைந்தார். ``உழைத்த பணம் எப்பவும் கையை விட்டுப் போகாது” என்றார். அழகர்சாமியின் நேர்மையைப் பாராட்டி, ஆய்வாளர் சரவண தெய்வேந்திரன், அவருக்குப் பரிசளித்தார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
Live: கொரோனா வைரஸ்... பாதிப்புகளும் உயிரிழப்புகளும்!
</title>
<link>
https://www.vikatan.com/health/international/coronavirus-infection-and-death-live-updates
</link>
<comments>
https://www.vikatan.com/health/international/coronavirus-infection-and-death-live-updates#comments
</comments>
<guid isPermaLink="false">d2a2c3d4-b2a0-4e76-90ba-74049b4862c4</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 12:00:52 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T12:00:52.122Z</atom:updated>
<atom:author>
<atom:name>பெ.மதலை ஆரோன்</atom:name>
<atom:uri>/api/author/634754</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>health,china,Coronavirus</media:keywords>
<media:content height="395" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/b64ed8d4-94ae-4fdb-8e83-ec16bdc20e60/corano_banner.gif" width="700">
<media:title type="html">
<![CDATA[ Coronavirus ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/b64ed8d4-94ae-4fdb-8e83-ec16bdc20e60/corano_banner.gif?w=280" width="280"/>
<category>international</category>
<content:encoded>
<![CDATA[
<p>கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நிமிடத்துக்கு நிமிடம் கூடிக்கொண்டே போகும் நிலையில், அதுகுறித்த தவறான தகவல்களும் வேகமாகப் பரவிவருகின்றன. உலகளவில், கொரோனாவின் தாக்கம் தற்போதைக்கு எந்தளவு உள்ளது என்பதைத் துல்லியமாகவும் சரியாகவும் கீழுள்ள Dashboard-ல் தெரிந்துகொள்ளலாம்.</p><figure><script src="//my.visme.co/visme.js"></script><div class="visme_d" data-url="907no47p-untitled-project" data-w="800" data-h="1441" data-domain="my"></figure>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
மதுரையில், சாலை அருகே உறங்கிய 3 தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்!
</title>
<link>
https://www.vikatan.com/news/accident/three-workers-died-in-lorry-accident-in-madurai
</link>
<comments>
https://www.vikatan.com/news/accident/three-workers-died-in-lorry-accident-in-madurai#comments
</comments>
<guid isPermaLink="false">d250b4de-224d-485e-8e2e-b9a69b45ce7e</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 11:55:01 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T11:55:01.675Z</atom:updated>
<atom:author>
<atom:name>செ.சல்மான் பாரிஸ்</atom:name>
<atom:uri>/api/author/614765</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>accident,controversy,madurai,smart city</media:keywords>
<media:content height="622" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/306c69ae-5e08-4585-b846-6e2daeef08a2/IMG_20200206_WA0002.jpg" width="1280">
<media:title type="html">
<![CDATA[ ஸ்மார்ட் சிட்டி பணி விபத்து ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/306c69ae-5e08-4585-b846-6e2daeef08a2/IMG_20200206_WA0002.jpg?w=280" width="280"/>
<category>accident</category>
<content:encoded>
<![CDATA[
<p>மதுரையில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக இரவு பகலாக வேலை செய்ய வந்த தொழிலாளர்கள் 3 பேர், வேலைபார்த்த இடத்தில் உறங்கிக்கொண்டிருந்தபோது, லாரி ஏறி பலியானது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/889bd6f9-8881-4449-ac81-33df582f98e6/IMG_20200206_WA0003.jpg" /><figcaption>தொழிலாளர் பலி </figcaption></figure><p>மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை மாநகராட்சி தேர்வுசெய்யப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த மே மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட வேண்டும் என்றாலும், நெருக்கடியான நகரம் என்பதால், சிரமத்துக்கு இடையேதான் வேலை நடந்துவருகிறது.</p><p>அதன் ஒரு பகுதியாக, மதுரை வைகை ஆற்றின் கரையோரங்களில் சாலை அமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. ஓபுளா படித்துறைப் பாலம் அருகே, நள்ளிரவில் பணி செய்துவிட்டு அங்கேயே தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/0b2b4c07-af06-42de-8468-c9f4c293a303/smaart_city.jpg" /><figcaption>ஸ்மார்ட் சிட்டி பணிகள் </figcaption></figure><p>இவர்கள் அங்கு படுத்திருப்பதைப் பார்க்காமல், அங்கு வந்த கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி பின்நோக்கி வந்து, மூன்று பேர் மீதும் ஏறியுள்ளது. அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பெரியசாமி இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,</p><p>இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து, அடிபட்டு துடித்துக்கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த பாலு என்ற தொழிலாளரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/306c69ae-5e08-4585-b846-6e2daeef08a2/IMG_20200206_WA0002.jpg" /><figcaption>ஸ்மார்ட் சிட்டி பணி விபத்து </figcaption></figure><p>ஸ்மார்ட் சிட்டி பணிகளை வேகமாக முடிக்க ஒப்பந்தம் எடுத்தவர்கள், அதிக தொழிலாளர்களை வைத்துக்கொள்ளாமல் குறைந்த ஆட்களை வைத்து வேலை செய்வதால்தான், இதுபோன்ற கொடூரமான விபத்துகள் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தற்போது, லாரி ஓட்டுநர் ஆரோக்கியசாமியைக் கைதுசெய்துள்ளது காவல்துறை. `இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தொழிலாளர்களின் நலனில் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம் அக்கறை செலுத்த வேண்டும்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`சோர்வடையாம இருக்கணும்!' - மாணவர்களுக்கு 3 நேரம் உணவு கொடுத்து அசத்தும் புதுக்கோட்டை கிராமம்
</title>
<link>
https://www.vikatan.com/social-affairs/education/pudhukottai-village-peoples-gesture-gets-applause
</link>
<comments>
https://www.vikatan.com/social-affairs/education/pudhukottai-village-peoples-gesture-gets-applause#comments
</comments>
<guid isPermaLink="false">cebb508a-6e25-4b20-9775-34fa5a431423</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 11:38:38 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T11:38:38.904Z</atom:updated>
<atom:author>
<atom:name>மணிமாறன்.இரா</atom:name>
<atom:uri>/api/author/616150</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>student,pudukkottai,people</media:keywords>
<media:content height="1280" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/8e6c5f2a-210a-42bf-a39f-e62068dde92d/WhatsApp_Image_2020_02_06_at_11_16_02_AM.jpeg" width="1280">
<media:title type="html">
<![CDATA[ தேர்ச்சியை அதிகரிக்க ஒரு முயற்சி ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/8e6c5f2a-210a-42bf-a39f-e62068dde92d/WhatsApp_Image_2020_02_06_at_11_16_02_AM.jpeg?w=280" width="280"/>
<category>education</category>
<content:encoded>
<![CDATA[
<p>புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஏம்பல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் டாக்டர், வக்கீல், இன்ஜினீயர் எனப் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர். </p><p>ஏம்பல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு மட்டுமல்லாது கிராம வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். பொதுத் தேர்வு நெருங்கிக்கொண்டிருப்பதால், ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்கச் சிறப்பு வகுப்புகளைத் தொடங்கிவிட்டனர். மாலை நேர வகுப்புகள் நடப்பது பற்றி அறிந்த முன்னாள் மாணவர் ஒருவர், மாலை நேர வகுப்பின் போது மாணவர்கள் சோர்வடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தன் சொந்தச் செலவில் மாலை நேரச் சிற்றுண்டி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். அது தொடரவே, இன்று கிராம மக்களால், 3 நேரமும் சத்தான உணவு வழங்கும் திட்டமாக மாறி பொதுத் தேர்வு மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பின்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/78ffe726-3541-4300-a515-f1015f8ff09f/WhatsApp_Image_2020_02_06_at_11_16_15_AM__3_.jpeg" /><figcaption>தேர்ச்சியை அதிகரிக்க ஒரு முயற்சி</figcaption></figure><p>இதுபற்றி முன்னாள் மாணவர்கள் கூறும்போது,&nbsp;``பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில் எல்லாப் பள்ளியிலும் 1 மணி நேரமாவது மாலையில் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் எடுப்பாங்க. நீண்ட நேரம் பள்ளியில் இருக்காங்க. குறிப்பாக, மாலை நேர வகுப்பின் போது மாணவர்கள் பெரும்பாலும், சோர்வடைந்து போயிடுவாங்க. அவர்களின் சோர்வைப் போக்குவதற்கு டீ, காபி, ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிடும் போது கொஞ்சம் புத்துணர்ச்சியாக முடியும். நல்லா சாப்பிட்டு, உடம்பு ஆரோக்கியமா இருந்தால் தானே படிப்பிலயும் ஆர்வம் காட்ட முடியும். எங்களுக்கு எல்லாம் அந்தக் காலத்துல இதுமாதிரி எல்லாம் கிடைக்கல. முன்னாள் மாணவர்கள் சேர்ந்து இந்தப் பொதுத்தேர்வு மாணவர்களுக்குச் சிற்றுண்டி கொடுக்கலாம்னு நெனச்சு ஆரம்பிச்சோம். பாசிப்பயிறு, கொண்டக்கடலை, பிஸ்கட் உள்ளிட்டவற்றைக் கொடுத்தோம்.</p><p>அதுக்கப்புறம், எங்க ஊர் கிராம மக்கள், தன்னார்வலர்கள் கிட்டயும் சொன்னோம் பலரும் மாணவர்களுக்கு உணவு வழங்க முன்வந்தனர். அதே நேரத்தில் காலை நேரத்திலயும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுக்கலாம்னு ஆசிரியர்கள் சொன்னாங்க. `தாராளமாக வகுப்பு எடுங்க. முன்னாள் மாணவர்கள் கிராம மக்கள் சேர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குக் காலை உணவு கொடுக்கிறோம்'னு சொன்னோம். அதுபடி செஞ்சிக்கிட்டு வர்றோம். ஆசிரியர்களும் மாணவர்கள் மேல அக்கறையாக இருக்காங்க. </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/46be53d8-28e5-4ac3-9244-1963a2bd0c8a/WhatsApp_Image_2020_02_06_at_11_16_15_AM__1_.jpeg" /><figcaption>தேர்ச்சியை அதிகரிக்க ஒரு முயற்சி</figcaption></figure><p>ஆசிரியர்களும் ரொம்ப நல்லாவே சப்போர்ட் பண்றாங்க. முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், தன்னார்வலர்கள், என கிராமத்தைச் சேர்ந்த பலராலும் இன்று தினமும் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சாப்பாடு என்பதால், எந்தவிதக் கோளாறு இல்லாமல், பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம். தொடர்ந்து, இது நடக்கணும். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க இதுவும் ஒரு முயற்சி என்றுதான் நாங்கள் பார்க்கிறோம். இதேபோல, ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள், முன்னாள் மாணவர்கள் முயற்சி எடுக்கணும்" என்றனர்</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`5 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை!' - திசைமாறும் துடியலூர் சிறுமி வழக்கு
</title>
<link>
https://www.vikatan.com/news/crime/police-to-begin-re-investigation-on-thudiyalur-child-case
</link>
<comments>
https://www.vikatan.com/news/crime/police-to-begin-re-investigation-on-thudiyalur-child-case#comments
</comments>
<guid isPermaLink="false">26d931af-0edc-4994-b4d1-88b347887cfd</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 11:25:54 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T11:25:54.173Z</atom:updated>
<atom:author>
<atom:name>குருபிரசாத்</atom:name>
<atom:uri>/api/author/615624</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>crime,judgement,court,child</media:keywords>
<media:content height="700" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/b27a928f-720b-4c8a-8a72-6b19d109bc66/vikatan_2019_05_e628ebce_104f_422f_a68b_4098ec7fd32d_153601_thumb.jpg" width="700">
<media:title type="html">
<![CDATA[ சிறுமி ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/b27a928f-720b-4c8a-8a72-6b19d109bc66/vikatan_2019_05_e628ebce_104f_422f_a68b_4098ec7fd32d_153601_thumb.jpg?w=280" width="280"/>
<category>crime</category>
<content:encoded>
<![CDATA[
<p>கோவை துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியைச் சேர்ந்த 1-ம் வகுப்பு படித்துவந்த 6 வயது சிறுமி, கடந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனார். இதையடுத்து, அடுத்த நாள் வீட்டின் எதிரே துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, துடியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இதுதொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், சந்தோஷ்குமார் என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். சந்தோஷ் குமாருக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/dccd515f-a796-4785-9a1b-f52bb796e432/vikatan_2019_12_68258618_dde7_4b6b_aebe_dcd210e124f6_643.jfif" /><figcaption>சந்தோஷ்குமார்</figcaption></figure><p>இதனிடையே, இந்த வழக்கில் மேலும் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக டி.என்.ஏ ரிப்போர்ட்டில் தெரியவந்தது. இதையடுத்து, மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க, வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று சிறுமியின் தாய் கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில், கோவை மாவட்ட குழந்தை தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் அனந்த நாயகி, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/crime/153606-postmortem-report-of-coimbatore-child-reveals-shocking-details-about-murder">`மூக்கில் துணி, கழுத்தில் கயிறு!'- அதிர்ச்சியளிக்கும் துடியலூர் சிறுமியின் பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்</a></p><p>இதையடுத்து, அனந்த நாயகி தலைமையிலான போலீஸ் டீம் வழக்கை மீண்டும் விசாரித்துவருகின்றனர். முக்கியமாக, இதில் சம்பந்தப்பட்டுள்ள மற்றொரு நபரைக் கண்டுபிடிப்பதற்குத் தீவிரம்காட்டிவருகின்றனர். இதற்காக சிறுமியின் உறவினர்கள், சந்தோஷ்குமாரின் நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/1aadf86b-2249-44fc-81c1-3221af747327/vikatan_2019_12_0d03ff47_c820_463b_882a_b2a901a968a6_640.jpg" /><figcaption>விசாரணை</figcaption></figure><p>இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். `சம்பவம் நடந்த நேரத்தில், அங்கு யாரெல்லாம் இருந்தார்களோ அவர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம். டி.என்.ஏ சோதனையில்தான் மற்றொரு நபர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே, அதே டி.என்.ஏ சோதனை மூலமாகத்தான் அந்த நபர் யாரென்று கண்டுபிடிக்க முடியும். முதல்கட்டமாக, 5 பேரிடம் டி.என்.ஏ சோதனை செய்ய உள்ளோம். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்' என்றனர்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`அலெர்ட்டான சிபிசிஐடி; உதவிய முக்கியப் புள்ளி!' - நீதிமன்றத்தில் ஜெயக்குமார் சரணடைந்த பின்னணி #TNPSC
</title>
<link>
https://www.vikatan.com/government-and-politics/crime/reason-behind-tnpsc-scam-suspect-jayakumar-surrenders-in-court
</link>
<comments>
https://www.vikatan.com/government-and-politics/crime/reason-behind-tnpsc-scam-suspect-jayakumar-surrenders-in-court#comments
</comments>
<guid isPermaLink="false">88ad0369-76b3-49a3-8b50-ffdedd47ac65</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 10:53:44 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T10:53:44.498Z</atom:updated>
<atom:author>
<atom:name>எஸ்.மகேஷ்</atom:name>
<atom:uri>/api/author/614572</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>cbcid,tnpsc,group 4 exam,TNPSC Scam</media:keywords>
<media:content height="850" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/ab967c09-bebe-4b25-ae29-14a6c2a4ffb4/abca5e53-408f-4132-ae3f-8995fc395d84.jpg" width="1280">
<media:title type="html">
<![CDATA[ ஜெயக்குமார் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/ab967c09-bebe-4b25-ae29-14a6c2a4ffb4/abca5e53-408f-4132-ae3f-8995fc395d84.jpg?w=280" width="280"/>
<category>crime</category>
<content:encoded>
<![CDATA[
<p>டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டுவந்த ஜெயக்குமார், இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரைச் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் ஜெயக்குமாரைத் தேடி சிபிசிஐடி போலீஸார் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்குச் சென்ற நிலையில், அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/5eeae58f-3832-4cb9-b4e9-c742f341d7b8/8436b943-3608-43b8-9650-1b2bd1c8c3ba.jpg" /><figcaption>சித்தாண்டி </figcaption></figure><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/crime/shocking-background-of-police-si-siddhandi-over-tnpsc-scam">`யார் இந்த எஸ்.ஐ சித்தாண்டி?' - டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் அதிர்ச்சி கொடுத்த 5 நிபந்தனைகள்</a></p><p>டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் இதுவரை 32 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அதில் சிவகங்கை மாவட்டம், பெரியகண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த சென்னை ஆயுதப்படைக் காவலர் சித்தாண்டியும் அவரின் கூட்டாளிகளுமான காவலர்கள் பூபதி, முத்துக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் என்கிற சக்தி ஆகியோரை போலீஸார் பிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அளித்த தகவலின்படி, ஜெயக்குமார் மூலமாகத் தேர்வு முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. தற்போது ஜெயக்குமார், போலீஸாரிடம் சிக்காமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அதனால் அவரைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவுசெய்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். </p><p>இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சித்தாண்டியிடம் விசாரித்தபோது, அவர் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் 7 தேர்வர்களிடம் 82,50,000 ரூபாயைப் பெற்று, காவலர் முத்துக்குமாரிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை காவலர் முத்துக்குமார், விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் என்கிற சக்தியிடம் கொடுத்துள்ளார். சக்திமூலம் அந்தப் பணம் ஜெயக்குமாருக்கு சென்று, தேர்வில் முறைகேடு செய்து 7 பேரும் தேர்ச்சிபெற்று அரசுப்பணியில் சேர்ந்துள்ளனர். </p><blockquote>ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கார்த்திக், தன்னுடைய உறவினர் பாஸ்கர் மூலம் ஜெயக்குமாரிடம் 9,00,000 ரூபாய் கொடுத்து 268.5 மதிப்பெண்கள் பெற்று 36-வது இடத்தில் தேர்ச்சிபெற்று, சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார்.</blockquote><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/82d50f06-5dcc-4649-bc3c-6c7a7c480f00/5c0e092f-696f-4cbd-bd58-c7ba6cc1a957.JPG" /><figcaption>டிஎன்பிஎஸ்சி அலுவலகம் </figcaption></figure><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/tamilnadu/cbcid-police-investigates-si-sithandi-over-tnpsc-scam">`முகப்பேர் ஜெயக்குமாரை முழுதாக நம்பினால் அரசு வேலை!' - சிபிசிஐடி-க்கு அதிர்ச்சி கொடுத்த சித்தாண்டி</a></p><p>இதைத் தொடர்ந்து, 2019ல் நடந்த குரூப் 4 தேர்வில் 16 தேர்வர்களிடமிருந்து தலா 7,50,000 ரூபாயைப் பெற்றுள்ளார் சித்தாண்டி. பின்ன,ர் அந்தப் பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்து 16 பேரில் 5 பேரை முறைகேடு செய்து தேர்ச்சிபெற வைத்துள்ளார். சித்தாண்டியின் கூட்டாளியான சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றும் பூபதி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர். இவர், குரூப் 2 தேர்வுக்காக 5 பேரிடம் 55,00,000 ரூபாய் பெற்று கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் என்கிற சக்தியிடம் கொடுத்து முறைகேடு செய்து, 5 பேரையும் தேர்ச்சிபெற வைத்துள்ளார். </p><p>ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த கார்த்திக், தன்னுடைய உறவினர் பாஸ்கர் மூலம் ஜெயக்குமாரிடம் 9,00,000 ரூபாய் கொடுத்து 268.5 மதிப்பெண்கள் பெற்று, 36-வது இடத்தில் தேர்ச்சிபெற்று, சென்னை எழிலகத்தில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார். சித்தாண்டி, பூபதி, கார்த்திக் ஆகிய 3 பேரை நேற்று கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். ஏற்கெனவே, இந்த வழக்கில் கைதான டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்துவருகிறோம். அவர், ராமேஸ்வரம், சிவகங்கையிலிருந்து விடைத்தாள்களைக் கொண்டுவந்தபோது முறைகேடு செய்ததை விளக்கமாகக் கூறியுள்ளார். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/f46ef3d4-3f5d-4e6d-bc20-790be38aa19d/_____________________________________________1.jpg" /><figcaption>ஜெயக்குமார் </figcaption></figure><p>இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்பன போன்ற கேள்விகள் ஓம்காந்தனிடம் கேட்கப்பட்டுள்ளன. அதற்கு அவர் அளிக்கும் பதிலின் அடிப்படையில், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சூழ்நிலையில்தான், முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் விசாரித்தால் இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் கிடைக்கும். அதோடு, தேர்வு முறைகேட்டில் ஜெயக்குமாருக்கு உதவிய டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் யார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்" என்றார். </p><p>நீதிமன்றத்தில் சரண் அடையத் திட்டமிட்டிருந்த காவலர் சித்தாண்டியைக் கடைசி நேரத்தில் சிபிசிஐடி போலீஸார் மடக்கிப்பிடித்துவிட்டனர். தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரும் நீதிமன்றத்தில் சரண் அடையப்போவதாக சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ஆனால், அவர் எந்த நீதிமன்றத்தில் சரண் அடையப் போகிறார் என்பது போலீஸாருக்குத் தெரியவில்லை. அதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கண்காணித்துவந்த நேரத்தில்தான் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அவர் வந்து சரண் அடைந்துள்ளார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/tamilnadu/chennai-secretariat-staff-applied-bail-petition-in-tnpsc-scam-case">`எனக்கு குழந்தை பிறந்து 14 நாள்கள்தான் ஆகின்றன!'- தலைமைச் செயலக ஊழியர் முன்ஜாமீன் மனு #TNPSC</a></p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/a1c1e207-d108-4570-a346-b5242c40c318/2f6833d6-febd-40b2-bb32-b0b73cb1eead.jpg" /><figcaption>ஜெயக்குமார் வீடு </figcaption></figure><p>கடந்த சில தினங்களுக்குமுன் ஜெயக்குமாரின் வீட்டுக்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார், பென்டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்களைப் பறிமுதல் செய்திருந்தனர். அதோடு, ஜெயக்குமார் மற்றும் அவரின் மனைவியின் வங்கிக் கணக்குகளையும் முடக்கினர். போலீஸாரின் நெருக்கடி காரணமாக ஜெயக்குமார், வடமாநிலத்திலிருந்து கார் மூலம் சென்னை வந்தார். </p><p>வழக்கறிஞர்களைச் சந்தித்த அவர், நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். போலீஸார் தீவிரமாகக் கண்காணித்திருந்தால் ஜெயக்குமாரைப் பிடித்திருக்கலாம். ஆனால், போலீஸாரிடமி ருந்து ஜெயக்குமாரைக் காப்பாற்றியதில் முக்கியப் பிரமுகர்கள் சிலருக்குப் பங்கு உள்ளது. </p><p>வடமாநிலத்திலும் சென்னையிலும் அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரைச் சந்தித்தபிறகே, ஜெயக்குமார் சரண் அடையும் முடிவை எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான், சிபிசிஐடி போலீஸாரால் ஜெயக்குமாரைப் பிடிக்க முடியவில்லை என்கின்றனர் விவரம் தெரிந்த சிபிசிஐடி போலீஸார்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் உறுப்பினர்; கமல்ஹாசனின் உறவினர்!' -யார் இந்த பராசரன்?
</title>
<link>
https://www.vikatan.com/news/india/lawyer-k-parasaran-from-tamilnadu-to-head-ram-temple-trust
</link>
<comments>
https://www.vikatan.com/news/india/lawyer-k-parasaran-from-tamilnadu-to-head-ram-temple-trust#comments
</comments>
<guid isPermaLink="false">c97483d3-c8fb-43b5-969e-2c220b51bf20</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 10:45:00 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T10:45:00.482Z</atom:updated>
<atom:author>
<atom:name>எம்.குமரேசன்</atom:name>
<atom:uri>/api/author/615426</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
Kamal Haasan,Indira Gandhi,ayodhya dispute,Ayodha Verdict,Ayodhya
</media:keywords>
<media:content height="386" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/85e364b2-fa83-4f8b-a461-8021a23f5a11/pars_.jpg" width="500">
<media:title type="html">
<![CDATA[ பராசரன் (இடது ஓரம்) ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/85e364b2-fa83-4f8b-a461-8021a23f5a11/pars_.jpg?w=280" width="280"/>
<category>India</category>
<content:encoded>
<![CDATA[
<p>உச்சநீதிமன்ற முன்னாள் வழக்கறிஞரும் ராமஜென்மபூமி வழக்கில் இந்துக்கள் தரப்பில் வாதாடியவருமான கே.பராசரன் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முதல் உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள இவரின் வீடு ராமஜென்மபூமி அறக்கட்டளையின் பதிவு செய்யப்பட்ட அலுவலகமாகச் செயல்படும். ஸ்ரீரங்கத்தில் 1927- ம் ஆண்டு, பிறந்த பராசரனின் தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலான பராசரனின் மகன்கள் மோகன், சதீஷ், பாலாஜி ஆகியோரும் வழக்கறிஞர்களே. 1958- ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கிய இவர், 1980- ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாகவும் 1983- ம் ஆண்டு முதல் 89- ம் ஆண்டு வரை இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்துள்ளார். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/1adb2a01-6ea2-4206-ab42-02fe722c1753/pars__1_.jpg" /><figcaption>பராசரன் </figcaption></figure><p><a href="https://www.vikatan.com/social-affairs/politics/160295-forgotten-to-bring-handcuffs-why-lakshminarayanan-told-indira-gandhi">இந்திரா காந்தியை</a> எதிர்த்து கருத்துகளை வெளிப்படுத்தும் அளவுக்கு இவர் தைரியம் கொண்டவர். 1985- ம் ஆண்டு `இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் அலுவலகத்தை இடிப்பதற்காக காங்கிரஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது, சொலிசிட்டர் ஜெனராலாக இருந்த இவரின் அறிவுரையை மீறி இந்திரா அரசு செயல்பட்டது. இதன் காரணமாக, இந்த வழக்கில் வாதாட மறுத்த பராசரன், `நிர்பந்தித்தால் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்' என்றும் வெளிப்படையாக அறிவித்தார். பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/india/kia-motors-is-discussing-the-possibility-of-moving-their-plant-out-of-andhra-pradesh">`ஜெகன்மோகன் - சந்திரபாபு மோதல்!'- இரண்டே மாதத்தில் தமிழகத்துக்குத் தாவும் கியா நிறுவனம்?</a></p><p>பராசரன் மனைவி சரோஜா நடிகர் கமல்ஹாசனுக்கு உறவினர். 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, பராசரன் இரு வழக்குகளில் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். ஒன்று சபரிமலை வழக்கு. இந்த வழக்கில் நாயர் சொசைட்டி தரப்பில் ஆஜரான பராசரனுக்கு வெற்றி கிடைக்கவில்லை. </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/a0391718-25d8-47a3-bbbf-d5725b2473b6/RAM_.jpg" /><figcaption>ராமஜென்மபூமி கோயில் </figcaption></figure><p>உச்சநீதிமன்றம் அனைத்து வயதுப் பெண்களையும் <a href="https://www.vikatan.com/government-and-politics/politics/president-drops-plan-to-visit-sabarimala-temple">சபரிமலைக்குள்</a> அனுமதிக்க உத்தரவிட்டது. அடுத்ததாக, ராமஜென்ம பூமி வழக்கில் அவருக்கு வெற்றி கிடைத்தது. இந்த வழக்குக் கட்டணமாக பராசரன் ரூ.1 மட்டுமே சம்பளமாகப் பெற்றார். ராமஜென்மபூமி அறக்கட்டளையில் 15 பேர் இடம் பெறுகின்றனர். அதில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம் பெறுவார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். </p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`குடிபோதையில் தவறு செய்துவிட்டேன்; மன்னித்துவிடு!' - மகளுக்காகக் கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி
</title>
<link>
https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-a-man-in-pocso-act
</link>
<comments>
https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-a-man-in-pocso-act#comments
</comments>
<guid isPermaLink="false">973edd95-fb2e-4132-bbc7-7640b5976925</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 10:43:41 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T10:43:41.599Z</atom:updated>
<atom:author>
<atom:name>எஸ்.மகேஷ்</atom:name>
<atom:uri>/api/author/614572</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>
crime,police,student,pocso act,Chennai Police,child abuse
</media:keywords>
<media:content height="891" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/23a48c1d-b162-4a42-8a35-8fb5c34b17ac/22aa2352-aa74-4ccb-be5e-0eb2df433950.jpg" width="901">
<media:title type="html">
<![CDATA[ மனைவியால் சிறைக்குச் சென்ற கணவர் பழனி ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/23a48c1d-b162-4a42-8a35-8fb5c34b17ac/22aa2352-aa74-4ccb-be5e-0eb2df433950.jpg?w=280" width="280"/>
<category>crime</category>
<content:encoded>
<![CDATA[
<p>சென்னை அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், ப்ளஸ் டூ படிக்கும் மகளை அழைத்துக் கொண்டு அண
]]>
<![CDATA[
்ணாநகர் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த போலீஸாரிடம், தன்னுடைய மகளிடம் தன் கணவரே தவறாக நடந்த தகவலைக் கண்ணீரோடு கூறினார். உடனே அங்கிருந்த மகளிர் போலீஸார், `பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான புகார்களை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும். எனவே, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள்' என்று கூறினர். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2019-05/9fc294d0-34d5-4f8b-837c-8446fc06cb4e/154202_thumb.jpg" /><figcaption>representational image</figcaption></figure><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/crime/152379-youngster-arrested-for-pocso-act-at-tirupur">மனைவிக்குத் தெரியாமல் பள்ளி மாணவியுடன் திருமணம் - போக்ஸோ சட்டத்தில் திருப்பூர் இளைஞர் கைது!</a></p><p>இதையடுத்து, அந்தப் பெண்ணும் அவருடைய மகளும் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று விவரத்தைக் கூறினர். உடனே மகளிர் போலீஸார், புகாராக எழுதித் தரும்படி கூறியுள்ளனர். அதனால், அந்தப் பெண், தன்னுடைய கணவர் பழனி மீது புகார் எழுதிக் கொடுத்தார். </p><p>அந்தப் புகாரில், `எனக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்தவள் கல்லூரியிலும் 2-வது மகள் ப்ளஸ் டூ-வும் மூன்றாவது மகள் வீட்டு வேலையும் செய்து வருகின்றனர். எனக்கும் என் கணவர் பழனிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என்னுடன் 3 குழந்தைகள் உள்ளனர். வீட்டு வேலை செய்து அவர்களைக் கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறேன். </p><p>என் கணவரிடம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். நான் 24.1.2020 அன்று வேலைக்குச் சென்றுவிட்டேன். அப்போது வீட்டில் என் 2-வது மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார். அவர் பள்ளிக்குச் செல்ல வீட்டிலிருந்து வெளியில் வந்துள்ளார். அப்போது மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவர் பழனி, மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். என் மகள் சத்தம் போட்டதும் அவர் வெளியில் சென்றுவிட்டார். பின்னர், நடந்த சம்பவத்தை போனில் கண்ணீர்மல்க என்னிடம் அவள் கூறினார். இதுகுறித்து என் கணவரிடம் கேட்டதற்கு அவர் என்னை அவமரியாதையாகப் பேசினார். எனவே, என் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2019-05/efcfd4c7-cfd9-4260-aede-5ba54454519c/152379_thumb.jpg" /><figcaption>representational image </figcaption></figure><p>புகாரின்பேரில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியிடமும் தனியாக விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி அண்ணாநகர் கிழக்கு வ.உ.சி நகரைச் சேர்ந்த பழனியை (41) கைது செய்து சிறையில் அடைத்தனர். </p><p>இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கைதான பழனி, கட்டட வேலை செய்துவருகிறார். மனைவி, குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்துவந்த பழனி, குடிபோதையில் அப்படி நடந்துள்ளார். தன்னுடைய தவறுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். ஆனால், பழனியின் மனைவியும் பாதிக்கப்பட்ட மகளும் அவரை மன்னிக்கவில்லை. பழனியின் மனைவி, அவரின் மகள் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனியைக் கைது செய்துள்ளோம்" என்றனர். </p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`காதலிக்கவில்லையென்றால் தூக்கில் தொங்குவேன்!' -வீடியோ காலில் பேசும்போதே விபரீத முடிவெடுத்த இளைஞர்
</title>
<link>
https://www.vikatan.com/news/crime/manipur-youth-commits-suicide-in-chennai
</link>
<comments>
https://www.vikatan.com/news/crime/manipur-youth-commits-suicide-in-chennai#comments
</comments>
<guid isPermaLink="false">8e2d15aa-97f9-414b-a183-5cc8d1fe964b</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 10:34:35 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T10:34:35.778Z</atom:updated>
<atom:author>
<atom:name>எஸ்.மகேஷ்</atom:name>
<atom:uri>/api/author/614572</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>crime,suicide,love,death,Chennai Police</media:keywords>
<media:content height="900" medium="image" url="https://images.assettype.com/vikatan/2019-10/a7569c40-28ee-46f5-b512-2e5f870030f4/BB_4.jpg" width="1200">
<media:title type="html">
<![CDATA[ மரணம் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2019-10/a7569c40-28ee-46f5-b512-2e5f870030f4/BB_4.jpg?w=280" width="280"/>
<category>crime</category>
<content:encoded>
<![CDATA[
<p>சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனையிலிருந்து டி.பி. சத்திரம் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசிய ஒருவர், `அண்ணாநகர் கிழக்கு, ஆர்.வி.நகர், முதல் அவென்யூ, திருவள்ளூவர் நகரில் குடியிருக்கும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஜோனாதன் பமோயி (25) என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ஜோனாதன் தற்கொலை குறித்து விசாரித்தனர். </p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/crime/three-persons-in-a-family-consumed-poison-for-debt-problem">`கந்துவட்டி கொடுமை.. நின்றுபோன காதல் திருமணம்’- அவமானத்தால் தற்கொலை செய்த பெற்றோர்; மகன் கவலைக்கிடம்</a></p><p>இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீஸார் கூறுகையில், ``மணிப்பூரைச் சேர்ந்த ஜோனாதன் பமோயி, சென்னை அண்ணாநகரில் தங்கியிருந்து ஹோட்டல் ஒன்றில் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்துவந்தார். இவர், 5.2.2020-ம் தேதி (நேற்று) மாலை ஹோட்டல் மேலாளரிடம் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் ஹோட்டலுக்குத் திரும்பிவரவில்லை. மறுநாளும் அவர் வேலைக்கு வரவில்லை. அதனால் ஹோட்டல் மேலாளர் சந்தேகமடைந்துள்ளார். </p><p>இதையடுத்து ஜோனாதன் பமோயின் செல்போன் நம்பருக்குப் போன் செய்தார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அதனால் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு மேலாளர் சென்றார். அங்கு படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் போர்வையால் ஜோனாதன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்து மேலாளர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் உதவியுடன் ஜோனாதனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். </p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-01/bc33bda1-a6fc-48b6-8c97-9d9392863060/man_talking_on_the_phone_1582238_960_720.png" /><figcaption>representational image</figcaption></figure><p>அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று கூறினர். இதையடுத்து அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஜோனாதன் பமோயி தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ காலில் பெண் ஒருவரிடம் பேசியது தெரியவந்தது.</p><p>அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, ஜோனாதன் பமோயி, தன்னை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும் தன்னைக் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணுக்கு வீடியோ காலில் பேசிய படியே ஜோனாதன் தூக்குப் போட்டுள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியுள்ளோம். வீடியோ கால் தொடர்பாகவும் விசாரித்துவருகிறோம்" என்றனர். </p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`வீட்டுக்குள்ள யாரும் போகக் கூடாது!' -நெல்லையில் மனநலம் பாதித்த மகனால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்
</title>
<link>
https://www.vikatan.com/news/crime/nellai-police-arrested-man-in-murder-charge
</link>
<comments>
https://www.vikatan.com/news/crime/nellai-police-arrested-man-in-murder-charge#comments
</comments>
<guid isPermaLink="false">19def5a6-d4c5-4f36-8a57-d2e9e8b3734d</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 10:33:14 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T10:33:14.571Z</atom:updated>
<atom:author>
<atom:name>பி.ஆண்டனிராஜ்</atom:name>
<atom:uri>/api/author/614511</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>cinema,murder,arrest,police</media:keywords>
<media:content height="270" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/cc4d2b58-feb7-471b-bab6-33a46d9afaf1/murder.jpg" width="480">
<media:title type="html">
<![CDATA[ கொலை ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/cc4d2b58-feb7-471b-bab6-33a46d9afaf1/murder.jpg?w=280" width="280"/>
<category>crime</category>
<content:encoded>
<![CDATA[
<p>நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, ஆபுத்திரன் தெருவைச் சேர்ந்தவர் வானமாமலை. இவரது மனைவி விமலா. வானமாமலை இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 70 வயதான விமலா, இரண்டாவது மகன் அகிலன் என்பவருடன் வசித்துவந்தார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/e8f887f7-fab7-48d4-86c1-dee4b2972245/vimala.jpg" /><figcaption>உயிரிழந்த மூதாட்டி விமலா</figcaption></figure><p>ரயில்வே துறையில் பணியாற்றிய வானமாமலை, விருதுநகரில் பணியில் இருந்தபோது இறந்துவிட்டதால், அவரது மகன் அகிலனுக்கு வாரிசு அடிப்படையில் வேலை கிடைத்தது. அதனால் தாய் விமலாவுடன் அவர் விருதுநகரில் வசித்துவந்தார்.</p><p>அகிலனுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனநலப் பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அவரது மனநலப் பிரச்னை காரணமாக வேலையில் குளறுபடிகள் ஏற்பட்டதால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/4f8755b3-64df-45eb-9d41-76b088dffd03/agilan.jpg" /><figcaption>மனநலம் பாதிக்கப்பட்ட அகிலன்</figcaption></figure><p>வானமாமலை உயிருடன் இருந்தபோது, பாளையங்கோட்டை ஆபுத்திரன் தெருவில் நான்கு வீடுகளைக் கட்டியிருக்கிறார். வேலையை இழந்த அகிலன், தன் தாய் விமலாவுடன் அதில் ஒரு வீட்டில் குடியிருந்தார். மூன்று வீடுகளிலிருந்து கிடைக்கும் வாடகைப் பணத்தை வைத்து இருவரும் குடும்பத் தேவைக்கான செலவுகளைச் சமாளித்து வந்திருக்கிறார்கள்.</p><p>இருவரும் அருகில் வசிப்பவர்களிடம் அதிகம் பேசுவதில்லை எனத் தெரிகிறது. இவர்களின் வீட்டு மாடியில் குடியிருந்த மார்ட்டின் என்பவர், சில வாரங்களுக்கு முன்பு வீட்டைக் காலிசெய்துவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் வீட்டுக்குக் கொடுத்திருந்த அட்வான்ஸ் தொகையை விமலாவிடமிருந்து வாங்குவதற்காக மார்ட்டினின் தந்தை இன்று வந்துள்ளார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/f489908b-39dd-45e1-ab0f-40321f187666/passbook.jpg" /><figcaption>மூதாட்டி விமலாவின் வங்கி பாஸ்புக்</figcaption></figure><p>அட்வான்ஸ் பணத்தை வாங்க வீட்டுக்குள் செல்ல முயன்ற மார்ட்டினின் தந்தையை வாசலில் அமர்ந்திருந்த அகிலன் அனுமதிக்கவில்லை. அவரிடம் கேட்டபோது, ‘எங்கம்மா செத்துட்டாங்க’ எனச் சொல்லியிருக்கிறார். வீட்டில் இருந்து துர்நாற்றம் எழுந்ததால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார்.</p><p>பாளையங்கோட்டை போலீஸார் விரைந்து வந்து வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, அவர்களையும் வீட்டுக்குள் விட மறுத்து வாசலிலேயே அமர்ந்திருந்துள்ளார். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர், போலீஸார் அவரைச் சமாளித்து வீட்டுக்குள் சென்று உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/ce28aa9e-c2d4-43f4-973e-5a706bf7e496/murder.jpg" /><figcaption>image</figcaption></figure><p>போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், விமலா தலையில் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கொலை நடந்து இரு தினங்கள் ஆகியிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.</p><p>மனநலம் பாதிக்கப்பட்ட அகிலனுக்கும் தாய் விமலாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும் என அருகில் வசிப்பவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். சண்டையிட்ட போதிலும் இருவரும் சீக்கிரமே சமாதானமடைந்து சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.&nbsp;</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/news/crime/son-murdered-father-over-dispute-in-chennai"> `குடிக்க பணம் தரல; வழக்கம் போலதான் அடித்தேன்' - 80 வயது அப்பாவைக் கொலை செய்த மகன் </a></p><p>அதனால் 70 வயது மூதாட்டியான விமலாவை மனநலம் பாதித்த மகனே கொலை செய்தாரா அல்லது வேறு யாரேனும் வந்து கொலை செய்தார்களா என போலீஸார் விசாரித்துவருகிறார்கள். </p><p>சண்டையின்போது, ஆத்திரத்தில் அகிலனே தாயைக் கொலை செய்துவிட்டு ’ராம்’ படப்பாணியில் அருகிலேயே அமர்ந்திருந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`32 வருஷம்; 80 சீட்டுகள்; 2021-ல் ஆட்சி!' -பா.ம.க கூட்டத்தில் கணக்குப் போட்ட ராமதாஸ்
</title>
<link>
https://www.vikatan.com/news/politics/pmks-strategy-over-2021-assembly-election
</link>
<comments>
https://www.vikatan.com/news/politics/pmks-strategy-over-2021-assembly-election#comments
</comments>
<guid isPermaLink="false">cfb0254a-02bb-4dd6-b753-9dd858c93301</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 10:23:06 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T10:23:06.502Z</atom:updated>
<atom:author>
<atom:name>எம்.திலீபன்</atom:name>
<atom:uri>/api/author/614388</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>ADMK,ramadoss,DMK,pmk,election</media:keywords>
<media:content height="571" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/b526110f-b753-4a9f-b9b4-c3e4460238d4/882ba194_9a72_40b5_bb68_d1d6f2388b3c.jfif" width="960">
<media:title type="html">
<![CDATA[ பா.ம.க செயற்குழு கூட்டம் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/b526110f-b753-4a9f-b9b4-c3e4460238d4/882ba194_9a72_40b5_bb68_d1d6f2388b3c.jfif?w=280" width="280"/>
<category>politics</category>
<content:encoded>
<![CDATA[
<p>``பெரியார் வாழ்ந்த பூமியில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஆகியவை தமிழகத்துக்குள் நுழைய இருக்கின்றன. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தடைசெய்திருக்கிறார்கள். இவர்கள் உள்ளே நுழைந்தால் பெரியார் வாழ்ந்த பூமி, கலவர பூமியாக மாறிவிடும்" எனக் கடுமையாகக் குற்றம்சாட்டியதோடு, ``தமிழகத்தில் 80 சீட்டுகளைப் பிடித்தால் நாம்தான் ஆட்சி அமைப்போம்" என்றும் பேசியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/fd79ac4e-925b-4c1f-8b1a-b18ee12d83d8/15655c59_6144_4ff9_bd7e_71b8296f8058.jfif" /><figcaption>ஜி.கே.மணி</figcaption></figure><p>பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மண்டல செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஏ.கே.மூர்த்தி தலைமை வகித்தார். இதில் ஜி.கே.மணி, சத்யபாமா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் சிலர், ``இப்போதுதான் அய்யாவைப் பற்றியும் பா.ம.க-வைப் பற்றியும் தமிழக அரசு புரிந்துகொண்டிருக்கிறது. 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி மாவட்டங்கள்தோறும் தொடர் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தோம். நம்மைப் பார்த்துப் பயந்து தேர்வை ரத்து செய்துவிட்டார்கள்.</p><p>இது நமக்குக் கிடைத்த வெற்றி. இதுபோல் பல வெற்றிகளைக் கண்டிருக்கிறார் அய்யா. அந்தவகையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அய்யாவையும் சின்னய்யாவையும் வெற்றிபெற வைத்து அரியணையில் அமர வைக்க வேண்டும். அதற்கான இடத்தில் நாம் இருக்கிறோம். இந்தமுறை கடுமையாக உழைக்கவேண்டும்" என்றனர். </p><p>அடுத்ததாகப் பேசத் தொடங்கிய மருத்துவர் ராமதாஸ். ``பா.ம.க என்ற கட்சியைத் தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை, ஒருமுறைகூட நமது கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்பது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2019-12/157f7c5b-1d10-409e-96cc-27a1e13e2f19/ramadoss.jpg" /><figcaption>ராமதாஸ்</figcaption></figure><p>2021-ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 70 முதல் 80 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்போம். அதில், எந்த மாற்றமும் இல்லை. அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். பா.ம.க ஆட்சி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் யாராவது இருந்தால், கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். திறமையான நிர்வாகிகள் கடினமாக உழைத்தால், கண்டிப்பாக ஆட்சியைப் பிடிப்போம். திட்டமிட்டு வேலை செய்தால் தமிழகத்தில் வேறு கட்சிகளுக்கு வேலை இல்லாத நிலை ஏற்படும். தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள பா.ம.க முதலாவது இடத்துக்கு வர வேண்டும். அதற்காக நீங்கள் உழைக்கவேண்டும்" என்றார்.</p><p>தொடர்ந்து பேசுகையில், ``ஒரு கட்சியில் திறமையான நிர்வாகிகள் இல்லாத காரணத்தினால் 400 கோடி செலவு செய்து பீகாரிலிருந்து (ஐபேக் நிறுவனமான பிரசாந்த் கிஷோர் என்ற) ஒருவரை இங்கு இறக்கியிருக்கிறார்கள். தி.மு.கவின் அரசியல் கார்ப்பரேட் வசம் சென்றுள்ளது.</p><aside><cite>பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.</cite>பா.ம.க தொடங்கி 32 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறை கூட நமது கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்பது வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.</aside><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/ace41f03-829c-49a4-bfe0-cdc8c9ca9c17/882ba194_9a72_40b5_bb68_d1d6f2388b3c.jfif" /><figcaption>பாமக நிறுவனர் ராமதாஸ்</figcaption></figure><p>கார்ப்பரேட்டால்தான் நமக்குப் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் நாம் தனியாகப் போட்டியிட்டு ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாதது கேவலமாக உள்ளது.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/6eabbf74-456f-4fba-858b-20a829bcf14d/15655c59_6144_4ff9_bd7e_71b8296f8058.jfif" /><figcaption>ஜி.கே.மணி</figcaption></figure><p>இந்த நிலையை மாற்ற வேண்டும். அதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பைக் கொடுக்கவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு லட்சம் வாக்காளர்களை நாம் கையில் வைத்திருக்கவேண்டும். அத்தோடு நமது கொள்ளை கோட்பாடுகளை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பா.ம.க நிர்வாகிகளுக்கான தணிக்கைக் கூட்டம் நடைபெறும். இந்தமுறை எப்படியாவது நாம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்று பேசி முடித்தார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/0e0c9bc4-ff9d-49a4-82f6-d53f50cc289e/33716dce_92b6_45ba_8c26_b21e35124edc.jfif" /><figcaption>பா.ம.க செயற்குழு கூட்டம்</figcaption></figure><p>அ.தி.மு.க கூட்டணியில் இருந்துகொண்டு மீண்டும் குழப்பத்தைத் தொடங்கியுள்ளது பா.ம.க. அதிக சீட்டுக்காக இந்த மோதல் போக்கை ஆரம்பித்துள்ளதா அல்லது உண்மையிலேயே கூட்டணியிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியும் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.</p>
]]>
</content:encoded>
</item>
<item>
<title>
`என் பேரன் மாதிரி நினைச்சு கூப்பிட்டேன்!’ - முதுமலை சர்ச்சைக்கு அமைச்சர் சீனிவாசன் விளக்கம்
</title>
<link>
https://www.vikatan.com/news/tamilnadu/tn-minister-dindugul-srinivasan-speaks-about-muthumalai-controversy
</link>
<comments>
https://www.vikatan.com/news/tamilnadu/tn-minister-dindugul-srinivasan-speaks-about-muthumalai-controversy#comments
</comments>
<guid isPermaLink="false">6d22479d-8f3f-4501-b425-4496816e2559</guid>
<pubDate>Thu, 06 Feb 2020 10:22:02 +0000</pubDate>
<atom:updated>2020-02-06T10:22:02.470Z</atom:updated>
<atom:author>
<atom:name>ராம் பிரசாத்</atom:name>
<atom:uri>/api/author/615999</atom:uri>
</atom:author>
<description/>
<media:keywords>srinivasan,tamilnadu,elephant</media:keywords>
<media:content height="800" medium="image" url="https://images.assettype.com/vikatan/2020-02/a2f5d806-6182-4dc5-8a08-e5698fe4dac6/srinivasan.jfif" width="1200">
<media:title type="html">
<![CDATA[ அமைச்சர் சீனிவாசன் ]]>
</media:title>
</media:content>
<media:thumbnail url="https://images.assettype.com/vikatan/2020-02/a2f5d806-6182-4dc5-8a08-e5698fe4dac6/srinivasan.jfif?w=280" width="280"/>
<category>Tamilnadu</category>
<content:encoded>
<![CDATA[
<p>முதுமலை தெப்பக்காட்டில் யானைகள் முகாமைத் தொடங்கி வைக்க, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்திருந்தார். இன்று காலை 9 மணிக்கு விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சரின் வருகைக்காக வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் காத்திருந்தனர். அமைச்சர் வருவதால் முகாமுக்கு வந்த யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்தன. இன்று காலை 9.40 மணிக்கு அமைச்சர் முகாமுக்கு வருகைதந்தார். அவரை வரவேற்ற அதிகாரிகள், அங்குள்ள கோயிலுக்கு அழைத்துவந்தனர்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/c1f8b059-cac0-4cc7-99f0-51fcc825ef50/Srinivasan_ministr.jfif" /><figcaption>அமைச்சர் சீனிவாசன்</figcaption></figure><p>கோயில் அருகே வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கு இருந்த இரண்டு சிறுவர்களை அழைத்தார். அமைச்சர் கூப்பிட்டதும் சிறுவர்கள் சற்று பயத்துடன் இருந்தனர். வனத்துறையினர், சிறுவர்களை அமைச்சர் அருகே செல்ல வைத்தனர். அமைச்சர் ஏதோ கேட்கப்போகிறார் என நினைத்திருந்த நிலையில், தன்னுடைய செருப்பின் பக்கிளை கழற்றிவிடு என சிறுவனிடம் கூறினார். சிறுவனும் பயத்துடன் கீழே அமர்ந்து, அமைச்சரின் செருப்பு பக்கிளைக் கழற்றினான்.</p><p>Also Read: <a href="https://www.vikatan.com/government-and-politics/controversy/minister-asks-tribal-boys-to-remove-his-slipper">`இங்க வா, வந்து செருப்ப கழட்டு!'- பழங்குடியின சிறுவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்</a></p><p>அமைச்சரின் வருகையையொட்டி செய்தியாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். அமைச்சரின் இந்தச் செயலை அவர்கள் வீடியோவாக எடுத்தனர். அங்கிருந்த அதிகாரிகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு, பத்திரிகையாளர்களைப் படம் எடுக்கவிடாமல் தடுத்தார். சிறுவன் பக்கிளைக் கழற்றிய பின்னர் அமைச்சர் கோயிலுக்குச் சென்றார்.</p><figure><img src="https://images.assettype.com/vikatan/2020-02/84c99cf4-29b7-4ed4-b371-485a6a195de4/Minister.jpg" /><figcaption>அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்</figcaption></figure><p>இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அமைச்சர் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். ``முகாமைத் தொடங்கி வைப்பதற்காக இன்று காலை மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரிகளுடன் சென்றோம். யானைகளுக்கு உணவு வழங்குவதற்கு முன்பாக கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றனர். அங்கு செல்லும்போது என்னுடைய `ஷூ லேஸை’ கழற்றவேண்டி இருந்தது. என்னுடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகளும் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் வயதானவர்களாக இருந்தார்கள். அப்போது, இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுவன், என்னுடைய பேரன் மாதிரி இருந்தான். `தம்பி, இந்த ஷூவைக் கழற்றிவிடு' என்றேன். இவ்வளவுதான்; இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. என்னுடைய பேரனாக நினைத்துதான் அந்தப் பையனை கூப்பிட்டு கழற்றிவிட உதவி செய்யக் கூறினேன்” என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இந்தச் சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தார்.</p>
]]>
</content:encoded>
</item>
</channel>
</rss>
Sign up for free to join this conversation on GitHub. Already have an account? Sign in to comment